துரோகத்திற்கு துணைபோவதும் துரொகமே சரிந்த பெயரை நிமிர்த்த முற்படுகின்றதா " புதினம் "

Posted on 8:52 AM by எல்லாளன்

குழப்பத்தின் நாயகன் தெய்வீகனும் செய்வதறியாது திணறும் புதினமும்

என்ற கட்டுரையிலிருந்து

அதன்படி புதினம் நடத்துபவரிடம் தொடர்பு கொண்டு
முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 3!
தி.வழுதி
இந்த கருத்துக்களம் 'புதினம்' இணையத்தளத்துக்காக எழுதப்பட்டதாகும்.

இந்தக் கட்டுரையை பிரசுரிக்கும்படி கூறியுள்ளனர்.

இதை பிரசுரிக்காவிட்டால் இந்த தளத்தை நடத்தவிடமாட்டோம் என்று கூறி பிரசுரிக்கச் செய்தார்கள்.

--------------
இது நம்பும் படியாக இல்லையே சரிந்த பெயரை நிமிர்த்த முற்படுகின்றதா புதினம் ?

தமிழ்மக்களின் விடிவிற்கு தமது உயிரைக் கூட துச்சமாகமதித்து வீரகாவியம் படைத்த மறவர்கள் புலிகள்

ஆனால் இவர்கள் இணையத்தை நடாத்துவதற்கு புலிகளுக்கும் எதிராகவும் தமிழ்மக்களுக்கும் எதிரான துரோகத்திற்கு துணைபோவதும் துரொகமே

தமிழர்களுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு துணைபோய் ஒரு இணையத்தை யாருக்காக நாடாத்தவேண்டும் ??

நீங்கள் இருபக்கமும் எழுதும் நடுநிலை ஊடகம் என்றால் இவ்வளவு காலமும் ஏன் அப்படி எழுதவில்லை ???

இதுவரை தமிழ்த்தேசியத்தை மட்டுமே எழுதியது ஏன் ???

இதிலும் பார்க்க இணையத்தை மூடலாமே ???

தமிழ்மக்களுக்கு எதிராக கட்டுரையை பிரசுரிக்க முற்படுவதும் துரொகமே அப்படியானல் உங்களின் கூற்றுப்படியும் புதினமும் துரோகியே

-------------------

கட்டுரை இனி.............

"செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா" இப்படி ஒரு வரி கர்ணன் படத்தில் 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' எனத் தொடங்கும் பாடலில் வருகிறது.

இதே நிலைதான் இன்று புதினத்தை நடத்துபவருக்கும் நிகழ்ந்துள்ளது.

இவரை சுற்றி இருக்கும் பலரும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு என்ற போலி நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புகிற இவரும் இவர்களிடம் ஆலோசனை கேட்டே இந்த தளத்தை நடத்தி வருகிறார்.இப்படி ஆலோசனை வழங்குபவர்களின் கட்டுரையையும் அப்பப்போது தனது தளங்களில் பிரசுரித்து வந்துள்ளார். இவர்களுடன் சுற்றி இருந்த கூட்டமானது விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களுடன் இருந்தே விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நடித்து காரியத்தை கச்சிதமாக முடிக்க பகைவனால் அனுப்பப்பட்ட கூட்டம்.

இவர்களின் கச்சிதாமான நடிப்பை நம்பி இவர்கள் சொல்வதை கேட்டு இணையத்தை நடத்திக் கொண்டிருந்தவருக்கு இப்போதுதான் பிரச்சினை தொடங்கியது. இவ்வளவுகாலமும் அமைதியாக இருந்த கூட்டம் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள் என்று அரசாங்கம் அறிவித்த உடன் தனது சுயரூபத்ததைக் காட்டத் தொடங்கியது.

இச் சூழலைப் பயன்படுத்தி புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழீழ ஆதரவாளர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி அவர்கள் மனங்களில் தலைவர் அவர்களைப்பற்றி அவர்களிடம் தப்பான அபிப்பிராயத்தை ஏற்படுத்த முயன்றது. அதை எப்படிச் செய்யலாம் என்று யோசித்தபோதுதான் அவர்கள் புதினத்தை பயன்படுத்த முடிவுசெய்தார்கள். அவர்கள் புதினத்தை பயன்படுத்த முடிவு செய்ததற்கு வலுவான காரணம் ஒன்றுள்ளது.

