சோரம் போன பேய் ஆசிரியர் சிவத் தம்பி (2)

ஈழத் தமிழர்கள் மத்தியில் இயல்பாக உருவாகியிருந்த ‘பேராசிரியர் சிவத்தம்பி’ என்ற பெரு விம்பம் அவராலேயே சுக்கு நூறாக உடைக்கப்பட்டு விட்டது. “ஒரு வார்த்தைக்கு மறு வார்த்தை” என்பது அறிஞர் பெருமைக்கு அழகல்ல. அதை விடவும்,

தான் சார்ந்த மக்களது துயரங்கள் சார்ந்த உணர்வுகளை………மறுதலித்துப் புகழ் தேடி ஓடுவதும் அவர்தம் நடத்தைக்கும் அழகல்ல. அதற்காக, தம் சார்ந்து அறங்களைக் கற்பித்துக் கொள்ளும் முயற்சியில் ‘மொழி வேறு, அரசியல் வேறு’ என்று நா பிறழ்வதும் அழகல்ல.

SivaThambi
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் தமிழ் மக்களின் கெளரவத்திற்குரியவராக இருந்தார். ஈழம் போற்றும் அறிஞர்களில் ஒருவர் என்ற புகழுடனும் இருந்தார். அது அவர் பெற்ற கல்வி சார்ந்தும், அவர் கொண்ட அறிவு சார்ந்தும் அவருக்குத் தமிழர்கள் வழங்கிய அங்கீகாரம் என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது.
ஆனால், அவர்தம் கொள்கை என்று அவரால் வழங்கப்படும் செவ்விகளின் துர்நாற்றம் அவரைச் சிறுமைப்படுத்தவே செய்கின்றது.

கல்வி வழங்கும் அங்கீகாரத்திலும் விட, பதவி கொடுத்த அங்கீகாரத்தையும் விட, மக்களால் வழங்கப்படும் அங்கீகாரமே நிலைத்து நிற்கக் கூடியது. நாம் வாழ்ந்த காலத்தில் நம்மோடு வாழ்ந்த பலருக்கு அத்தகைய அங்கீகாரங்களை தமிழ் மக்கள் வழங்கிக் கெளரவித்ததையும், அவர் காலத்தின் பின்னரும் அவர்கள் காலாகாலமாகக் கெளரவிக்கப்பட்டு வருவதையும் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் நன்றாகவே அறிவார்.

“மொழி வேறு, அரசியல் வேறு” என்ற பேராசிரியரின் புதிய தத்துவ உருவாக்கத்தை எப்மால் புரிந்து கொள்ள முடியாமலேயே உள்ளது. ‘அரசியலற்ற மொழி’ என்பது உயிரற்ற பிணம் போன்றது. மனிதன் உருவான பின்னர், அவன் தன்னைச் சுற்றிப் புரிந்து கொள்வதை அடுத்தவருடன் பகிர்ந்து கொள்வதற்காகவே மொழிகள் உருவாகின. அந்த மொழிகள் உருவாக முன்பாகவே அவனை அரசியல் ஆக்கிரமித்துக் கொண்டது. தான், தனது குழு, அதன் தேவைகள், அவர்களது பாதுகாப்பு என அவனை அரசியல் கட்டிப்போட்டே இருந்தது. அந்த உணர்வுகள் அவனை ஆக்கிரமிக்காமல் இருந்திருந்தால் அவனுக்கு மொழி தேவைப்பட்டிருக்காது. ஆயிரம் ஆயிரம் வருட காலத்திற்கு முந்தைய மனிதனின் அறிவு கூட தற்போது பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுக்குப் புரியாமல் போனது எப்படி என்பது புரியவில்லை.

தாம் சார்ந்த மொழிக்காகவும், தான் வாழ்ந்த மண்ணுக்காகவும் மனிதன் திறந்த போர்க்களங்கள் எத்தனை? உயிர் ஈந்த மாமனிதர்கள் எத்தனை? மண்ணுக்காகவும் மொழிக்காகவும் நிகழ்ந்த போர்கள்தான் நிலங்களைப் பிரித்து எல்லைகளை உருவாக்கியது. நாடுகள் உருவாகியது. பேராசிரியர் சிவத்தம்பி அவர்களைப்போல் கற்றறிந்த மனிதர்கள் பலர் தத்துவம் கூறியதால்தான் தமிழர்கள் நாடற்றவர்களாகப் போயிருக்கக்கூடும் என்றே எண்ணத் தோன்றுகிறது.

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் அரசியலற்ற செம்மொழி நடாத்தப்படுவதாக உணரும் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் அவசரமாகச் செம்மொழி மாநாடு அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது எதற்காக என்று விளக்கிக் கூறினால் எம் போன்றவர்கள் புரிந்து கொள்ள முடியும்.

ஒன்பதாவது ‘உலகத் தமிழாராய்ச்சி மாநாடு’ என்று கலைஞர் கருணாநிதி அவர்கள் முன்மொழிந்த அதி அவசரத்தைத் தமிழ்ச் சான்றோர் பலரும் ஏற்றுக்கொள்ளத் தவறிய காரணத்தால், அந்த மாநாடு ‘உலகத் தமிழ் செம்மொழி மாநாடு’ என்ற புது நாமத்தோடு மீண்டும் அரங்கேற்றப்பட உள்ளது. அந்த நாயனத்திற்குப் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் ஒத்தூதக் கிளம்பிவிட்டார் என்பது வேடிக்கையான வேதனை.

ஈழத் தமிழரான தவத்திரு தனிநாயகம் அடிகளாரது எண்ணத்தில் உருவான தமிழ் அவா 1966-ம் ஆண்டில் முதலாவது ‘உலகத் தமிழாராய்ச்சி மாநாடு’ என மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் அரங்கேற்றம் பெற்றது. 1995-ம் ஆண்டு இதன் எட்டாவது மாநாடு தஞ்சாவூரில் நடாத்தப்பட்டது. அந்த மாநாட்டில் பேராசிரியர் சிவத்தம்பி உட்பட்ட ஈழத்து அறிஞர்கள் சிலர் அப்போதைய தமிழக முதல்வரால் விமானநிலையத்தில் வைத்தே திருப்பி அனுப்பப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதனால் நாம் எல்லோரும் மனம் கலங்கினோம். பேராசிரியர் சிவத்தம்பிக்கு நேர்ந்த அவமானம் எங்களுக்கு நேர்ந்ததாகவே என் போன்றோரால் உணரப்பட்டது.

ஆட்சிக்கு வந்து 14 வருடங்களாகத் தமிழுக்கு விழா எடுக்காமல், தனக்கு மட்டுமே விழா எடுத்த கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு இப்போது என்ன அவசரம் வந்தது இப்படி ஒரு மாநாடு நடாத்துவதற்கு? அதைத்தான் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் ‘மொழி வேறு, அரசியல் வேறு’ என்று சான்றிதழ் வழங்கித் தன்னையும் இணைத்துக் கொள்ள முயல்கிறாரோ? அல்லது பேராசிரியர் சிவத்தம்பி கலைஞருக்காகப் புதிய கதை வசனம் எழுதுகிறாரா?

“கட்டுமரமாகக் கடலில் மிதப்பேன், அதில் ஏறிக் கரை சேரலாம்” என்ற கலைஞர் கருணாநிதியின் சின்னத்திரை வசனத்தை பேராசிரியர் சிவத்தம்பியும் நம்பிவிட்டாரா? இந்தியாவின் மூன்றாவது பணக்கார முதல்வராக உயர்ந்துள்ள தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களது கட்டுமரக் கதையிலும் அவரது குடும்பத்தினர் மட்டுமே கரை சேர்க்கப்பட்டுள்ளார்கள். அதைப்பற்றிச் சிந்திக்க வேண்டியவர்கள் தமிழக மக்களே தவிர நாம் அல்ல.

‘தமிழர்’ என்ற குறியீடு எம்மையும் அடக்குகின்ற காரணத்தால் தமிழ் சார்ந்து எவர் மேற்கொள்ளும் முயற்சியினையும் விமர்சிக்கும் உரிமை எமக்கு உண்டு.

முள்ளிவாய்க்கால் இறுதிக் காலத்திலும் உயிருக்காகப் போராடிய தமிழ் மக்களைக் காப்பாற்றத் தவறிய, தமிழீழ மக்களின் அவலங்களை சகோதர யுத்தம் என்ற தத்துவத்தினுள் மறைத்த, மூன்று இலட்சம் வன்னி மக்களை முள்வேலி முகாமுக்குள் முடக்கி அவலத்தைக் கொடுத்த ராஜபக்ஷ சகோதரர்களுக்கு பரிசுப் பொருட்களும், பட்டுச்சால்வையும் கொடுத்து அனுப்பிய தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களது வரலாற்றுத் துரோகங்களை பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் தேவையின் நிமித்தம் மன்னித்தாலும் ஈழத் தமிழர்கள் எப்போதுமே மன்னிக்க மாட்டார்கள்.

நன்றி: ஈழநாடு (பாரிஸ்)

வெளிநாட்டு பணம் எம் சமூகத்தில் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற பாதிப்புக்கள்

இலங்கையில் மனித நேயமிக்கவர்கள் மீண்டும் மக்கள் முன் வருக.

பம்பலபிட்டடியில் கடந்த மாத இறுதி பகுதியில் கொல்லப்பட்ட பாலரட்ணம் சிவகுமார் (வயது 26) தொடர்பாக இலங்கை வாழ் மக்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்விடயத்தை மனித உரிமை மீறல் என்று பார்ப்பதா? இன அழிப்பு என்ற ரீதியில் பார்ப்பதா?

எப்படித்தான் பார்த்தாலும் எல்லாம் ஒன்றே. குறிக்கப்பட்ட கொலைச் சம்பவத்தை மக்கள் பலரும் நேரில் கண்டதுடன், வீடியோ பதிவு செய்து ஊடகங்கள் மூலம் பொது மக்கள் பார்வைக்கும் முன்வைக்கப்பட்டது. குறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மக்கள் (ஸ்ரீலங்காவில்) பலரும் தமது கருத்துக்களை முன்வைக்கையில் இது போன்ற மனித நாகரீகமற்ற சம்பவத்திற்காகா கவலைப்படுகின்றோம்,வெக்கமடைகின்றோம், சட்டம் நீதி ஒழுங்கு இல்லையா?, பொலிஸாரின் கடமை என்பது இதுதானா?, இரக்கமே இல்லையா? என பல்வேறான தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

இது போன்றொரு சம்பவம் 2005 நவம்பர் 16ம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது திருட்டுச் சம்பவத்தில் அகப்பட்ட மைக்னேசி தினேஷ் (வயது 20) என்பவர் யாழ் இந்துக் கல்லுரி மைதானத்தில் கூடைப்பந்தாட்ட கம்பத்தில் கட்டப்பட்டு கூடிநின்றவர்களால் கும்பிட கும்பிட அடித்துக் கொல்லப்பட்டார்.

user posted image

இது போன்றொரு இன்னொரு யாழ் சண்டிலிப்பாயில் இடம் பெற்றது குறிப்பிட்ட நபர் ஒரு மனநலம் பாதிக்கப்ட்டவர் அவர் கொல்லப்பட்டதற்கான காரணம் இது வரை தெரியாது, குறிப்பிட்ட நபரை இரவு வேளை தூக்கிச் சென்ற சிலர் கடுமையாக தாக்கி கொன்றதன் பின்னர் தற்கொலை செய்தவர் போல சடலத்தை மரத்தில் கட்டி தொங்கவிட்டனர். இது போன்ற வேறு பல சம்பவங்களும் இடம் பெற்றிருக்கலாம்.

யுத்தத்தை காரணம் காட்டி மனித பண்புகள் குழிதோண்டி புதைக்ப்பட்டுள்ள இலங்கையில் இன்னும் எத்தனையே விடயங்கள் மண்ணோடு மண்ணாகிவிட்டன. யாழில் நடந்த தினேஷ்சின் கொலைச் சம்பவம் மக்களால் தண்டனை வழங்கப்படுவதாக கலாச்சாரம் பேணும் குழுவினால் பதாகையும் வைக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த பலரும் கிரிக்கட் விக்கட்டுகளாலும், பற்றினாலும், வேறு சிலர் செயின் மற்றும் தடியினாலும் அடித்துக் கொண்டனர்,

இதனை இன அழிப்பு என்ற பட்டியலில் சேர்ப்பதா? மனித உரிமை மீறல் பட்டியலில் சேர்ப்பதா?

யாழில் புதிதாய் திருடப் பழகியவர்களும் உண்டு, ஒரு தடவை திருட்டு சம்பவம் ஒன்றில் சந்தேகிக்கப்டும் ஒருவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார், அவரிடம் கேட்டேன் ‘ஏன் திருடினீர்கள் உழைத்து தின்னலாம் தானே” என்று. அதற்கு கூறினார் உழைப்பில்லை கையில் காசு ஒன்றும் இல்லை, சாமான்கள் நினைச்சுப் பார்க்க முடியாத விலை, நான் நகை திருடவில்லை அரிசியைத்தான் எடுத்தேன் என்றார்.

இவ் உண்மைச் சம்பவத்தை கூறி திருடர்களை ஊக்குவிக்கவில்லை மாறாக நாம் கற்றுக் கொள்வதற்கும் கையாள்வதற்கும் நிறையவே உள்ளது என்பதை முன்வைக்கின்றேன்.

