லண்டன் ஈஸ்காமில் ஈகத்தியாகிகளின் நினைவஞ்சலி நிகழ்வு
சிங்கள இனவாத அரசு ஈழ தமிழனை ஈவிரக்கமின்றி இனசுத்திகரிப்பு செய்வதற்கு இந்திய நாடு மற்றும் உலகநாடுகள் உதவ கூடாது என பலராலும் பலவழிகளில் எடுத்துரைத்தும் பயனற்று. இதன் கடைசி அத்தியாயமாக தம்மையே ஆகுதி ஆக்கி காட்டவேண்டும் என்று முடிவெடுத்து ஆகுதியான முத்துக்குமார் முதல் ஈகத்தியாகிகளின் நினைவஞ்சலி நிகழ்வு நேற்று பிரித்தானிய கிழக்கு வாழ் தமிழ் உணர்வாளர்களால் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்திய தமிழர், மலேசிய தமிழர், மொறிசியஸ் தமிழர், ஈழத்தமிழர் அனைவரும் ஒன்றாக நாம் தமிழர் எனற ஒருமைப்பாட்டின் கீழ் பல நூற்றுக்கண்க்கான மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்ட்டனர்.
மேடையில் பேசியவர்களும், நிகழ்வில் பங்கேற்றவர்களும், இந்திய, ஈழத்தமிழர்களின் உறவு அன்று முதல் இந்த கணம் வரை ஒன்றாகவே இருக்கின்றது. ஆனால் ஒரு சில அரசியல் தலைவர்களே பிரித்து வைத்திருப்பதாக தமது ஆதங்கங்களை தெரிவித்திருந்தனர்..
ஈழத்த்மிழர் சுதந்திரமாக வாழ இங்கு வாழும் தமிழர்கள் ஒன்றிணைந்தால் மட்டும் போதாது. வேற்றின மக்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து தொலைபேசிக்கூடாகவும் பல உரைகள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.