அதாவது இவ்வளவு காலமும் விடுதலைப் புலிகளுக்கும் தமிழீழத் தேசியத்தலைவருக்கும் ஆதரவாக இருந்த இணையத்தில் தலைவரைப்பற்றி அவரின் மதிப்பைக் குறைக்கக்கூடிய வகையில் கட்டுரை பிரசுரிக்கப்பட்டால் மக்கள் அதை நம்புவார்கள் என்று நினைத்தார்கள்.

அதன்படி புதினம் நடத்துபவரிடம் தொடர்பு கொண்டு இந்தக் கட்டுரையை பிரசுரிக்கும்படி கூறியுள்ளனர். இதை பிரசுரிக்காவிட்டால் இந்த தளத்தை நடத்தவிடமாட்டோம் என்று கூறி பிரசுரிக்கச் செய்தார்கள்.

இந்தக்கட்டுரை வழுதி அவர்கள் எழுதியதாகத்தான் நாம் எல்லாம் நினைத்துக்கொண்டுள்ளோம்.

ஆனால் இந்தக் கட்டுரையை எழுதியவர் வேறு ஒருவர் எனத் தெரியவருகிறது. இவரின் பெயர் தெய்வீகன்.

இவர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளனாக தன்னை தமிழ் சமுதாயத்தில் நிலைநிறுத்திக்கொள்ள சகல பிரயத்தனங்களும் செய்து ஒருவிதத்தில் அதில் வெற்றியும் அடைந்தவர்.

ஈபிடிபி ஆதரவாளரான இவர் அவர்களின் பணிப்பின்பேரில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளனாக நடிக்கத் தொடங்கினார். அதன் ஒருகட்டமாக விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான பத்திரிகைகளான உதயன் மற்றும் வீரகேசரிப் பத்திரிகையில் இணைந்து பணிபுரிந்துவிட்டு வெளிநாடு ஒன்றுக்குச் சென்று அங்கே இருந்து செயற்பட்டுருகிறார்.

இவரின் மாமனார் ஈபிடிபியில் ஒரு முக்கியமான நபர். அவரின் கட்டளையின்படியே இவர் அனைத்துவேலைகளையும் செய்துகொண்டிருக்கிறார். இவருக்கு கொடுக்கப்பட்ட இரண்டு முக்கியபணிகள்.

அதில் ஒன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்குள் ஊடுருவி அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை பெற்று அந்த அமைப்பை ஈபிடிபிக்கு ஆதரவாக செயற்படவைப்பது

மற்றொன்று புலி ஆதரவு ஊடகங்களை தங்கள் பக்கம் இழுப்பது.இதில் முதலாவது வேலைத்திட்டத்தில் மும்முரமாக இறங்கிய இவர் சில இளைஞர்களை சேர்த்துக்கொண்டு அந்தமைப்பினர் விவேகமாக வேகமாக செயற்படவிலலை என்று காரணம் கூறி அமைப்பின் தலைவர் பதவியை கைப்பற்ற முயன்றார்.

இவரின் சுயரூபம் தெரிந்தவுடன் இவருக்கு ஆதரவாக இருந்த இளைஞர்கள் இவருக்கு ஆதரவு கொடுப்பதை நிறுத்தி இவர் சம்பந்தமாக பெரியோரிடம் முறையிட்டனர். இதனால் தான் புலி ஆதரவாளன் இல்லை என்று அனைவருக்குமே தெரிநதுவிடுமோ என்று பயந்த இந்த எட்டப்பன் உண்ணாவிரதம் என்ற ஆயுதத்தை கையிலெடுத்தார்.

அதாவது பக்கத்து மாநிலத்தில் சில இளைஞர்கள் நான்கம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் தொடங்கி மூன்றாவது நாள் இந்தச் சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தவேண்டும் என்று எண்ணிய இந்தப் பச்சோந்தி இரு இளைஞர்களுடன் சேர்ந்து உண்ணாவிரத்தை ஆரம்பித்தது. இவருடைய உண்ணாவிரதத்தை நினைத்தால் எல்லோருக்குமே சிரிப்புத்தான் வருமாம்.