வடக்கு கிழக்கில் வெறுமனே திருட்டு மட்டுமன்றி பல உயிர்பறிப்பு மற்றும் மானபங்க சம்பவங்களும் நிறைவேறியதை மறுக்கவுமில்லை. பம்பலப்பிட்டியில் கொல்லப்பட்டவர் தமிழ் பெயரை உடையவராக இருந்தாலும் அவர் பேசுவது சிங்கள மொழியே.

குறிப்பிட்ட நபரை தமிழன் என்று தெரிந்து தான் கொன்றார்கள் என்று அர்த்தப்படுத்துவது எவ்வளவு தூரம் சரியானது என்பதை சிந்திக்க வேண்டும். எது எப்படியிருப்பினும் விலங்கிலும் கேவலமான ஜாதி இலங்கையில் உருவாகி இருப்பதை இச் சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது. இச் சம்பவம் மக்கள் முன் பார்வைக்கு வைக்ப்பட்டதினால் தான் அதற்கு பல்வேறு எதிர்ப்புக்களை மக்கள் வெளியிட்டுள்ளனர்.

இதே போன்று தான் வன்னியில் கரு முதற்கொண்டு முதியவர் வரை தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பதை இலங்கை வாழ் மக்கள் அறிந்திருந்தால் ஜனாபதி மகிந்த ராஜபக்ஷவிற்கும், சரத்பொன்சேகாவிற்கும், கோட்டபாயவிற்கும் எதிராக குரல் கொடுத்திருப்பர். ஊடக அடக்கு முறையை இன்று வரை கையாள்வதால் தம்மைச் சுற்றி என்ன நிகழ்கின்றது என்பதை அறியாத மக்களாக உள்ளதுடன், கேட்டவைகளை மட்டும் நம்பிக்கொண்டு தம்மை அறியாமலே வன்முறையாளர்களுக்கு பால்வார்க்கின்றனர்.

நேர்மையான ஊடகம் இலங்கை மக்களுக்கு கிடைத்திருந்தால் இறுதியாக நிகழ்ந்ததாக கூறப்பட்ட யுத்தத்திற்கு பொரும்பான்மையான மக்கள் ஒத்துழைப்பு வழங்கியிழுக்க மாட்டார்கள், அத்துடன் ஏற்கனவே காணாமல் போன அல்லது கடத்டதப்பட்டவர்களுக்கான பதிலை கூறுமாறு நிர்ப்பதந்தித்திருப்பர். சிவகுமாரின் கொலைச் சம்பவம் மக்களுக்கு முன்வைக்கப்பட்டதன் மூலம் மக்கள் வன்முறையை ஆதரிக்கவில்லை என்பதை தெளிவாக வெளிப்படுத்டதியுள்ளனர். இலங்கையின் மருத்துவ மனைகளிலோ அல்லது பள்ளிகளிலோ கிடைக்காத மனித நேயம் எவ்வாறு இராணுவத்துக்குள்ளும் பொலிஸிக்குள்ளும் இருக்கும் என்பதை எதிர்பார்ப்பது.

இலங்கையில் மனித நேயம் படைத்தவர்கள் மீது சாயம் பூசி ஒதுக்கப்ட்டுள்ளனர். அவர்களை மீண்டும் மக்கள் முன்னிலையில் கொண்டுவருவதற்கு சர்வதேசம் தொடர் அழுத்தங்களை ஸ்ரீலங்காவிற்கு வழங்க வேண்டும். இவ்வாறான சம்பவங்களை வெறுமனே ‘தமிழ் சிங்களம்” என பிரித்துப் பார்க்கக் கூடாது இது எமது நாட்டில் தொடர்கதையான கேவலமான பண்புகள்.

சாதாரணமாக பேரூந்தில் பச்சப்பாலகருடன் பயணிக்கும் தாய்மாருக்கு கூட இருக்கை கொடுக்க மறுக்கும் தமிழ் மனிதபிறவிகள் பலபோருடன் தர்க்கித்ததுண்டு. ஒவ்வொரு சிறுவிடயத்திலிருந்தும் பிறக்கும் மனிதப் பண்புகள் எம்மிடம் அழிவடைந்து கொண்டிருக்கின்றது. ஆகவே இன்னும் பல சம்பவங்களுக்கு வெளிநாட்டு பணம் காரணம் என்பதை பல இடங்களிலும் உறுதிப்படுத்திக் கொண்டேன்.

வெளிநாட்டு பணம் எம் சமூகத்தில் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற பாதிப்புக்களை பல பக்கங்களில் எழுத முடியும் இப்போது ஒரு உதாரணம்.

  • அண்மையில் முகாம்களில் எம்மக்கள் பலரும் துன்பங்களை அனுபவித்து வந்தனர், எனினும் ஒரு சிலர் பல லட்சங்களை அள்ளிக்கொடுத்து தம் உறவுகளை முகாமிலிருந்து மீட்டனர், பணம் இல்லாதவன் என்ன செய்வது? எமது மக்கள் அவலத்திலிருந்து நிதந்தரமாக விடுபட வேண்டும் என்பதே எமது விருப்பம். அதற்காகத்தானே இவ்வளவு தியாகங்களையும்(பணத்தையும்) செய்து வந்தீர்கள்.

ஒட்டுமொத்த மக்களும் விடுபடவேண்டும் அதற்கு நாம் ஒன்றுபடுவோம் என ஏன் எம் இனத்துக்கு சிந்திக்க முடியாதுள்ளது? இங்கே நாம் செய்வது இன அழிப்பு இல்லையா? இவ்வாறு தான் ஒவ்வொரு விடயத்திலும். எனவே அரசு தரப்பு செய்யும் தவறுகள் அல்லது பேரினவாதிகள் செய்யும் தவறுகளுடன் எம் தவறுகளையும் எதிர்த்து போராட வேண்டும்.

தற்போது இலங்கையில் நிகழும் ஒவ்வொரு சம்பவங்களையும் ஆழமாகவும் நீண்டநோக்கிலும் பார்த்து விவேகமான செயற்பாட்டில் ஈடுபடுவது ஒவ்வருதமிழனுக்கும் உள்ள பாரிய கடமையாகும். வேதனையை அனுபவித்த இனம் தான் அதன் வலியை உணரமுடியும் என்ற அடிப்படையில் மனித நேயம் எங்கெல்லாம் மாசுறுகின்றதோ அப்போதெல்லாம் குரல் கொடுக்கும் இனமான தமிழ் இனம் சர்வதேசத்தில் தென்பட வேண்டும். அப்போது தான் எம்மினத்தின் துயர் நீங்கும்.

வின்சென் ஜெயம்

இருக்கிறான் தலைவன் நீ நம்படா நம்பு! - காசி ஆனந்தன்

thalivar-1

இருக்கிறான் தலைவன்
பிரபாகரன்
நீ நம்படா நம்பு!

ஈழத் தமிழினம் வாழப்
போர்க்களம் கிளம்படா கிளம்பு!

தன் மானத் தமிழரின்
தலைமையில் போர் தொடக்கு!

சிங்கள வெறியன்
திமிர் அடக்கு!

ஈழம் தமிழர்கள் தாய்மண்
இல்லையாம் மகிந்தா குதிக்கிறான்!

இறந்து விழுந்த நம் தமிழர்
பிணங்களை காலால் மிதிக்கிறான்!

காலம் அழைக்குது!

ஈழம் அழைக்குது!

கடலைத் தாண்டுவோம்!

களத்திலே ஈழ நிலத்திலே
நாமும் நெருப்பைத் தூண்டுவோம்!

சிறுத்தை படை ஈழப் புலிகள் படை
இரண்டும் ஒன்றுதான் கிளம்பு!

சினந்து புயல் நெஞ்சில் சுமந்து
கிளம்படா!சிதறட்டும் கொழும்பு!

வெறுத்து வாடா உன் உயிரை
நெஞ்சிலே புயலைத் தூக்குவோம்!

வெறியர் சிங்களர் கொடியர்
சூழ்ச்சிகள் சிதறத் தாக்குவோம்!

உலகில் என்றைக்கும் புலிகள்
ஓய்ந்ததாய் வரலாறில்லையே!

உறுமி எழும்கடல்
அலைகள் ஓயுமா?

இல்லை!
இல்லையே!
கலகம் இல்லாமல்
உலகம் திருந்தாது!

களப்போர் ஆடுவோம்!
கயவர் சிங்களர் படையை
வென்று நாம் வாகை சூடுவோம்!

பன்றி காய்ச்சலில் பயன் பெறுவது முன்னாள் சர்வாதிகாரியின் செயலாளர்

Find out who is benefited by Swine flu!






















பேராசிரியர் சிவத்தம்பி விவகாரம் ???

இலங்கையின் தமிழ் நாளிதழ்களிலும் இலங்கைத் தமிழர் சார்பான இணையத்தளங்களிலும், தமிழக நாளிதழ்கள் மற் றும் சஞ்சிகைகளிலும் பரபரப்பாக அண்மைக்காலத்தில் பேசப் பட்டார் பேராசிரியர் கா.சிவத்தம்பி. தமிழகத்தில் அடுத்த வருடத்தில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி நடத்த உத் தேசித்திருக்கும் உலக செம்மொழி மாநாட்டில் அவர் கலந்து கொள்வாரா, கலந்துகொள்ள மாட்டாரா என்ற விடயத்தை ஒட்டி எதிரும், புதிருமான பல கருத்துகளும், விமர்சனங்க ளும், விளக்கங்களும், வியாக்கியானங்களும் ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

இவற்றையெல்லாம் தூக் கியடிக்குமாற் போல ஒன்றுக்கொன்று முரணான அல்லது ஒன்றுக்கொன்று வேறுபட்ட சார்பு நிலையுடைய தகவல்கள் பேராசிரியர் சிவத்தம்பி பக்கத்திலிருந்தே வெளியாகி, பலரையும் வியப்பில் ஆழ்த்தவும் தவறவில்லை.

இவற்றையெல்லாம் வாசித்தறிந்த தமிழ் கூறும் நல்லுல கின் பிரமுகர் ஒருவர் தமது தலையைப் பிய்த்தபடி “குழப்பத் தின் குளறுபடியின் வடிவம்தானோ பேராசிரியர் சிவத் தம்பி?’” என்று பலரையும் பார்த்து வினாவும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளது.

இந்த விவகாரத்தை ஒட்டி அலட்டிக் கொள்ளாமல் அதிக செய்திகளை ஒதுக்காமல் “உதயன்’”நாளிதழ் அதீத மௌனம் காப்பது ஏன் என்ற கேள்வியும் கூட வாசகர்களிடமிருந்து வரத் தவறவில்லை. ஆகவே இந்த விடயத்தை ஒட்டி நமது கருத்தை முன்வைப்பது தவிர்க்க முடியாததாகின்றது.

பேராசிரியர் சிவத்தம்பி மூத்த தமிழ் அறிஞர். நமது இலங் கைத் தமிழர் சமூகம் உட்பட அனைத்துத் தரப்பினரதும் மதிப் புக்கும் மரியாதைக்கும் உரியவர். இலங்கை விவகாரங்களை ஒட்டி காலத்துக்குக் காலம் அவர் வெளியிட்ட சில கருத் துகள் அவ்வப்போது அரசியல் ரீதியான சர்ச்சைகளை ஏற் படுத்தி வந்திருந்தபோதிலும் கூட, இலங்கைத் தமிழர் தரப் பில் அரசியல் நிலைப்பாடுகளில் நேரெதிர் கருத்துக் கொண்ட அணிகள் கூட ஒரே சமயத்தில் மதிப்புக்குரிய மாண்புடை யவராக அவரைக் கருதி கௌரவிக்கத் தவறவில்லை என் பது அவருக்குரிய சிறப்பு.

1980 களின் நடுப்பகுதியில் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெய வர்த்தனா தலைமையிலான இலங்கை அரசின் படைகளுக் கும் அப்போது தமிழர்களின் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந் திப் போராடிய பல்வேறு தமிழர் இயக்கங்களுக்கும் இடை யில் யுத்தநிறுத்தம் ஒன்று அறிவிக்கப்பட்டபோது, அத னைக் களத்தில் நேரடியாகக் கண்காணிக்கும் கண்காணிப் பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படும் அளவுக்கு மதிப்பாய்ந்த பிரமுகராக எல்லோராலும் கணிக்கப்பட்டவர் பேராசிரியர் சிவத்தம்பி என்பதும் மறக்கக்கூடியதல்ல.

இலங்கைத் தமிழர்கள் மத்தியில் தமிழ்த் துறையில் போற் றப்படும் ஒரு பேரறிஞரான பேராசிரியர் சிவத்தம்பிக்கு இந்த விடயங்களில் இரண்டு தளங்களிலே பொறுப்பும், கடமையும், கடப்பாடும் இருப்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

ஒரு தளத்தில், தம்மைப் பொறுத்தவரை அவர் ஒரு கற் றறிந்த புலமையாளன். தனிப்பட்ட முறையில் அவருக்கென ஒரு வாழ்வு, சிந்தனை, குடும்பம், போக்கு என்பன உள் ளன. அவற்றின் அடிப்படையில் அவர் சிந்திப்பதும், முடி வெடுப்பதும், செயற்படுவதும் வேறு.

