யேர்மனியில் நூறன்பேர்க், லண்டோ நகரங்களில் ஊர்வலங்கள் முன்னெடுப்பு.

| |

தமிழ்இன அழிப்பை நிறுத்துவதற்கு யேர்மனிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரி தமிழ்கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தால் நேற்று சனிக்கிழமை யேர்மனி நூறன்பேர்க் நகரில் கண்டன ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இவ் ஊர்வலத்தில் தமிழ்மக்கள் சிறீலங்கா அரசபடைகளால் கொல்லப்படுவதை எடுத்துக்காட்டும் பதாதைகள் மற்றும் தமிழீழத்தேசியத் தலைவரின் படங்கள் தமிழீழத் தேசியக்கொடி என்பவற்றை மக்கள் தாங்கிச் சென்றதுடன் ஊர்வல முடிவின் யேர்மனி அரசுத்தலைவருக்கான மகஐர் வண.பிதா அன்ரனி பாலா அவர்களால் நூறன்போர்க் நகர முதல்வரிடம் கையளிக்கப்பட்டது

இதே வேளை லண்டோ நகரமக்களாலும் கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்படதுடன் நகரமுதல்வரிடம் மகஐர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.


Posted by எல்லாளன் on 10:20 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response