பிரித்தானியாவில் ரிம் மார்ட்டினின் 13 வது நாள் பட்டினிப் போராட்டமும்; இலங்கையில் தடுப்பு முகாம்களில் வாழும் தமிழ் மக்களின் பிரதிபலிப்பும்
தமிழ் மக்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து அகற்றி ஒரு காட்டை அழித்து தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்திருக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான புலம்பெயர் தமிழர் போராட்டத்தில் நேற்று( 30.05.09) பிரித்தானியாவில் பல்வேறு விதமான கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
தடுப்பு முகாம்களில் தவிக்கும் தமிழ் மக்களை காப்பாற்றும் நோக்கத்துடன் 4 அம்ச கோரிக்கையை முன்வைத்து 13 வது நாளாக தமிழ் மக்களின் பிரதியான ரிம் மார்ட்டின் அவர்கள் ஆகாரம் அற்ற பட்டினிப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார்.
இவருக்கு ஆதரவாக 5 தாய்மார்கள் தொடர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
பிரித்தானியா மக்களுக்கு இலங்கையில் தடுப்பு முகாம்களில் வாழும் மக்களின் அவலத்தை பிரதிபலிக்கும் முகமாக இலண்டன் மையப் பகுதியில் ஒன்றான Trafalgar அல்கர் சதுக்கத்தில் இளையோரால் தெரு நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டது.
அதிகமான சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியாக அமைந்திருந்ததால் பல சுற்றுலா பயணிகள் இந்த தெரு நாடகத்தை கூர்மையாக உன்னிப்பாக அவதானித்து பார்த்தனர். அவர்களுக்கு தமிழ் மக்களின் அவலத்தை தாங்கிய துண்டுபிரசுரங்களும் வழங்கப்பட்டது.
இதேவேளை சர்வதேச காணாமல் போனோர் அமைப்பினரால் சிறிலங்கா போரில் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்கள் அவர்களின் உறவினர்கள் மூலம் பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் சேகரிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி துருக்கி மற்றும் தமிழ் மக்களின் அவலத்தை அகண்ட திரையின் ஊடாக பிரித்தானிய மக்களுக்கு வெளிக்காட்டினர்.











Labels
Contributors
Popular Posts
Blog Archive
- ► 2012 (30)
- ► 2011 (416)
- ► 2010 (507)
- ▼ 2009 (2007)
My Blog List
-
-
-
-
-
-
-
-
அன்னையே! நாம்வணங்கும் ஆலயமே!11 months ago