மற்றொரு தளத்திலே அவர் இலங்கைத் தமிழ் மக்க ளின் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது தெரிவு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதியாக இல்லாவிட்டாலும் கூட கற்றறிந்த இலங் கைத் தமிழ் சமூகத்தின் உயிர்வாழும் கலங்கரை விளக்க மாக விளங்குவதன் மூலம், அந்தப் படித்த சமூகத்தின் ஒரு சுட்டி யாகவும், குறியீடாகவும், பிரதிநிதியாகவும், இலக்கண மாகவும் கூட அவர் திகழ்கின்றார்.
அதாவது, பேராசிரியர் தன்னளவில் தனி மனிதனாக இருந் தாலும், அவர் தான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இலங்கைத் தமிழ் அறிஞர் சமூகத்தின் ஒன்றுபட்ட குறியீ டாகவும் விளங்குகின்றார் என்பது வெளிப்படை. இந்த இரண் டாவது தள நிலையில் வைத்து அவர் நோக்கப் படுகின்றமையால்தான் இந்த உலகத் தமிழ் மாநாட்டில் அவரின் பங்குபற்றுதல் என்பது
சர்ச்சைக்குரியதாகின்றது.

இதற்கு முன்னர், தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த சமயம் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட் டுக்கு சென்றிருந்த பேராசிரியர் சிவத்தம்பி, சென்னை விமான நிலையத்தில் வைத்தே திருப்பி அனுப்பப்பட்டு அகௌ ரவப்படுத்தப்பட்டார்.

ஆனால் அதன் பின்னர் பதவிக்கு வந்த தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, முன்னைய நிகழ்வுக்கு பிராயச்சித் தம் செய்யும் வகையில் பேராசிரியர் சிவத்தம்பியை அழைத்துத் தமது மாநில அரசு மூலம் வி.க.விருது வழங்கி, இந்தியப் பணத் தில் ஒரு லட்சம் ரூபா வெகுமதியும் அளித்து கௌரவித்தார்.
ஜெயலலிதா செய்த அகௌரவமும், கலைஞர் கருணா நிதி தமக்கு முன்னர் செய்த கௌரவம் எனப் பேராசிரியர் சிவத்தம்பி கருதும் வி.க.விருதும், இப்போது அவர் நடத்த உத்தேசித்துள்ள உலக செம்மொழி மாநாட்டில் தமக்கு வழங்க அவர் முன்வந்துள்ள உயரிய இடமும், தனிப்பட்ட முறையில் பேராசிரியர் சிவத்தம்பி என்ற தனி மனிதனுக்கு அறிஞனுக்கு உரியவையா ? அல்லது இலங்கைத் தமிழினத்தின் அறிவுசார் சமூகத்தின் ஒட்டுமொத்தக் குறியீடாக விளங்கும் பேராசிரியர் சிவத்தம்பி என்ற தகைமையாள னுக்கு வழங்கப்படுபவையா? இதைத் தீர்மானிக்க வேண் டியவர் பேராசிரியர் சிவத்தம்பிதான். வேறெவரும் அல்லர்.

இலங்கைத் தமிழர்களின் ஒட்டுமொத்த கற்றறிந்த சமூகத்தின் பிரதிநிதியாக அவர் தம்மைக் கருதுவாராயின், தற்போதைய கள நிலைமை விடயங்களில் தமது சமூகத் தின் கருத்து நிலைப்பாட்டை உள்வாங்கி, அதனடிப் படையில் இந்த மாநாட்டைப் புறக்கணிக்கும் தீர்மானத் துக்கு அவர் தாமாகவே வருவார்; வரவேண்டும்.

அப்படியல்லாமல், தம்மைத் தனிப்பட்ட மனிதனாகவும், தமக்கான அழைப்பு தமது அறிவுத் தகைமைக்கே உரிய விசேட விவகாரமே என்றும் அவர் கருதுவாரானால், அதன் அடிப் படையில் அந்த மாநாட்டிலும் அதையொட்டிய செயற்பாடுகளி லும் முழு அளவில் பங்குபற்றக்கூட அவர் தீர்மா னிக்கலாம்.
அப்படித் தம்மைத் தனிப்பட்ட மனிதனாகக் கருதி, இவ்விடயத்தில் அதனடிப்படையில் ஒரு தீர்மானத்தை அவர் எடுப்பாராயின்,

இலங்கைத் தமிழர்கள் சமூகத்தின் ஒட்டுமொத்த நிலைப்பாட்டின் பின்புலத்திலிருந்து நாம் எப்படி அதைக் குறை கூற முடியும்?

அது அவரது தனிப்பட்ட விவகாரம் என்று கருதிப் பார்த்திருப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

எனவே, தாம் தனி மனிதரா அல்லது மூத்த பேரறிஞர் என்ற வகையில், கற்றறிந்த இலங்கைத் தமிழர் சமூகத்தின் கட்டமைப்பைப் பிரதிபலிக்கும் ஒரு சின்னமா என்பதை அவர்தான் தீர்மானித்து அதன் அடிப்படையில் முடிவுசெய்ய வேண்டும்.

நன்றி: உதயன் நாளிதழ்

தமிழகத்தில் உள்ள நாங்களும் கம்பி வேலிகளுக்கு இடையில்தான் வசிக்கிறோம் ‐ தமிழக அகதி முகாம்களின் அவலம்

தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதி முகாம்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பிரச்சனைகள் இருப்பதாகவும். அவைகளைக் களையவும். அகதிகளின் வாழ்வை மேம்படுத்தவும் 12 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியிருப்பதாகவும் அண்மையில் அறிவித்தார். தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி.

refugee_india4இந்நிலையில் தமிழக அகதி முகாம்களின் அவல நிலைக்கு எடுத்துக் காட்டாய் உள்ளது சேலம் மாவட்ட அகதி முகாம். சேலம் மாவட்டத்தில் வசிக்கும் இலங்கை அகதிகளின் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகிவருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக போதுமான அடிப்படை வசதிகள் இல்லாத முகாம்களில் வசிக்கும் இவர்களது நிலை பரிதாபகரமாக உள்ளது. சேலம் மாவட்டத்தில் செந்தாரப்பட்டி தம்மம்பட்டி நாகியம்பட்டி அத்திக்காட்டனூர் குருக்கப்பட்டி பவளத்தானூர் சித்தர் கோயில் ஆகிய பகுதிகளில் உள்ள 8 முகாம்களில் 972 குடும்பங்களைச் சேர்ந்த 3746 இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வந்தவர்கள்.

கடந்த பல ஆண்டுகளாக கண்டு கொள்ளப்படாமல் இருந்து வந்த இலங்கைத் தமிழ் அகதிகளின் நிலை அமைச்சர்களின் ஆய்வையொட்டி தெரியவந்துள்ளது. இங்கேயும் கம்பி வேலிக்குள்தான்… இலங்கையில் உள்ள முகாம்களில் மட்டும்தான் கம்பி வேலிக்குள் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். ஆனால் தமிழகத்தில் உள்ள நாங்களும் கம்பி வேலிகளுக்கு இடையில்தான் வசிக்கிறோம் என்கின்றனர் அத்திக்காட்டனூர் முகாம் மக்கள். இந்த முகாமில் 55 குடும்பங்களைச் சேர்ந்த 116 ஆண்கள் 93 பெண்கள் உள்ளிட்ட 209 பேர் வசிக்கின்றனர். இந்த முகாமின் நிலை குறித்து வவுனியாவில் இருந்து 1987‐ல் அகதியாக வந்து குடியேறிய ராசு (68) கிளிநொச்சியில் இருந்து வந்த ரமேஷ் (32) ஆகியோர் கூறினர்.

இந்த முகாமில் உள்ள பெண்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை கழிப்பிட வசதியே கிடையாது. 1987‐ல் நாங்கள் வந்தபோது கட்டப்பட்ட தாற்காலிக கழிப்பிடங்கள் சில ஆண்டுகளிலேயே பழுதடைந்து உபயோகமற்றுப் போயின. அதன் பிறகு அந்த நிலத்தை முகாமிற்கு அருகில் உள்ள விவசாயிகள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர்.

இப்பகுதியில் பெண்களுக்கு மட்டுமாவது கழிப்பிடம் வேண்டும் என்று அரசுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.33 ஆயிரம் செலுத்தி நாங்களே பெண்களுக்காக கழிப்பிடம் கட்டியுள்ளோம். இந்த முகாமுக்கு மட்டுமல்லாது அருகிலுள்ள பவளத்தானூர் குருக்கப்பட்டி முகாம்களுக்கும் போதுமான மின்சார வசதி கிடையாது. குறைந்த அழுத்த மின்சாரம் மட்டுமே வழங்கப்படுவதால் மின் விளக்குகள் கூட சரிவர எரிவதில்லை. இதனால் குழந்தைகள் படிக்க முடிவதில்லை. மேலும் இங்கு சாக்கடை வசதி இல்லாததால் கழிவு நீரை சாலையிலும் அருகிலுள்ள விவசாய நிலத்திலும் வெளியேற்றி வருகிறோம். இதனால் முகாமில் இருப்பவர்களுக்கும் சுற்றுப்புற விவசாயிகளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது.

பழுதடைந்த வீடுகள்: மேலும் இங்குள்ள தாற்காலிக வீடுகள் கட்டப்பட்டு சுமார் 20 ஆண்டுகள் ஆகின்றன. இதனால் ஓடுகள் அனைத்தும் பழுதடைந்தும், சுவர்கள் எப்போது வேண்டுமானாலும் விழக்கூடும் என்ற நிலையில் உள்ளன. எங்களுக்கு வழங்கப்பட்ட வாகன ஓட்டுநர் உரிமத்தை கியூ பிரிவு போலீஸôர் பறித்துக் கொண்டுள்ளனர். அவற்றை உடனடியாக திருப்பித் தர வேண்டும். கடந்த ஓராண்டுக்கு முன்பு இப்பகுதிக்கு வந்த மாவட்ட ஆட்சியரிடம் குடிநீர், கழிப்பிடம், கான்கிரீட் சாலை, மின்சார வசதி கோரி மனு அளித்தோம். ஆனால் குடிநீருக்கு மட்டும் ஒரு குழாய் அமைத்துக் கொடுத்தனர். அதிலும் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்றனர்.

அகதிகள் முகாம்களில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் மண் வெட்டுவது, கட்டட வேலை போன்ற கூலி வேலைகளை செய்து வருகின்றனர். இவர்களது குழந்தைகளை அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர். அத்திக்காட்டனூர் முகாமைச் சேர்ந்த கெனட் நிரோமன் (19) பிளஸ்‐2 முடித்து சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிஸியோதெரபி படிப்பில் சேர்ந்துள்ளார்.

இவரது தாய் அற்புதமேரி தாயகத்தில் எங்கு இருக்கிறார் என்று தெரியாத நிலையில் தந்தை செபஸ்டினுடன் (60) வசிக்கிறார். செபஸ்டின் கூலி வேலையில் கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டு அவரை படிக்க வைத்து வந்த நிலையில், வயது முதிர்ச்சி காரணமாக செபஸ்டின் வேலைக்குச் செல்ல முடியவில்லை. இதனால், கல்லூரிக் கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கிறார் நிரோமன். இவர்கள் நிலை இப்படி என்றால் இதே முகாமைச் சேர்ந்த சிவரஞ்சனியின் (32) நிலை பரிதாபத்துக்குரியது. இவரது கணவர் சுரேஷ் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், விபத்தில் கை ஊனமுற்ற ஜேம்ஸ் (17), 6‐ம் வகுப்பு படிக்கும் ஐசக்ராஜ் (12), 4‐வது படிக்கும் சிந்துஜா (9) ஆகியோருடன் வசித்து வருகிறார் சிவரஞ்சனி.

சித்தாள் வேலைக்குச் சென்று குழந்தைகளை படிக்க வைக்கும் இவரது இரண்டாவது மகன் ஐசக்ராஜூக்கு வயிற்றில் புற்று நோய் இருப்பது கடந்த ஒராண்டுக்கு முன்பு தெரியவந்துள்ளது. இதற்காக ரூ.70 ஆயிரம் செலவழித்து இரண்டு முறை அறுவைச் சிகிச்சை செய்துள்ள நிலையில் மேலும் ஒரு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் கூலி வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தி வரும் தன்னால் அவ்வளவு செலவு செய்ய முடியாது. எனவே தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை எங்களுக்கும் விரிவுபடுத்தி என் மகனைக் காப்பாற்ற வேண்டும் என்றார் சிவரஞ்சனி. இதே கோரிக்கையை வலியுறுத்திய இதய நோயாளி சுசீலா (38), எங்களது இழிநிலையை பார்வையிட்டதுடன் நின்றுவிடாமல் நல்வாழ்வுக்கு உதவி செய்ய வேண்டும் என்றார் ஏக்கத்துடன்.

சிறிலங்கா பொதுவுடமை நாடுகள் அமைப்பில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்று பிபிசிக்கு வாக்களியுங்கள்

Should Sri Lanka be suspended from the Commonwealth?

Should Sri Lanka be suspended from the Commonwealth?

PLEASE VOTE "YES"

மஹிந்தரா? பொன்சேகாவா?

