பின்லாந்து தலைநகர் கெல்சிங்கியில் மேநாள் ஊர்வலம்
பின்லாந்தின் தலைநகர் கெல்சிங்கியில் அமைந்துள்ள மத்திய பேருந்து தரிப்படத்தின் முன்பாக காலை 10.30 மணியளவில் மேநாள் ஊர்வலம் ஆரம்பமாகியது
பல்லாயிரக்கணக்கான பின்லாந்து மக்களுடன் தமிழ் மக்களும் இணைந்து இவ் ஊர்வலத்தை சிறப்புடன் நடத்தினர்.
இவ் ஊர்வலமானது, மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகி Hakaniemi என்னுமிடத்தில் நிறைவு பெற்றது.
சுமார் 4 கி்.மீ. தூரம் இவ் ஊர்வலம் நகர்ந்து சென்றது. இதன்போது தமிழ் மக்களால் எமது தேசியக்கொடி, தேசியத்தலைவரின் புகைப்படம், இனவழிப்பைச் சுத்திகரிக்கும் பதாதைகள் என்பன தாங்கிச் செல்லப்பட்டன.
சிறிலங்கா அரசே! தமிழின அழிப்பை நிறுத்து!
சிறிலங்கா அரசே! இனச்சுத்திகரிப்பை நிறுத்து!
சர்வதேசமே! தமிழீழத்தை அங்கீகரி!
போன்ற கோசங்கள் தமிழ் மக்களால் எழுப்பிச்செல்லப்பட்டதோடு, செல்லும் பாதையெங்கும் குழுமி நின்ற ஏராளமான மக்களுக்கு எமது போராட்ட விபரங்கள் உள்ளடங்கிய துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது. இதனால் பல மக்களினது கவனமும் எம்பால் ஈர்க்கப்பட்டது.
பின்னர் மதியம் 12.00 மணியளவில் இவ் ஊர்வலம் நிறைவு பெற்றது.