பக்கத்து மாநிலத்தில் இருந்துவந்த இளைஞர்கள் ஒரு சொட்டுத் தண்ணிகூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்தபோது இவர் தோடம்பழச்சாறும் பாலும் அருந்திக் கொண்டிருந்தாராம். அதைவிட இந்த உண்ணாவிரதம் தொடர்ச்சியாகச் சென்றால் தமிழருக்கு சார்பாக அரசாங்கம் திரும்பிவிடுமோ என்று அஞ்சிய இவர் பலதில்லுமுல்லுகள் செய்து தங்களுடைய உண்ணாவிரத்தைமட்டுமல்ல பக்கத்து மாநில இளைஞர்களின் உண்ணாவிரத்தையும் முடித்துவிட்டார்.

3 நாட்கள் இவர் இருந்த உண்ணாவிரத்தால் தான் தமிழீழ ஆதரவாளன்தான் என்று நிரூபிக்க முயன்று அதில் வெற்றியும் கண்டார்.

அடுத்தது ஊடகம் இவர் இங்கே வந்திறங்கிய காலத்திலிருந்தே படிப்படியாக புதினம் நடத்துனரிடம் கதைத்து அவருக்கு சில செய்திகள் மற்றும் கட்டுரைகளைக்கொடுத்து தனது நட்பை வலுப்படுத்திக் கொண்டார்.

இன்றைய காலத்தை தங்களுக்கு சாதமாகப் பயன்படுத்ததிட்டமிட்ட தேசவிரோதிகள் இவரிடம் இப்படியான கட்டுரை ஒன்றை எழுதி வழுதி என்ற பெயரில் பிரசுரிக்கச் செய்ததாகவும் மற்றும் பல புலிகளின் பொறுப்பாளர்களின் பெயர்களில் அறிக்கைகளை வெளியிடச் செய்து மக்களைக் குழப்பும் வேலையிலும் இவர் இறங்கியுள்ளார.

அண்மையில் தயாமோகனின் அறிக்கை என்று வேறோர் இதழில் வெளியான அறிக்கையும் செம்மலை என்ற பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கையும் இவரால் எழுதப்பட்டவை என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் உள்ளது.

இதைவிட தனக்குத் தெரிந்த இளையோரிடம் தலைவர் மற்றும் விடுதலைப்புலிகள் சம்பந்தமாக தப்பான கதைகளைச் சொல்லிவருவதாகவும் அவர் கூறுவது உண்மையா என பல இளையோர் எம்மிடம் தொடர்புகொண்டு கேட்டனர். இப்பொழுது அந்தக் கட்டுரையில் உள்ளவிடயங்கள் சரிதான் என்று நிருபிக்க ஆதரவு தேடிக்கொண்டிருக்கிறார் தெய்வீகன்.

கட்டுரை எழுதிய வழுதியே (???) அமைதியாக இருக்கும்போது அந்தக்கட்டுரைக்கு ஆதரவு தேட முயல்வது ஏன் என்பது எல்லோருக்குமே தெளிவான உண்மை

இந்தக் கட்டுரை மட்டுமல்ல விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெயரில் அறிக்கைகள்விட்டதும் விடப்போவதும் எமக்குள்ளேயே ஊடுருவி எம்மைக் குளப்ப முயல்பவர் கடந்த ஒருவருடமாக வேலையேதும் பார்க்காமல் ஈபிடிபியின் சம்பளம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு நம்பிக்கையாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் தெய்வீகன்.

மக்களே தலைவர் துரோகிகளைப்பற்றி கூறிய

"எதிரிகளைவிட துரோகிகளே ஆபத்தானவர்கள்"

என்ற சிந்தனையை நிலைநிறுத்தி துரோகிகளை ஒதுக்கி எமது இலட்சியத்தை நோக்கி முன்னகர்வோம்.


மெய்விளம்பி




No Response to "துரோகத்திற்கு துணைபோவதும் துரொகமே சரிந்த பெயரை நிமிர்த்த முற்படுகின்றதா " புதினம் ""