ஜெனரல் சரத் பொன்சேகாவின் பிரதிநிதி ஒருவர் தன்னைச் சந்தித்துப் பேசியுள்ளார் என்ற தகவலை ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வெளியிட்டிருக்கின்றார். அவர் கூறியுள்ள விடயங்கள் மற்றும் வெளியாகும் தகவல்களை நோக்கும்போது, ஜனாதிபதித் தேர்தல் ஒன்று முற்கூட்டியே இப்போது அறிவிக்கப்படுமானால் அதில் ஜெனரல் சரத் பொன்சேகா களமிறங்கக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன என்றே தோன்றுகின்றது.

அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் சிறுபான்மையினரான தமிழ் பேசும் மக்களின் நிலைப்பாடு என்ன, எத்தகைய போக்கை அவர்கள் கைக்கொள்ள வேண்டும் என்ற ஆராய்வுகள் இப்போதே தொடங்கிவிட்டன. தமிழர் தாயகம் மீது வரலாற்றில் மிகக் கொடூரமான போரை ஏவிவிட்ட இராணுவத் தளபதி தேர்தல் களத்திற்கு வந்தால் அவரை ஒரு வார்த்தையில் எதிர்த்துத் துரத்துவதைத் தவிர தமிழர்களுக்கு வேறு என்ன மார்க்கம் இருக்க முடியும் என்ற சாரப்பட உணர்ச்சி வசப்பட்டு இதில் முடிவு எடுப்பதா என்றொரு கேள்வி எழுகின்றது.

அவ்வாறு உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுத்து, சரத் பொன்சேகா களத்துக்கு வந்தால் அவரைத் தமிழர்கள் முழு மூச்சில் எதிர்ப்பார்கள் என்று அறிவிப்பு வெளியிட்ட மனோகணேசன் எம்.பி.கூட, அந்த அறிவிப்பு தனது நோக்கத்தை நிறைவேற்றிய நிலையில், இப்போது சுருதியை மாற்றியிருக்கின்றார். சரத் பொன்சேகா தமிழர்களுக்கு ஏதோ சொல்லப் போகின்றார் என்று பூடகமாகக் குறிப்பிட்டு, பொன்சேகாவுக்கு நிபந்தனை விதிக்கும் விதத்தில் நான்கு அம்சங்களையும் முன்வைக்கின்றார். அவரின் இந்த சுருதி மாற்றமும், போக்கும் நாசூக்கான அரசியல் முதிர்ச்சிமிக்க காய்நகர்த்தல்களாகவே தோற்றுகின்றன.

உடனடியாக ஜனாதிபதித் தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டு, அதில் ஒருபுறம் அரசுத்தரப்பின் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவும், மறுபுறம் ஜே.வி.பி., ஐ.தே.கட்சி போன்றவற்றின் ஆதரவோடு எதிரணியின் ஏக வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவும் நிறுத்தப்பட்டால் தமிழர்கள் என்ன செய்வது என்பதை ஆற,அமர சிந்தித்து, தந்திரோபாயங்களை வகுத்து, அதனடிப்படையிலேயே முடிவு எடுக்கவேண்டும். தமிழர் தாயகம் மீது கொடூர இராணுவத் தாக்குதல்களை வழி நடத்தியவர் ஜெனரல் சரத் பொன்சேகா என்றால், மறுபுறத்தில் நிற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ குரூரமான விமானத் தாக்குதல்கள், கடற்படைத் தாக்குதல்கள், இராணுவத் தாக்குதல்கள், அரசியல் தந்திரோபாயநகர்வுகள் அனைத்தையும் ஒருசேர வழிநடத்திய முப்படைகளின் தளகர்த்தராவார்.

"யுத்தகாலக் குற்ற விடயங்கள் தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகா உட்பட யாரும் பொறுப்பல்லர். அவற்றில் தவறு ஏதும் இருந்தால் என்னைக் கேளுங்கள். என்னை விசாரியுங்கள். நானே பொறுப்பு!'' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பகிரங்கமாக அறிவித்த நிலையில், தமிழர்கள் மீதான யுத்த விவகாரங்களில் ஜெனரல் சரத் பொன்சேகாவை விட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலானவர் என்று தராசுத் தட்டில் போட்டு ஒப்பிட்டுத் தமிழர்கள் அவசரப்பட்டு முடிவு எடுப்பதில் அர்த்தமில்லை.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கூட, பௌத்த சிங்களத் தீவிரவாதிகளின் பக்கம் நிற்கும் மஹிந்த ராஜபக்ஷ வைப்புறம் தள்ளிவிட்டு, தனக்கு வாக்களிப்பதைத் தவிரத் தமிழர்களுக்கு வேறு மார்க்கமில்லை என்ற விட்டேத்தியான சிந்தனையில் கடைசிவரை மெத்தனமாக நடந்து கொண்ட காரணத்தினாலேயே அத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வாங்கிக்கட்டிக்கொள்ள நேர்ந்தது.

அதுபோல, இம்முறையும் மஹிந்தரா, பொன்சேகாவா என்று வந்தால் தமக்கு வாக்களிப்பதைத் தவிர தமிழருக்கு வேறு மார்க்கமில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திமிர்த்தனமாக சிந்திப்பதற்குத் தமிழர்கள் முற்கூட்டியே இடமளித்துவிடக் கூடாது. இதில் பல விடயங்கள் ஆழமாகச் சிந்திக்கப்பட வேண்டும். தமிழர்கள் நலனும், இலங்கைத் தீவின் நலனும் கூட ஆர யப்பட வேண்டும். அதிகாரத்தை ஓரிடத்தில் குவித்து எதேச்சாதிகாரம் பண்ண சர்வாதிகாரம் கட்டவிழ இடமளித்து நிற்கின்றது தற்போதைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை. தமிழர்கள் மீதான அடக்குமுறைக்கும் அதுவே வாய்ப்பாக உதவுகின்றது என்பது வெளிப்படை; தமிழர்களின் நலன் கருதியும், இலங்கைத் தீவில் எதேச்சாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி ஒழிக்கப்பட வேண்டியமை அவசியம்.

பிரதான இரு கட்சிகளில் ஏதோ ஒன்றின் முழுப்பின் புலத்துடனும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவிக்கு வரக்கூடிய ஒருவர் அந்த முறைமையை ஒழிப்பார் என வாக்குறுதியளித்தாலும், அத் தேர்தலில் வென்ற பின்னர் அதை ஆண்டனுபவித்துச் செல்வாக்குச் செலுத்தவே விரும்புவார், அதை ஒழிக்க முன்வரமாட்டார் என்பதும் தெளிவு. அதுவே நாட்டின் பட்டறிவும் கூட.

இந்தச் சூழலில், இரு பிரதான கட்சிகளையும் சாராத ஒரு வரை அப்பதவிக்குக் கொண்டுவந்து, அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பிரதான இரு கட்சிகளையும் வலுவாக இருத்தச் செய்வதன் மூலம் இந்த முறைமையை விரைவில் ஒழிக்க வைப்பதற்கான கட்டாயத்தை அவருக்கு ஏற்படுத்த முடியும்.இப்படி இவ்விடயத்தில் ஆழ்ந்து உற்றுநோக்கவேண்டிய பல தீர்க்கமான அம்சங்கள் உள்ளன. அடுத்துவரும் நாள்களில் இப்பத்தியில் அவற்றை ஒவ்வொன்றாக நோக்குவோம்.

எனவே, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷவா, பொன்சேகாவா என்ற கேள்வி எழுந்தால், அதுபற்றி அழுத்தமாக ஆராயமுன்னர் எடுத்தோம், கவிழ்த்தோம் என்றபாணியில் உணர்ச்சிவசப்பட்டு ஒரு முடிவை எடுத்து, வாய்ப்புகளைத் தமிழர் தரப்பு பாழாக்கிக்கொள்ளக்கூடாது.

  • குறிப்பாகப் புலம்பெயர் தமிழர்களில் கூடியளவு செல்வாக்குச் செலுத்தும் ஊடகங்கள், இணையத்தளங்கள் போன்றவை இவ்விவகாரத்தில் பலமான ஆராய்வுக்கும், வாதப்பிரதிவாதங்களுக்கும் இடமளித்து அதன் பின்னர் தமிழர்கள் முடிவெடுப்பதற்கான வாய்ப்பை அளிக்கவேண்டும். அவசரப்பட்டு ஒரு தரப்பு முடிவுகளைத் திணிக்க அவை முயற்சிக்கக் கூடாது.

தமிழ் மக்களின் கோபத்திற்கு ஆளாகாத வகையில் சூர்யா சிங்களப் படத்தில் நடிப்பதைக் கைவிட வேண்டும்: நெடுமாறன்

சிறீலங்காவில் சிங்கள இயக்குநரின் இயக்கத்தில் தயாராகும் சிங்கள திரைப்படத்தில் தமிழ் நடிகர் சூர்யா நடிக்கக் கூடாது என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

சிங்கள திரைப்படத்தில் நடிக்க சூர்யா ஒப்புக்கொண்டிருப்பதாக வெளியான செய்தி தமிழர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. கலைஞர்கள் நாடு, இனம் கடந்தவர்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும், அண்மையில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்து, 3 இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்களை வதை முகாம்களில் அடைத்து கொடுமை செய்யும் நாட்டில் சிங்களரால் தயாரிக்கப்படும் சிங்களப் படத்தில் தமிழர் ஒருவர் நடிப்பதை எண்ணிக்கூடப் பார்க்க முடியவில்லை.

மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட மிகக் கொடுமையான படுகொலைகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட புறப்பட்ட இந்தியக் குழுவை மக்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பு தடுத்து நிறுத்தியது. எனவே, தமிழ் மக்களின் கோபத்திற்கு ஆளாகாத வகையில் நடிகர் சூர்யா சிங்களப் படத்தில் நடிப்பதைக் கைவிட வேண்டும் என நெடுமாறன் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாடு கடந்த அரசாங்கத்தின் முக்கிய அறிக்கை வெளியாகியுள்ளது


புலம்பெயர் நாடுகளில் தேர்தல் மூலம் உருவாகும் புதிய கட்டமைப்புக்களை நாடுகடந்த தமிழீழ அரசு வரவேற்கிறது..


இடைக்கால நாடுகடந்த தமிழீழ அரசுக்கான ஆலோசனைக் குழு தனது முழுமையான அறிக்கையை 2009 டிசம்பரில் வெளியிடுவதற்குரிய இலக்குடன் பணிகளை உரிய வேகத்தில் தொடர்ச்சியாக
மேற்கொண்டுவருகின்றது. இது தொடர்பாக நாங்கள் பல்வேறுபட்ட பிரேரணைகளையும், குறிப்பான கேள்விகளையும் புலத்துத்தமிழ் சமூகத்திடமிருந்து தொடர்ந்தும் பெற்றுவருகின்றோம். மேலும், கடந்த
மாத ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட நாடுவாரியான செயற்பாட்டுக்குழுக்களும் தங்களது பணிகளை ஆரம்பித்துள்ளன.

எதிர்வரும் வாரங்களில் தமிழ்மக்கள் பெருந்தொகையாக வாழும் மற்றைய நாடுகளுக்கான இணைப்பாளர்களும், செயற்பாட்டுக்குழுக்களும் அறிவிக்கப்படவுள்ளன.ஏப்பிரல் 2010ல் தேர்தல்களை நடத்துவதறகுரிய வகையில் பணிகள் முன்னேற்றம் கண்டு வருகின்றன. எதிர்வரும் இரண்டு மாத காலங்களுக்கு புலத்துத்தமிழ் சமூகத்துடன் எமது இதுவரையிலான முன்மொழிவு மற்றும் குறிப்பிடப்பட்ட சில கேள்விகள் தொடர்பாகப் பரவலான ஆலோசனைகள் மேற்கொள்ள நாங்கள் தீர்மானித்துள்ளோம்.இந்தச்சந்தர்ப்பத்தில் அண்மைக்காலமாக எழுப்பபட்டுவரும் சில கேள்விகள் தொடர்பான எமது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.

2009 யூனில் வெளியிடப்பட்ட எமது முதலாவது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது போன்று நாடுகடந்த தமிழீழ அரசுவினை நிறுவும் செயற்பாடானது அனைத்துத்தமிழர் அலகுகளையும் ஒன்றுபடுத்துவதற்கான அடிப்படையில் சனநாயக வழியிலமைந்த ஒரு முன்னெடுப்பாகும். புலத்துத்தமிழ் சமூகம் சனநாயக உரிமைகளைப் பிரயோகிப்பதற்கு நேரிடையான தேர்தல் ஒரு சிறப்பான வாய்ப்பு என்பதே எங்களது தெளிவுபடுத்தப்பட்ட நிலைப்பாடாகும். இதுவொன்றே நாடுகடந்த தமிழீழ அரசுக்கான சட்டபூர்வத்தன்மையைத் தரும்.

இதனால் நேரிடையாக தேர்வுசெய்யப்பட்டவர்களைத் தவிர்ந்த பிறர் எவரும் நாடுகடந்த அரசுவின் அங்கமாக முடியாது. இந்த நாடுகடந்த தமிழீழ அரசுவானது தனது முதல் விடயமாக அரசியலமைப்பு நிர்ணயசபையாகச் செயற்படும். மேலும், நாடுகடந்த தமிழீழ அரசினது ஆட்சிசார் செயற்பாடுகள் தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழர் வாழும் நாடுகள் தோறும் செயற்படும் அல்லது உருவாக்கப்படும் கட்டமைப்புக்களுடன் எத்தகைய உறவினைப் பேணுவது என்பதை இவ்வாறு நேரிடையாக தேர்வுசெய்யப்பட்ட உறுப்பினர்களே முடிவு செய்வார்கள்.

