இத்தாலி மாந்தோவா மாநகரின் கஸ்தல் கோல்ப்ரதோ எனும் இடத்தில் நடைபெற்ற நினைவு அஞ்சலியும் கண்டனப் போராட்டமும்

| |

31-05-2009 ஞாயிற்றுக்கிழமை இத்தாலி மாந்தோவா மாநகரின் கஸ்தல் கோல்ப்ரதோவிலுள்ள பியாட்சா மர்திரியில் காலை 9.35 மணியளவில் நினைவு அஞ்சலி நிகழ்வு ஆரம்பமாகியது. பொதுச்சுடரினை இத்தாலி மேற்பிராந்திய தமிழர் ஒன்றியத்தின் மாந்தோவா பொறுப்பாளர் திரு. தோமஸ் மரியதுரை அவர்கள் ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து எமது மண்ணின் சுதந்திரத்திற்கான வேள்வியில் தமது இன்னுயிர்களை ஈகம்செய்த மாவீரர்களுக்கும் சிங்கள இனவாத அரசால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து எமது கல்லறைப்

பாசறையில் கலந்துகொண்ட அனைத்து மக்களும் மலர்வணக்கம் செலுத்தினர்.

http://farm4.static.flickr.com/3567/3584274673_50b3de3b74.jpg?v=0

http://farm4.static.flickr.com/3365/3585081216_35607b281e.jpg?v=0

நிகழ்வில் அடுத்ததாக வரலாற்று உரை செல்வி ஸிந்து அவர்களால் அளிக்கப்பட்டது. நிகழ்வின் ஆரம்ப உரை திரு. வேலுப்பிள்ளை செந்தில்நாதன் அவர்களால் வழங்கப்பட்டது. அடுத்த நிகழ்வாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. அதனிடையே செல்வி ஜோதிகா குகதாஸ் அவர்களால் இத்தாலி மொழியில் நாட்டின் தற்போதைய நிலைகள் விளங்கவைக்கப்பட்டது. அடுத்ததாக செல்வி கஜசிந்திகா லலிதகுமார் இத்தாலி மொழியில் உரையாற்றினார். இந்நிகழ்வில் இறுதியாக திரு. வேலுப்பிள்ளை செந்தில்நாதன் நன்றியுரை வழங்க நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற தாயகப் பாடலுடன் நண்பகல் 12.45 மணியளவில் நிறைவுபெற்றது.

http://farm3.static.flickr.com/2434/3585081320_50d10d0071.jpg?v=0

Posted by எல்லாளன் on 5:05 AM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response