வீரத் தமிழ் மகன் முத்துக்குமாரனுக்கு கிறபுண்டன் வாழ்தமிழ் மக்களின் வீரவணக்கம்
01.02.09 அன்று கூர் இல் மதியம் 12.00 மணியளவில் நடைபெற்ற வீரத் தமிழ் மகன் முத்துக்குமாரனின் வீரவணக்க நிகழ்வில் கிறபுண்டன் ஆலயத்தின் ஆன்மீகக் குருவாக பணியாற்றும் திரு. கஜேந்திர குருக்களால் முத்துக்குமாரனின் படத்திற்கு மலர்மாலை அணிவித்து ஈகைச்சுடரினையும் ஏற்றி வைத்தார்.
இதனை தொடர்ந்து குருக்கள் ஆற்றிய உரையில், முத்துக்குமாரனின் அஞ்சலி வணக்கத்தில் கலந்து கொண்டதில் நிறைவடைவதாகவும் தமிழகத்தின் அரசியல் கட்சி தலைவர்கள் செய்வதறியாது திணறிய வேளையில் முத்துக்குமாரனின் வீரச்செயல் அரசியல் தலைவர்களையும் 15 லட்சம் ஈழமக்களின் மனதிலும் புதியதோர் உணர்வைத் தூண்டியுள்ளது. நல்ல தலைவன் கிடைக்காமையால் முத்துக்குமாரன் தனது உண்ர்வை இவ்வாறான ஒரு முடிவை கொடுத்ததாகவும்
நல்ல தலைவன் கிடைத்ததால் ஈழமக்கள் எத்துன்பத்திலும் சிரித்தபடி இருப்பதாகவும் இந்தியப்படையில் ஓய்வு பெற்ற உளவுத்துறை ஆராய்வாளரால் பிரபாகரன் மீண்டும் எழுந்து நின்றால் அது மந்திரச் செயல் என்றும் ஆனால் பிரபாகரன் என்ற சொல்லே ஒரு மந்திரச் சொல் என்றும் கூறி இருந்தார்.


இத்தாலி தொலைக்காட்சியில் 2 நிமிடம் ஈழமக்கள் பிரச்சனை பற்றி கூறியதாகவும.; 20 நிமிடம் எங்கள் பிரச்சனை பற்றி கூற இருப்பதாகவும் சொன்னார். ஏந்தத் தடவையும் இல்லாத ஒரு நெருக்கடியான அரசியல் பிரச்சனை தலைவர் அவர்களை இம்முறை சூழ்ந்திருப்பதால் எங்கள் விருப்பு வெறுப்புக்கு அப்பால் இம்முறை கூடி
எங்களின் ஆதரவை தரவும் தனது 32 வருட அரசியல் தொடர்பில் மேடையில் தனது கருத்தையும் ஒத்துழைப்பையும் தருவதாக கூறி
தனது உணர்வுபூர்வமான உரையை ஆற்றியிருந்தார்.
எங்களின் ஆதரவை தரவும் தனது 32 வருட அரசியல் தொடர்பில் மேடையில் தனது கருத்தையும் ஒத்துழைப்பையும் தருவதாக கூறி
தனது உணர்வுபூர்வமான உரையை ஆற்றியிருந்தார்.
குருக்கள் உரையை தொடர்ந்து செல்வி சுருதி அவர்கள் கவிதையில் முத்துக்குமார் அண்ணா எங்கள் ஈழமண்ணின் சொத்து என்ற உணர்வான கவிதையையும் தொடர்ந்து திருமதி சீதா கவிதையின் முத்துகுமாரின் செயல் கரும்புலிகளுக்கு ஒப்பான செயல் எனவும் கவிதையிலும் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து திருமதி கௌரி கவிதையில் தாயகமும் தமிழகமும் தாம் இணைந்து போராட வழிவகுத்த வீரமறவனின் செயல் எனவும் தனது கவிதையில் வடித்திருந்தார்.



கிறபுண்டன் மாநிலப் பொறுப்பாளர் திரு. அல்பேட் அவர்கள் வழங்கிய சிற்றுரையில் அன்று சங்கர் சத்தியநாதன் இவ்வாறான செயலின் மூலம் தனது உணர்வை வெளியிட்டார். இன்று இந்த வீரமறவன் தனது செயலால் தமில் மக்கள் மனதில் புதியதோர் உணர்வை தட்டியெழுப்பி உள்ளான். எங்களுக்குக்கென்று ஒரு நாடு கேட்பதில் தவறா? நாங்களும் மற்றவரைகளைப் போல் சுதந்திரமாக வாழவும் எங்களை ஒர் இனமாக அங்கீகரிக்க ஏன் மறுக்கிறார்கள்.

சங்கிலியன் பண்டாரவன்னியன் ஆண்ட எமது மூதாதையர் வாழ்ந்த நாடு. இதனை எமக்கு தருவதில் ஏன் சிங்கள அரசு மறுக்கிறது எனவும் இன்றைய நிகழ்வு வீரவணக்கத்துடன் கூடிய ஒரு நிகழ்வாகவும் ஈழத்தில் வன்னியில் அவதியுறும் மக்களுக்கு உதவும் வகையில் நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். இதனை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் எனவும் தாழ்மையாகக் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் எல்லாம் எமது கிறபுண்டன் வாழ் மக்கள் எழுந்து நின்று அமைதியான முறையில் தங்கள் உணர்வைக் காட்டியதுடன் முத்துக்குமாரனின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி தங்களின் உணர்வையும் அகவணக்கத்தையும் தெரிவித்தனர்.