சில நாடுகளில் தேர்தல்கள் மூலம் புதிய தேசியளவிலான கட்டமைப்புக்களை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெறுவதை நாங்கள் அறிவோம். நாங்கள் அத்தகைய சனநாயக முயற்சிகளை வரவேற்கின்றோம். ஆனாலும், இந்த வேளையில் அவ்வகை முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ இல்லை. ஏனெனில், அவ்வாறுசெய்வதென்பது அரசு அமைப்பதற்கான செயற்குழுவின் சனநாயகமற்ற ஊகநடவடிக்கையாக அமைந்துவிடும்.

எம்முடனான தொடர்புகளுக்குரிய மின்னஞ்சல் முகவரி:info@govtamileelam.org



விசுவநாதன் உருத்திரகுமாரன்
இணைப்பாளர்.


மாட்டிக் கொண்ட சிவத்தம்பி!

World Tamil creators forum blasts Karunanidhi

இலங்கையில் தமிழினத்தை அழிக்கும் இந்திய அழிப்பாற்றலுக்குக் கைகொடுத்துக் கொண்டு ஒப்பாரி வைப்பது வேடிக்கையாக இல்லையா? இவ்வாறு விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தமிழ்த்திரு தொல். திருமாவளவன் அவர்களுக்கு மலேசியாவிலிருந்து இரா. திருமாவளவன் கேள்விக்கணை தொடுத்துள்ளார். இரா.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-


மதிப்பிற்குரிய விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தமிழ்த்திரு தொல் திருமாவளவன் அவர்களுக்கு, வணக்கம்.

அண்மையில் தாங்கள் இலங்கைக்குச் சென்று இலங்கை கொலை வெறி அரசால் வன்னி மண்ணில் படுகொலை செய்யப்பெற்று சொல்லொணா துன்பத்திற்கு ஆளான தமிழ் மக்களில் எஞ்சியவரைக் கொத்தடிமைக் கொட்டடிக்குள் சந்தித்து உரையாடி வந்தமையினை ஊடகங்கள் வாயிலாக படித்தறிந்தேன்.

தமிழின வீரத்தின் மொத்த வடிவமாகவும் தமிழினத்திற்குக் காலம் கொடுத்த அருங்கொடையாகவும் வாய்க்கப் பெற்ற அரும்பெறல் தலைவர் மேதகு பிரபாகரன் கரங்களைக் குலுக்கிய கைகள் தமிழனின் குருதிக் கறைகள் படிந்த கொலை வெறியன் மகிந்தவின் கரங்களைக் குலுக்கியதையும் அவனோடு சிரித்து மகிழ்ந்து உணவுண்டதையும் ஊடகங்களில் கண்டு மனம் நொந்து போன தமிழுள்ளங்களில் நானும் ஒருவன்.

மகிந்த ராஜபக்சவுடன் திமுக காங்கிரஸ் குழுவினர் தமிழீழ மக்களுக்காக குரல் கொடுத்த கரணியத்திற்காகவும் தங்கள் இயக்கத் தொண்டர்கள் பலருக்குத் தூயதமிழ் பெயர் சூட்டியமைக்காகவும் மேலும் பல்வேறு மொழி நலன் செயற்பாடுகளுக்காகவும் தங்கள் மீது எனக்கு உயர்ந்த மதிப்பிருந்தது.

*அதனால், மலேசியாவிற்குத் தங்களை முதன்முறையாக பல்வேறு எதிர்ப்பிற்கிடையே அழைத்து நாடு தழுவிய அளவில் நிகழ்ச்சிகளை நடத்தினேன். இதனைத் தாங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை எனக் கருதுகின்றேன்.

ஆனால், அண்மை காலமாக தங்களின் செயற்பாடுகளில் பிறழ்ச்சி நிலை தென்படுவது தங்களின் மேல் உலகத் தமிழர்கள் வைத்துள்ள மதிப்பை பாதித்துள்ளது என்பதைத் தாங்கள் அறிவீர்களா?

ஈழ மண்ணில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடு இணை சொல்ல முடியாத அளவில் வீரஞ்செறிந்த போர் புரிந்து கொண்டிருந்த வேளையில் அதனை முறியடிக்கும் நோக்கில் சிங்கள் இன வெறி அரசுக்கு முட்டு கொடுத்த இந்திய காங்கிரசு கூட்டணிக்குத் தாங்கள் முட்டு கொடுத்தீர்கள். அக்கால் தமிழீழ மக்களைக் குறிவைத்து சிங்களப் படை கொலை வெறி தண்டவம் ஆடியது. ஈழத் தமிழ் மக்கள் அவலக் குரல் எழுப்பினர். கதறினர். காப்பாற்றக் கோரி இந்தியாவை நோக்கிக் கெஞ்சினர்.

உங்கள் அன்பு முதல்வர் நாற்பது ஆண்டுகால போர் நான்கு நாள்களில் நின்று விடுமா என்று கேட்டார். எங்களால் ஒன்றும் செய்ய இயலாது என சட்ட மன்றத்திலேயே அறிவித்தனர். இந்திய நடுவண் அரசின் நிலைப்பாடே எங்களுடைய நிலைப்பாடும் என உங்கள் முதல்வர் திட்டவட்டமாகவே அறிவித்துவிட்டார். மற்றொரு பக்கம் ஈழத் தமிழ் மக்களுக்காக என்னையே நான் தியாகம் செய்யத் துணிந்து விட்டேன் என்று ஒரு நாள் நோன்பிருந்தார். கொடிய தாக்குதல் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப் படுகையிலேயே போர் நிறுத்தம் வந்து விட்டது என்று கூறினார்.

இவை எல்லாம் யாரோ கூறுபவை அல்ல. உங்கள் தமிழகத் தலைவர்களாலேயே பதிப்பிக்கப் பட்டவை. ஏடுகளில் வந்தவை. காட்சிகளில் பதிவானவை. கொலை வேறி சிங்களவனுக்கு எல்லா வகையாலும் ஒத்தாசை வழங்கி விட்டு,

“அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் அங்கே தலைவிரித்தாடுகின்றன. முகாம்களில் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஈழத் தேசமே ராணுவத்தின் கெடுபிடிக்குள் சிக்கிச் சிதைந்து வருகிறது.

மக்களிடையே மன அழுத்தங்களும் அச்சமும் பீதியும் மேலோங்கி நிற்கின்றன.

தமிழ் மக்களிடையே அச்சத்தாலான அடிமைத்தனமும் பரவுவதை அவர்கள் கால் வயிற்றுக் கஞ்சிக்காகக் கையேந்தி நிற்கும் நிலைமைகளிலிருந்து அறிய முடிகிறது.

மெலிந்த உடல்களிலிருந்து ஏக்கப் பெருமூச்சுகளும், முனகல்களும் மட்டுமே வெளிப்படுகின்றன. நாவிலிருந்து வார்த்தைகள் வராமல் விழிகளிலிருந்து தாரை தாரையாய் நீர் கொட்டுவதை காண முடிகிறது.

2 பேர் மட்டுமே வசிக்கக்கூடிய கூடாரங்களில் 8 பேர், 10 பேர்களை அடைத்து வைத்திருக்கும் மனிதநேயமற்ற கொடுமைகள் திணிக்கப்பட்டுள்ளன. இந்த மனித அவலங்களை மனிதநேயமுள்ள எவராலும் சகித்துக் கொள்ள முடியாது. ”

என்று தாங்கள் அறிக்கை விட்டிருப்பதைக் கண்டு நாங்கள் யாரிடம் சொல்லி அழ? இவற்றுக் கெல்லாம் ஏதொவொரு வகையில் தாங்களும் துணையாகி விட்டீர்களே! அதை உங்கள் மனச்சான்றிலிருந்து மறைக்க முடியுமா? மறுக்க முடியுமா?

“நல்ல வேளை நீங்கள் பிராபாகரனோடு அன்று இல்லை. இருந்திருந்தால் நீங்களும் செத்திருப்பீர்கள்” என்று இந்திய நாடாளுமன்ற குழுவில் தங்களைப் பார்த்து அந்தக் கொலை வெறியன் கேளி செய்தானே! அதைக் கண்டு என் நெஞ்சம் கொதித்தது. ஆனால் அது தங்களுக்கு நகைச்சுவையாகப் பட்டது.

பிரபாகரன் என்கின்ற தமிழினத்தின் உயர் தலைவனின் பக்கத்தில் நின்று உரையாடியவர் தாங்கள். விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தாங்கள்.

கொஞ்சமாவது அந்த வீரத்தின் வாடை வீசியிருக்க வேண்டாவா?

ஆனால், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இந்தக் கொடுமைகளை எப்படி வேடிக்கை பார்க்கின்றன என்பது தான் பெரும் கொடுமையாக உள்ளது. இந்திய அரசு ஈழத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக மேலும் ரூ.500 கோடி வழங்கத் தீர்மானித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது நீங்கள் வெளியிட்ட அறிக்கையில் உள்ள குறிப்பு. இது என்ன இந்தியா புதிதாக செய்கின்ற வேலையா? அன்று களத்தில் நின்ற தமிழனைக் கொல்ல துணை நின்ற இந்தியா, இன்று கொத்தடிமைக் கொட்டடிக்குள் கிடக்கும் தமிழனை அழிக்க உதவுகிறது. அப்படிப் பட்ட கூட்டணி தானே உங்கள் கூட்டணி.

அடங்க மறு திருப்பி அடி என்பதெல்லாம் ஏட்டளவில் இருந்தால் போதுமா?

உண்மையான அப்பழுக்கில்லாத உணர்வு மிக்க செயல் வீரம் கொண்ட தமிழனாகவே தங்களை உலகத் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஐயா பழ நெடுமாறன் மலேசியா வந்த பொழுது ஒரு கருத்தைக் குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பங்காற்ற கூடிய முழு பொறுப்புக்குரியவர்கள் முந்தைய தலைமுறையோ பிந்திய தலைமுறையோ அல்ல. இன்றைய தலைமுறையினராகிய நாம் தான். நாம் நம்முடைய கடமையை சரிவர ஆற்றத் தவறி விட்டால் வரலாற்றுப் பழிப்பிலிருந்து தப்ப முடியாது.

உங்கள் முதல்வர் இன்று பொறுப்பிலிருக்கின்ற இக்கால்தான் ஆயிரக்கணக்கான் தமிழீழத் தமிழர்கள் சிங்களக் காடையர்களால் ஊரறிய உலகறிய பச்சைப் படுகொலை செய்யப் பட்டார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒடுக்கப் பட்டிருக்கிறது. இலக்கக் கணக்கான தமிழ் மக்கள் முள்வேலிக் கம்பிகளுக்குள் அடைக்கப் பட்டு வதைப் படுத்தப்படுகின்றனர்.

இவற்றை எல்லாம் தடுப்பதற்கு ஆட்சியிலிருக்கும் உங்கள் கூட்டணிக்கு எண்ணம் இல்லையே?

தமிழினத்தை அழிக்கும் இந்திய அழிப்பாற்றலுக்குக் கைகொடுத்துக் கொண்டு ஒப்பாரி வைப்பது வேடிக்கையாக இல்லையா?

இக்கண்;
இரா.திருமாவளவன்,
மலேசியா.

எப்போதுதான் சிவத்தம்பி பேயாசிரியரே அரசியல் ஆக்குவது? அரசியல் ஆவது?

இந்திய மொழிகளிலேயே மூத்த மொழி. தென்னிந்திய மொழிகளின் தொட்டில். உலகப் பொதுமறையை உவந்த தமிழ். யாதும் ஊரே யாரும் கேளீர் என்று மானுடப் பொதுமையை பகர்ந்த மொழி.என்றெல்லாம் சிறப்புப் பெற்ற மொழி தமிழ். ஆனால் தமிழர்கள். அவர்கள் அறுபதுகளில் மொழிக்காக போராடியவர்கள். ஈழத்தில் எழுபதுகளில் போராடினார்கள்.

தமிழகத்தில் கிளர்ந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை தன் சந்தர்ப்பவாத பதவி அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டார்கள் அறிஞர் அண்ணாதுரையும் முதல்வர் கருணாநிதியும். அப்போது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காட்டிக் கொடுத்தது திமுக இதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. முதல்வர் கருணாநிதி பேசிய இனம், மொழி, தன்மானம் பதவி அரசியலுக்கு வந்தபிறகு காற்றில் பறக்கவிடப்பட்டது என்பதெல்லாம் தனிக்கதை. ஆனால் நாற்பாதாண்டுகாலமாக தான் தமிழுக்கும் இந்த இனத்திற்கும் ஏராளமாக செய்து விட்டதாக வாய் வர்த்தையாலேயே வாய்க்கால் கட்டி அதில் கண்ணீர் கப்பல்களை விட்டுக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.

உண்மையில் மொழி என்பதென்ன?

