ஜேர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்ற மாபெரும் பேரணி: 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பு

| |

சிறீலங்கா அரசுமேற்கொண்ட தமிழ்இனஅழிப்பிற்கு உரியவிசாரனைகள் ஐ.நாடுகள் சபை மேற்கொண்டு போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரசிற்கு உரியதண்டனை வழங்கவேண்டும் எனக்கோரியும் சிறீலங்கா அரசபடைகளின் தடுப்புமுகாம்களில் உள்ள தமிழ்மக்களை ஐக்கியநாடுகள் சபை பொறுப்பெடுத்து

அம்மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனக்கோரியும் யேர்மன் தலைநகர் பெர்லின் நகரில் மாபெரும் பேரணி ஒன்று தமிழ்மக்களால் நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

பேர்லின் வெளிநாட்டு அமைச்சிற்கு முன்பாக நேற்று காலை 11.30 க்கு ஆரம்பித்த பேரணி மதியம் 2.30 மணிக்கு பேர்லினில் பிரசித்தி பெற்ற பிறன்பேர்க்க ரோர் எனும் இடத்தைச் சென்றடைந்தது

25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட இம் மாபெரும் பேரணி பல கிலோமீற்றர் தூரத்தை மக்கள் வெள்ளமாக நிறைத்திருந்ததது

http://cache.daylife.com/imageserve/04vS08NcYC7bK/610x.jpg

யேர்மனியின் பிரதான வீதிகள் ஊடாக நகர்ந்த இப்பேரணியில் பங்கொண்ட மக்கள் தாயகத்தில் மக்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் அம்முகாம்களில் மக்கள் படும் அவலத்தை விளக்கும் சுலோகங்களைத் தாங்கிச் சென்றதுடன் தேசியக்கொடி மற்றும் தேசியத்தலைவர் ஆகியோரின் படங்களையும் தாங்கிச் சென்றதுடன் கொத்தொலிகளையும் எழுப்பிச்சென்றனர்.

இப்பேரணி முடிவிடத்தை சென்றடைந்ததும் ஈகைச்சுடர் ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. ஈழத்தின் கதை எனும் தலைப்பில் யேர்மனிய மொழியில் இளையோரால் நிகழ்த்தப்பட்ட நாடகம் மக்களை பெரிதும் ஈர்த்திருந்தது

அத்துடன் யேர்மனிய மொழியில் இளையோர்கள் தற்போதைய நிலைமைகள் சம்பந்தமாக உரையாற்றினர். தமிழர்களின் இலட்சியத்தை அடைய நாம் எல்லோரும் என்றும் துணையாக இருப்போம் என்ற உறுதிமொழியுடன் மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

http://cache.daylife.com/imageserve/0eadbQxe12dQt/610x.jpg

http://cache.daylife.com/imageserve/04lI7QY6bh7fy/610x.jpg

http://cache.daylife.com/imageserve/04mtgs0beKgLm/610x.jpg

http://cache.daylife.com/imageserve/07Bs4gz1A76Xi/610x.jpg

Posted by எல்லாளன் on 5:04 AM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response