மொழி மனித உறவுகளுக்கு அடிப்படையான தொடர்பு சாதனம். உற்பத்தி உறவுகளுக்கான ஒரு கருவி. இவைகள் யதார்த்தமான அணுகுமுறையாக இருக்கும். மொழி என் உயிரிலும் மேலானது. மொழி புனிதமானது என்பது திமுக கருணாநிதியின் அணுகுமுறை. உற்பத்தி உறவுக்களுக்கான கருவியான மொழி உற்பத்தியில் பங்கேற்கிறதா? என்றால் இக்கட்டுரை எழுதவும், இது போன்ற எழுத்துத் தொழிலில் ஈடுபடுவோருக்கும் இன்னும் சிலருக்கும் பயன்படுகிறதே தவிற வேறு உற்பத்தியோடு தொடர்பில்லாமல்தான் தமிழ் இருக்கிறது.

கிராமத் தொழில்களில் தமிழ் பயன்பட்ட்டாலும் அது சந்தை மொழியாக இல்லை. அங்கே ஆங்கிலம் தேவைப்படுகிறது. ஆனால் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் பின்னர் மும்மொழிக் கொள்கையைக் கொண்டு வந்த திமுக ஆங்கிலம், இந்தி, தமிழ் என்று தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதிலும் நாடகம்தான். விளைவு தமிழே தெரியாத தலைமுறை இந்தியையும் ஆங்கிலத்தையும் கற்றுக் கொண்டு நகர்ப்புரங்களில் வேகமாக வளர்ந்து வருகிறார்கள்.

இது ஒரு புறமிருக்க கிராமப்புரங்கள், சிறிய நகரங்களில் தமிழைத் தவிற வேறு மொழி தெரியாத ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. தமிழ் எங்கள் உயிருக்கு நிகர் என்றவர்கள் கிராமப்புரங்களில் தமிழ் மட்டுமே தெரிந்த சந்ததியை உருவாக்குவது இந்தியும், ஆங்கிலமும் தெரிந்த தலைமுறைக்கு சேவை செய்யவா? என்றெல்லாம் கேள்விகள் இருந்தாலும். தமிழ் மொழியை கட்டாயமாக்கவோ, தமிழில் மொழிச் சீர்திருத்தம் செய்யவோ இன்றளவும் முன் முயர்ச்சிகள் எடுக்கப்படவில்லை. தமிழ் சைவத்தாலும் வைணவத்தாலும் கறைபட்ட மொழி என்றார் பெரியார். பெரியாருக்குப் பிறகு அதை எவளவு கறைபடுத்த முடியுமோ அவளவு கறைபடுத்தி விட்டார் கருணாநிதி. தன் அரதப் பழைய தமிழ் நடையால்.


சரி மொழிதான் இப்படி இருக்கிறது தமிழர்கள் எப்படி இருக்கிறார்கள்.

தமிழ் மொழி அழியாமல் இருக்க வேண்டும் என்றால் முதலில் தமிழர்கள் உயிரோடும் உயிருக்கான உத்திரவாதட்தோடும் இருக்க வேண்டும்.

இலங்கை அரசோடு சேர்ந்தியங்கும் கருணாவையும். டக்ளஸ்தேவானந்தாவையும், ஆறுமுகத் தொண்டைமானையும், முத்து சிவலிங்கத்தையும் நான் சொல்லவில்லை. ஈழ மக்களைச் சொல்கிறேன். ஒப்பீட்டளவில் இலங்கையும் கடந்த முப்பதாண்டுகளில் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். உண்மையில் அப்படித்தான் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இடப்பெயர்வு, கொலைகள், காணாமல் போதல் என பல்வேறு காரணங்களால் இந்த ஜனத் தொகை வீழ்ச்சி ஏற்பட்டுகிறது. ஆக தமிழ் பேசும் மக்கள், தமிழ் மொழிபேசுவோரின் தாயங்கள் என்று அறியப்பட்ட இடங்களில் ஒன்றாக வடக்கு கிழக்கில் குறைவான எண்ணிக்கையில் உள்ளார்கள். அல்லது குறைந்து கொண்டு வருகிறார்கள். இப்போது முதல்வர் கருணாநிதியும் பேராசிரியர் சிவதம்பியும் காப்பாற்ற வேண்டியது தமிழையா? தமிழர்களையா?

இப்படியான ஒரு கேள்வியை நாம் கேட்டால் உடனே முதல்வர் கருணாநிதி நான் உண்ணாவிரதமிருந்து மூன்று மணி நேரத்தில் போரை நிறுத்தி ஈழ மக்களைக் காப்பாற்றவில்லையா? பத்து எம்பிக்களை இலங்கைக்கு அனுப்பி தமிழர்களை முகாம்களில் இருந்து விடுவிக்க வில்லையா? என்று கேட்கிறார்கள். அவர் கூட்டும் செம்மொழி மாநாட்டுக்கு ஈழத் தமிழறிஞராக நீங்கள் செல்லக் கூடாது என்று நாம் பேராசிரியர் சிவத்தம்பியை பார்த்துக் கேட்டால்? அவரோ இதை அரசியல் ஆக்காதீர்கள்? இது அரசியல் மாநாடல்ல? மொழிக்கான மாநாடு? என்று திமுகவினர் பேசுகிற மாதிரியே பேசுகிறார். ஐம்பதாயிரம் மக்கள் படுகொலையாகி, தமிழர்கள் தங்களின் நிலப்பரப்பையும் இழந்து கொண்டிருக்கும் நிலையில் இப்போதேனும் இதை அரசியல் ஆக்காவிட்டால் எப்போதுதான் பெரியவரே அரசியல் ஆக்குவது? அரசியல் ஆவது?

பெரியவர் சிவத்தம்பி வீரகேசரிக்கு அளித்துள்ள நேர்காணல் இன்றைய யதார்த்த நிலைகளுக்கு புறம்பாக உண்மைகளை மறைத்து அல்லது, உண்மைகளை பேச மறந்து விடப்பட்ட நேர்காணலாகும். அதில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுவதாகவும் அரசியலுக்கு அப்பாற்பட்டு இதை வரவேற்க வேண்டும் என்றும். கூறியிருக்கிறார்.

கோவையில் முதல்வர் கருணாநியின் விருப்பத்திற்கிணங்க நடைபெறப் போவது உலகத் தமிழ் மாநாடே அல்ல. முதன் முதலாக நடைபெறும் செம்மொழி மாநாடு. இந்தச் செம்மொழி மாநாடு நடத்துவதன் நோக்கமே ஈழத் தமிழர் இனப்படுகொலை தொடர்பாக கருணாநிதி மீது எழுந்துள்ள கசப்புகளை மறைத்து. உலகத் தமிழர்களின் ஒரே உரிமையாளர் தான் தான் என்று பரைசாற்றவும். ஈழத் தமிழர்களின் இனப்படுகொலையோ, அரசியல் கோரிக்கைகளோ ஒரு பொருட்டே அல்ல, என்னால் எந்தச் சூழலிலும் எம்மாதிரியான மாநாடுகளையும் தனது ஆதரவாளர்களைக் கொண்டு நடத்த முடியும் என்று அதிகாரத்தில் இருந்து கொண்டு சுய இன்பம் காணுகின்ற ஒரு மாநாடாகும்.

இன்றைய இலங்கைச் சூழலில் ஆட்சியாளர்கள் சர்வதேச ஏகாதிபத்திய நாடுகளிடம் சிக்கித் திணறுவதை நாம் கண்டு வருகிறோம். போருக்குப் பின்னர் சர்வதேச நாடுகள் பல் வேறு நெருக்கடிகளை இலங்கைக்குக் கொடுத்து வருகின்றனர் என்பதோடு, இலங்கையின் தமிழ் மக்களுக்கு எதிரான மிகப் பெரிய இனப்படுகொலை நடந்திருபப்து உண்மைதான் என்பதை உலகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் இலங்கையில் சுமூக நிலை நிலவுவதாகவும், தமிழர்கள் பிரச்சனைகள் இன்றி அல்லது மிகக் மிக குறைவான சோப்பு, சீப்பு, கண்ணாடி இல்லாமல் சின்ன பிரச்சனைகளோடு வாழ்ந்து வருவதாகவும் முதல்வர் கருணாநிதி சொல்லிக் கொண்டிருக்கிறார். அதுவல்லாமலும் இலங்கை அரசின் இனவெறிப் பாசிஸ்டுகளோடு நெருக்கம் பேணுவதையும் நாம் காண முடிகிறது. மிக மோசமான கொலைகள், முகாம்கள், நிலங்களை இழத்தல் என்னும் நிலை இலங்கையில் நிலவும் போது இம்மாதிரியான செம்மொழி மாநாடே அவசியம் இல்லை என்பதுதான் பெரும்பலான தமிழகத் தமிழ் மக்களின் கருத்தும்.

ஆனால் பேராசிரியர் சிவத்தம்பி மாநாட்டிற்கு செல்லும் முடிவை எடுத்து விட்டதாகவும், வயது மூப்பின் காரணமாக ஓடியாடி வேலை செய்ய இயலாத நிலையில் அவரின் சிந்தனைப்படி செயல்படவே அவர் நினைக்கும் காரியங்களை முடிக்க ஆய்வரங்கத் தலைவராக பேராசிரியரோடு கனிமொழியும் நியமிக்கப்பட்டதாகவும். நேரடியாக கருணாநிதியே பேராசிரியரிடம் பேசி ஒப்புதல் பெறப்பட்ட பின்பே ஆய்வரங்கப் பதவி நியமனம் பெற்றதாகவும் செய்திகள் கசிந்து கிடக்கின்றன.

நாம் பேராசிரியரிடம் கேட்க விரும்பிவது ஒன்றைத்தான். இலங்கையின் இராணுவச் சூழலுக்குள் வாழும் உங்களால் இனக்கொலை குறீத்து பேச முடியாது. அதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இலங்கை ஆட்சியாளர்களுக்கு எதிராக நீங்கள் கடைபிடிக்கும் இதே மௌனத்தை ஒரு ஆயுதமாக ஏன் முதல்வர் கருணாநிதி கூட்டும் மாநாட்டிற்கு எதிராக பிரயோகிக்க முடியாது.

மக்கள் மாநாட்டிற்கு எதிராக இருக்கும் போது தமிழறிஞர்கள் மட்டும் தமிழர்களை மற்ந்து விட்டு தமிழை அரியணையேற்ற நினைப்பது எவளவு நீசத்தனமான காரியம்? இது தொடர்பாக உலகெங்கிலும் வாழும் ஈழ மக்களிடம் நான் கேட்க விரும்புவது ஒன்றே ஒன்றைத்தான். போர்க்குற்றவாளிகளான ராஜபக்ஸ குடும்பத்தினருக்கு கருணாநிதி படையல் வைத்தால் அவர் துரோகி, திருமாவளவன் சால்வை போடால் துரோகி, கனிமொழி பரிசு வாங்கினால் துரோகி, ராமதாஸ் பதவியை இழக்க மறுத்தால் துரோகி ஆமாம் இதெல்லாம் துரோகங்கள்தான். அப்படியான துரோகிகள் கூட்டும் மாநாட்டிற்குச் செல்லத் துடிக்கும் பெரியவர் யார்? அப்படியான ஒரு சூழல் வரக்கூடாது பேராசிரியராவது தமிழ் மக்களுக்கு சாதகமான ஒரு முடிவை எடுக்க வேண்டும். இதுவே உலகத் தமிழர்களின் எதிர்ப்பார்ப்பு.

அருந்ததி.GTN

பம்பலப்பிட்டியில் அடித்துக் கொல்லப்பட்டவர் ஒரு தமிழர்


நேற்று பம்பலப்பிட்டி கடலுக்குள் குதித்தபோது தாக்கப்பட்டு உயிரிழந்த தமிழ் இளைஞரின் சடலம் சற்று நேரத்திற்கு முன்னர் கரை ஒதுங்கியது. இத் தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிமல் மெதிவக்க தெரிவித்தார். சற்று முன்கிடைத்த செய்தியின்படி இந்த இளைஞரைத் தாக்கியதாகக் கருதப்படும் பொலிஸ் உத்தியோகத்தரை விசேட பொலிஸ் குழு கைது செய்துள்ளதாக அறியப்படுகிறது. சடலம் கரையொதுங்கிய இடத்திற்குச் சென்ற இவ்விளைஞரின் சகோதரர் சடலத்தை அடையாளங் காட்டினார். இவ்விளைஞரைத் தாக்கியதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தரைக் கைது செய்வதற்கும் ஏனையோரை அடையாளம் காண்பதற்கும் விசாரணைகள் நடத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மனநிலை பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞர் இவர் எனச் சிலர் கூறினாலும், இதனைச் சுயாதீனமாக உறுதிசெய்ய முடியவில்லை. இருப்பினும் இவ்வாறு கொடூரமாகத் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிங்கள காடையரின் அடக்கு முறைக்கு அளவில்லாமல் போனதுடன், நாதியற்ற இனமாக கொழும்பில் தமிழர்கள் மாறியுள்ளனர்.


---------------------------------------------
நேற்று காலையில் பம்பலப்பிட்டி கடற்கரையில் பல மக்கள் பார்த்துக் கொண்டிருக்க ஒரு நபரை சிலர் பலவந்தமாக கடலில் மூழ்கடித்துள்ளனர். அந்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் அவ்வழியால் செல்லும் ரயில்கள் மற்றும் வாகனங்கள் மீது கல்லெறிவது அவரது வழக்கமான செயல் என்றும் பம்பலப்பிட்டி போலீசாரின் தகவல்களை மேற்கோள் காட்டி போலீஸ் ஊடக பேச்சாளர் நிமல் மெதிவக்க கூறினார். மேலும், அந்நபர் கடலுக்குள் குதித்து மூழ்க முன்னரும் பம்பலப்பிட்டி போலீஸ் நிலையத்தை நோக்கி கல் வீசினார் என்றும் அவர் மேலும் கூறினார்.

ஆனால் மேற்படி நபர், தாமாக கடலில் குதிக்கவில்லை என்பதை தொலைக்காட்சி ஒன்றின் படப்பிடிப்பாளர் பிடித்துள்ள வீடியோவிலிருந்து தெரியவந்துள்ளது. இந்த அதிர்ச்சியான வீடியோயை அவர் தமது தொலைக்காட்சி அலுவலகத்தில் இருந்து படம் பிடித்து ஒளிபரப்பியுள்ளார்.

அந்த வீடியோவின் பிரகாரம், மேற்படி குறித்த நபரை சிலர் தடிகளால் அடித்து விரட்டி, கடலில் இருந்து கரைக்கு வரவிடாமல் தடுத்து கடலிலேயே மூழ்கச் செய்துள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது. எனவே இந்த சம்பவம் குறித்து கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேற்படி சம்பவத்தில் போலீசாரும் ஈடுபட்டார்களா எனவும் விசாரணை நடக்கவுள்ள இச்சமயத்தில் இறந்தவரின் உடலை கடற்படையினர் தேடி வருகின்றனர்.

பிந்திக் கிடைத்த தகவலின்படி, அடித்த இருவரில் ஒருவர் இலங்கை பொலீஸ் பிரிவைச் சேர்ந்தவர் என இனம் காணப்பட்டுள்ளார். இவ்வாறான காட்டு மிராண்டித்தனமான பொலிசார் இலங்கையில் மட்டுமே இருக்கக்கூடும். மன நிலை சரியில்லாத ஒருவரை கடலில்வைத்து அடித்துக் கொல்லும் அரக்க குணம் சிங்கள இனத்தவரிடையே காணப்படுகிறது. காணொளி இணைக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தமிழீழ மக்களுக்கான அவசர வேண்டுகோள்: ஜி.எஸ்.பி சலுகையை நிறுத்தக் கோரும் மனு

n-27102009-gsp-01இலங்கைக்கான ஜி.எஸ்.பி சலுகையை நிறுத்தக் கோரும் இந்த மனுவில் உங்கள் அனைவரையும் கையொப்பம் இடுமாறு அன்போடும் உரிமையோடும் கேட்டுக் கொள்கின்றோம்.

உங்கள் கடமையை செய்வதற்கு இங்கே சுடக்கவும்

இதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அவர்களையும் கையெழுத்து இடுமாறும் கேளுங்கள்.

பதவிக்காக வாலாட்டும் கருணாநிதியின் மனித நேய உணர்வையும் மான உணர்வையும் என்னென்று சொல்வது? – பழ.நெடுமாறன்

2009‐ம் ஆண்டு மே 19‐ம் தேதி விடுதலைப் புலிகளை முற்றிலுமாக முறியடித்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. போரின் இறுதி மூன்று நாள்களில் ஏறத்தாழ 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள். நான்காம் கட்ட ஈழப்போரில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தார்கள்.

Nedumaranபோர்ப் பகுதியில் இருந்து உயிர் தப்பிய 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை நலன்புரி முகாம்கள் என்ற பெயரில் முள்வேலி முகாம்களில் ராணுவப் பாதுகாப்போடு சிங்கள அரசு அடைத்தது. போர் முடிந்து ஐந்து மாத காலத்துக்கு மேலாகியும் அந்த மக்கள் விடுவிக்கப்பட்டு. தங்கள் ஊர்களுக்கும் வீடுகளுக்கும் திரும்ப அனுமதிக்கப்படவில்லை. முகாம்களில் போதுமான தங்குமிடம், சுகாதார வசதிகள், உணவு, மருந்து ஆகிய எல்லாமே பற்றாக்குறையாக இருந்தது. இதன் விளைவாக தினமும் 200 முதல் 300 பேர் வரை மடிந்துகொண்டிருக்கின்றனர்.

இரண்டாம் உலகப்போரின் போது யூதர்களை வதைக்க ஹிட்லர் அமைத்த முகாம்களைவிட ராஜபட்ச அமைத்த முகாம்கள் மிகமோசமானவை என உலக நாடுகள் குற்றம் சாட்டின. இந்த முகாமில் இருந்த மக்களுக்கு அடிப்படை மனித உரிமைகள், இடப்பெயர்வு, வாழ்வாதாரம், கூடிப்பேசும் உரிமை, குறைகளை முறையிடும் உரிமை ஆகிய எல்லாமே மறுக்கப்பட்டன.ஐ.நா. அமைப்புகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், பிற தொண்டு நிறுவனங்கள் ஆகியவையும் இந்த மக்களுக்கு உதவுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்தியா உள்பட உலக நாடுகள் அளித்த உதவியில் ஒரு சிறு பங்குகூட இந்த மக்களுக்குக் கிடைக்கவில்லை. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் உள்பட பல்வேறு நாடுகள் இந்த முகாம்களில் உள்ள சீர்கேடான நிலைமை குறித்து மிகுந்த கவலையுடன் எச்சரித்தன. அந்த மக்களை விடுவித்து அவர்களது ஊர்களுக்குத் திரும்ப அனுமதிக்கும்படி வலியுறுத்தின. ஆனால் ராஜபட்சவின் கேளாக் காதுக்கு இந்தக் குரல் எட்டவில்லை. இந்த நிலைமையில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அனைத்துக் கட்சிக் குழு ஒன்று முகாம்களை பார்வையிட அனுப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சிகளால் எழுப்பப்பட்டது.

இந்தக் கோரிக்கையைத் திசை திருப்பவும், இலங்கை முகாம்களில் நடக்கும் கொடுமைகளை மறைக்கவும் தமிழக முதலமைச்சர் கருணாநிதி தந்திரத் திட்டம் வகுத்தார். அதற்கிணங்க காங்கிரஸ் ‐ தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை அனுப்புவதாக அறிவித்தார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஏன் சேர்க்கவில்லை என்ற கேள்வி எழுந்தபோது, இலங்கை அதிபர் ராஜபட்சவிடமிருந்து தனக்கு வந்த அழைப்பின் அடிப்படையிலேயே இந்தக் குழுவை அனுப்புவதாக முதலமைச்சர் கூறினார். வேண்டுமானால் எதிர்க்கட்சிகள் இந்திய அரசை அணுகி அனுமதி பெற்று அவர்கள் போகட்டும் என எகத்தாளம் செய்தார். இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற முறையில் ராஜபட்ச, தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அழைப்பு அனுப்பவில்லை. இலங்கை அரசின் அதிபர் என்ற முறையில் தமிழக முதலமைச்சருக்கு அவர் அழைப்பு அனுப்பினார். இது தனிப்பட்ட அழைப்பு அல்ல. அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான அழைப்பாகும்.முதலமைச்சர் என்ற முறையில் தனக்கு அனுப்பப்பட்ட அழைப்புக் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முதலமைச்சர் கலந்து ஆலோசித்து அனைத்துக்கட்சி குழுவை அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. அதற்கு ஆழமான உள்நோக்கம் உள்ளது.இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களோ, இந்த முகாம்களைப் பார்வையிட இதுவரை அனுமதிக்கப்படவில்லை.சர்வதேசப் பத்திரிகையாளர்களோ அல்லது உள்நாட்டுப் பத்திரிகையாளர்களோ கூட அனுமதிக்கப்படவில்லை. தனது நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையோ பத்திரிகையாளர்களையோ கூட முகாம்களைப் பார்வையிட அனுமதிக்காத ராஜபட்ச, கருணாநிதிக்கு மட்டும் அழைப்பு அனுப்பி அவர் அனுப்பிய தூதுக்குழுவை ராசோபச்சாரத்துடன் வரவேற்று விருந்தளித்து, பரிசுகள் தந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட முகாம்களைப் பார்வையிட அனுமதித்ததன் நோக்கம் என்ன?

முகாம்களில் உள்ள மக்களை உடனே விடுவிக்காவிட்டால் இலங்கைக்கு அளிக்கப்படும் பொருளாதார உதவிகள் நிறுத்தப்படும் என பிரிட்டன் உள்பட பல நாடுகள் எச்சரித்துள்ளன. இந்தச் சூழ்நிலையில் அந்நாடுகளிடம் காட்டுவதற்கு ராஜபட்சவுக்கு ஒரு நற்சான்றிதழ் தேவை. அதை வழங்குவதற்கு அவர் தேர்ந்தெடுத்த நபர்தான் கருணாநிதி ஆவார்.ராஜபட்ச விரும்பியதும் எதிர்பார்த்ததும் நடந்தது. காங்கிரஸ் ‐ தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிங்கள அரசு அழைத்துச் சென்ற இடங்களுக்கு மட்டுமே சென்றார்கள். அவர்கள் காட்டியவற்றை மட்டுமே கண்டார்கள். தாங்கள் விரும்பிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும் என ஒரு போதும் கேட்கவில்லை. இக்குழுவினர் சென்ற இடமெல்லாம், மக்கள் அவர்களிடம் எவ்வாறு தங்களுடைய குமுறல்களையெல்லாம் கொட்டியழுதார்கள் என்பது குறித்து இலங்கையிலிருந்து வெளிவரும் வீரகேசரி, உதயன், வலம்புரி ஆகிய நாளேடுகள் பக்கம் பக்கமாகச் செய்திகளை வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளன.

மலையகப் பகுதிக்கு இந்தக் குழுவினரின் வருகை ஏமாற்றத்தையே அளித்தது என மத்திய மாகாண சபை உறுப்பினரும் மலையகத் தமிழர்களின் தலைவருமான கணபதி கனகராஜ் தெரிவித்திருக்கிறார்.

இந்தக் குழுவில் சென்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் கொழும்பு வீரகேசரி நாளேட்டுக்கு அளித்த நேர்காணலில் சர்வதேச நியமங்களுக்கு உள்பட்டே இலங்கையில் அகதி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு மக்களின் பாதுகாப்புக்காகவே முள்கம்பிகள் போடப்பட்டுள்ளன என்று கூறியிருக்கிறார். இன்னொரு காங்கிரஸ் உறுப்பினரான ஜே.எம்.ஆரூண் இலங்கை செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்திய ஊடகங்களில் தெரிவிப்பதைப் போன்று இடம்பெயர் மக்கள் அவலங்களை எதிர்நோக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.இந்தக் குழுவினர் இலங்கை அதிபர் ராஜபட்ச அவருடைய சகோதரர்கள் பசில் ராசபட்ச, கோத்தபய ராஜபட்ச ஆகியோரைச் சந்தித்து அளவளாவியுள்ளனர்.

ராஜபட்சவுக்கு பொன்னாடை போர்த்தியும் பரிசுகள் தந்தும் தங்களின் பக்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அவரும் இவர்களின் விசுவாசத்தை மெச்சி, பரிசுகள் தந்து மகிழ்வித்திருக்கிறார். லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களின் ரத்தக் கறைபடிந்துள்ள ராஜபட்சவின் கரங்களை தமிழர்களே குலுக்கி மகிழ்ந்த அவலம் வரலாறு காணாததாகும். இக்குழுவினரை இலங்கைக்கு அனுப்புவதற்கு 20 நாள்களுக்கு முன்னதாகவே 22‐9‐09‐ல் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் கருணாநிதி, பின்வருமாறு அறிவித்ததை இப்பொழுது நினைவு கூரவிரும்புகிறேன்:

இலங்கையில் தமிழர்களின் மறுவாழ்வு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து வெளிவரும் தகவல்கள் நமக்குத் திருப்தியை அளிக்கின்றன. தமிழக அரசும் இந்திய அரசும் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக இலங்கை அரசின் மூத்த அதிகாரிகளும், அமைச்சர்களும் அவசரமாகக் கூடி தமிழர்களின் மறுவாழ்வு தொடர்பான நடவடிக்கைகள் எந்த நிலையில் இருக்கின்றன என ஆய்வு செய்துள்ளனர் என நாளேடுகளில் வெளிவந்த செய்திகளைச் சுட்டிகாட்டியுள்ள முதல்வர், இவையெல்லாம் திருப்தியளிக்கின்றன எனக் கூறியுள்ளார். 20 நாள்களுக்கு முன்னால், முதலமைச்சர் இவ்வாறு அறிவித்த பிறகு இலங்கைக்கு இவரால் அனுப்பப்பட்ட தூதுக்குழுவினர் இந்த அறிவிப்புக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட அறிக்கையை முதலமைச்சரிடம் அளித்திருக்கிறார்கள். இக்குழுவினர் சென்னை திரும்பியதும் முதலமைச்சர் கருணாநிதி மூலம் வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு கூறியிருக்கிறார்கள்:

முள்வேலி முகாம்களில் இருக்கிற மக்களின் துன்பங்கள் குறித்து அதிபர் ராஜபட்சவை நாங்கள் சந்தித்தபோது, அவரிடம் தொகுத்துக் கூறியுள்ளோம். இதனை மனிதாபிமான உணர்வோடு அணுகி, ஆவன செய்வதாக அவர் எங்களுக்கு வாக்களித்திருக்கிறார். முகாம்களில் உள்ள தமிழர்களை மறுகுடியமர்த்தும் கோரிக்கையை முன்வைத்தோம். மொத்தத்தில் முகாம்களில் உள்ள தமிழர்களை இலங்கை அரசு மீண்டும் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் நம்பிக்கையை இன்னும் இரண்டு வாரகாலத்தில் இலங்கை அரசு ஏற்படுத்தும் என்று தோன்றுகிறது.

இந்த அறிக்கையை வெளியிட்ட முதலமைச்சர் கருணாநிதி, செய்தியாளர்களிடம் அறிவித்ததில் முக்கியமானவை பின்வருமாறு:

1. 15‐10‐09 முதல் 15 நாள்களில் 58 ஆயிரம் மக்கள், முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள்.
2. அநாதைக் குழந்தைகள் உடல் ஊனமுற்றோர் தொண்டு நிறுவனங்களின் பராமரிப்பில் ஒப்படைக்கப்படுவார்கள்.3. இந்திய அரசு மேலும் உதவினால் நிலக்கண்ணி வெடிகள் விரைவில் அகற்றப்படும்.4. முகாம்களில் உள்ள தமிழ் இளைஞர்கள் யாரும் கடத்தப்படுவதில்லை. கொலைசெய்யப்படுவதும் இல்லை.5. தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்து, இலங்கை அரசுக்கு விவரமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் துன்பநிலை தொடராமல் பார்த்துக்கொள்ள இலங்கை அரசு ஒப்புக்கொண்டு அதற்கான ஒத்துழைப்பு இந்தியாவிலிருந்தும் கிடைக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. முதலமைச்சர் பட்டியலிடாத ஒரு சாதனையை குழுவின் தலைவர் டி.ஆர். பாலு கூறியிருக்கிறார். அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, இலங்கையும் ‐ தமிழகமும் தொழில் கண்காட்சி நடத்தி இருநாடுகளிடையேயும் தொழில் வணிகம் பெருகவும், தமிழகம் இலங்கையில் முதலீடு செய்யவும் வழிவகை இதன்மூலம் ஏற்படும் என்று கூறி புளகாங்கிதம் அடைந்திருக்கிறார். இலங்கையில் நடைபெற்ற போரில் சிங்களப் படையினர் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டது உறுதியாகியிருப்பதைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீது வணிகத் தடைவிதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. ஆனால் இலங்கையோடு தொழில் வணிகத்தைப் பெருக்குவதற்கான வழிவகைகளை முதலமைச்சரின் குழு ஆராய்ந்து கூறியுள்ள வெட்கக்கேடு நிகழ்ந்துள்ளது.தான் அனுப்பிய தூதுக்குழுவினர் ராஜபட்சவிடமிருந்து பெற்ற வாக்குறுதிகளை பட்டியலிட்டிருக்கிறார் முதலமைச்சர். ஆனால் அவருடைய அறிவிப்பை மாபெரும் சாதனையாகச் சித்திரித்து சுவரொட்டிகள் அச்சடித்து தி.மு.க.வினர் சென்னையெங்கும் ஒட்டியுள்ளனர். சுவரொட்டியில் உள்ள பசை உலர்வதற்கு முன்னாலேயே முகாமிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அனுப்பப்பட்ட 2,500 தமிழர்கள் நடுவழியில் மறிக்கப்பட்டு மற்றொரு முகாமில் அடைக்கப்பட்டுவிட்டதாகச் செய்திகள் வந்துள்ளன.செப்டம்பர் 15‐ம் தேதியன்று வவுனியா முகாம்களிலிருந்து 2000 தமிழ் அகதிகள் அனுப்பிவைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் இப்போது வேறு எங்கோ சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் 11‐ம் தேதியன்று யாழ்ப்பாணம் முகாமில் இருந்து 568 தமிழ் அகதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் கைத்தடி என்ற இடத்தில் மீண்டும் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அம்பாறை, திரிகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட 1706 அகதிகளும் அவரவர் வீடுகளுக்குப் போய்ச் சேராமல் வழியில் எங்கேயோ தடுத்துக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த விவரங்களை மனிதநேய நடவடிக்கைகளுக்கான ஐ.நா. சபையின் ஒருங்கிணைப்பு அலுவலகம் கூறியுள்ளது.

தமிழக மீனவர்கள் துன்ப நிலை தொடராமல் பார்த்துக்கொள்ள இலங்கை அரசு ஒப்புக்கொண்டுள்ளது என முதல்வர் கூறிய இரு நாள்களிலேயே அதாவது அக்டோபர் 18‐ம் தேதியன்று ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி அவர்களின் மீன்பிடி வலைகளை அறுத்தெறிந்து படகுகளையும் சேதப்படுத்தி விரட்டியடித்த செய்தி வெளியாகியுள்ளது. இலங்கை சென்ற தூதுக்குழு தனி முகாமில் அடைக்கப்பட்டுள்ள 12,500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இளம்பெண்கள் குறித்து எதுவும் விசாரித்தறியவில்லை என்பது அதிர்ச்சி தருகிறது. புலிகள் எனக் குற்றம் சாட்டி இவர்கள் பிரித்தெடுக்கப்பட்டு தனி முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் எத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஐ.நா.வுக்கான இலங்கைத் தூதுவர் பலித்த கோஹண என்பவர் அக்டோபர் 15‐ம் தேதி பின்வருமாறு கொழும்பில் அறிவித்தார்:

தனி முகாம்களில் உள்ள 12,500 பேர் புலிகளாவர். மேலும் மற்ற முகாம்களில் 10,000 புலிகள் இருக்கக்கூடும். இவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு அழிப்பதே எங்கள் நோக்கம் என்று வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சரான டேவிட் மிலிபண்ட் பின்வருமாறு கூறியுள்ளார்: இலங்கைப்போரில் பாதிக்கப்பட்டு முகாம்களில் வாழும் 12,500 பேரை விடுதலைப்புலிகள் என்று கூறி, தனி முகாம்களில் சிங்கள அரசு அடைத்து வைத்துள்ளது. ராணுவம் ஆய்வு நடத்திய முறை வெளிப்படையாக இல்லை என்பதால் இவர்கள் உண்மையிலேயே விடுதலைப்புலிகளா என்ற ஐயம் ஏற்பட்டிருக்கிறது.

அவர்களைச் சந்திக்க ஐ.நா. அமைப்புக்கோ அல்லது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கோ இன்றுவரை அனுமதியளிக்கப்படவில்லை என்பதும் கவலையளிக்கிறது என்று கூறியுள்ளார். உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள இந்த முகாமை தமிழகத் தூதுகுழு எட்டிப்பார்க்கவில்லை என்பது மட்டுமல்ல. அதுபற்றிய உண்மையைக் கூட விசாரித்தறிய முற்படவில்லை. எங்கேயோ பிரிட்டனில் இருக்கக்கூடிய வெளியுறவுத் துறை அமைச்சர், இந்த இளைஞர்கள் குறித்துக் கவலைப்படுகிறார். ஆனால் இலங்கைக்கே சென்ற தூதுக்குழுவினர் இதைப்பற்றிக் கொஞ்சமும் கவலையோ பொறுப்புணர்வோ இல்லாமல் நடந்துகொண்டுள்ளனர்.

முகாம்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்தும் அங்ககீனமாகியும் உள்ளனர். இயலாத முதியவர்களும் குழந்தைகளும் உள்ளனர். இவர்களுக்கு மருத்துவ வசதிகள் போதுமான அளவுக்கு அளிக்கப்படுகிறதா என்பது குறித்து இக்குழுவினர் விசாரித்து அறிந்ததாகத் தெரியவில்லை.

குடும்பங்கள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு முகாம்களில் பிரித்து அடைக்கப்பட்டுள்ளவர்களை ஒன்றாக வைக்கவேண்டும் என இக்குழுவினர் வலியுறுத்தியதாகவும் தெரியவில்லை.கடற்கரை மாவட்டங்களில் வாழும் மக்கள் மீன் பிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி அந்த மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கவேண்டும் என இக்குழுவினர் கேட்டதாகவும் தெரியவில்லை.முகாம்களில் உள்ளவர்களின் முழுமையான பட்டியல் இருக்கிறதா என்று கேட்டு அதைப் பார்வையிட்டு சிலரையாவது அழைத்துப் பேசி உண்மை அறிந்தார்களா என்பதற்கும் சான்று இல்லை. போரின் கடைசிக் கட்டத்தில் இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் விவரப்பட்டியலை குழுவினர் கேட்டதாகவும் தெரியவில்லை.

இந்தியா உள்பட உலக நாடுகள் அளித்த உதவி முறையாக செலவிடப்பட்டதா என்பது குறித்து விசாரித்து அறியவோ அல்லது அதைக் கண்காணிக்க சர்வதேச குழு ஒன்று அமைக்கவேண்டும் என்று வலியுறுத்தவோ இக்குழுவினர் எந்த முயற்சியும் செய்ததாகத் தெரியவில்லை.

தமிழகக் குழுவின் பயணம் ராஜபட்சவுக்குச் சாதகமான அறிக்கை அளிப்பதற்காகவே சென்றுள்ளது என்ற சந்தேகம் வலுப்படுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே தனக்குச் நற்சான்றிதழ் அளித்துவிட்டார்கள் என அவரைக் குறை சொல்லும் நாடுகளுக்கும் ஐ.நா. அமைப்புக்கும் கூற இந்த அறிக்கை ராஜபட்சவால் பயன்படுத்தப்படுமே தவிர முகாம்களில் உள்ள மக்களின் துயரைப் போக்குவதற்கு எள் முனை அளவு கூட உதவாது. போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிக்கிக்கொண்ட லட்சக்கணக்கான மக்களைக் காப்பாற்ற இந்திய அரசு தவறிவிட்டது. இங்கிருந்து கப்பல்களை அனுப்பி அந்த மக்களைப் பத்திரமாக இந்தியாவுக்குக் கொண்டுவந்திருக்கலாம்.

1983‐ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கொழும்பு நகரில் தமிழர்களுக்கு எதிரான இனவெறிப் படுகொலை தாண்டவமாடியபோது, இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி இரண்டு கப்பல்களை அனுப்பி கொழும்பு நகரில் சிக்கிக்கொண்ட தமிழர்களை மீட்டெடுத்து யாழ்ப்பாணத்தில் கொண்டு சேர்க்க உதவினார். ஆனால் மன்மோகன் சிங் அரசு அந்த மனிதநேய கடமையைக் கூட செய்யத்தவறிவிட்டது. இந்த மாபெரும் தவறை மூடி மறைக்க அவருக்கும் கருணாநிதியின் இந்த நற்சான்றிதழ் உதவும். ôஜபட்சவை போர்க் குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் என உலக நாடுகளின் குரல் வலுத்துவரும் இந்த வேளையில் அவரைச் சந்தித்து பொன்னாடை போர்த்தி பரிசுகள் தந்து மகிழ்ந்த இக்குழுவினரை என்னென்று சொல்வது.

1936‐ம் ஆண்டில் இத்தாலியின் சர்வாதிகாரியாக முசோலினி திகழ்ந்தபோது, காங்கிரஸ் தலைவராக இருந்த ஜவாஹர்லால் நேரு சுவிட்சர்லாந்தில் தனது மனைவி கமலாவின் சிகிச்சைக்காகத் தங்கியிருந்தார். கமலா அங்கேயே காலமானார். இச்செய்தியை அறிந்த முசோலினி சுவிட்சர்லாந்தில் இருந்த இத்தாலியத் தூதர் மூலம் நேருவுக்கு இரங்கல் கடிதம் ஒன்றை அனுப்பினார். அத்துடன் தனது விருந்தினராக ரோம் வந்து தங்கும்படியும் அவருடன் பேச விரும்புவதாகவும் செய்தியனுப்பினார். ஆனால் ஜவாஹர்லால் நேரு, இந்த அழைப்பை ஏற்க மறுத்தார். ஆப்பிரிக்காவில் உள்ள அபிசீனியா மீது படையெடுத்து நச்சு வாயு குண்டுகளை வீசி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த ஒரு பாசிச சர்வாதிகாரியான முசோலினியின் ரத்தக் கறைபடிந்த கரங்களால் அனுப்பப்பட்ட அழைப்பை ஏற்க மறுக்கிற துணிவு ஜவாஹர்லால் நேருவுக்கு இருந்தது. அபிசீனிய மக்களோடு எத்தகைய ரத்தத் தொடர்பும் நேருவுக்கு இல்லை. ஆனாலும் அவரிடம் இருந்த மனிதநேய உணர்வு அவரை இவ்வாறு செய்ய வைத்தது.

ஆனால் நம்முடன் தொப்புள் கொடி உறவு கொண்ட ஈழத்தமிழர்களின் ரத்தத்தால் நனைந்து கறைபடிந்திருக்கிற ராஜபட்சவின் கரங்களைக் குலுக்கி நட்பு பாராட்ட தன் மகள் உள்பட தமிழர்களைக் கொண்ட குழுவையே அனுப்பி உறவு கொண்டாடிய கருணாநிதியின் மனித நேய உணர்வையும் மான உணர்வையும் என்னென்று சொல்வது?