தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்கக்கூடிய தமிழ்தேசிய கூட்டமைப்பின் இலங்கை தமிழரசுக் கட்சிக்கே வாக்களியுங்கள்

| |

தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அபிலாசைகளையும் உரிமையையும் நேர்மையுடன் வென்றெடுக்கக்கூடிய தமிழர்களின் சக்தியாய் தமிழர்களின் மாபெரும் பலமாய் இருக்கக்கூடிய ஒரேயொரு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே என்பதை அனைத்துலக சமூகமும் பிராந்திய வல்லரசான இந்தியாவும் ஏன் இலங்கை ஜனாதிபதியும் புரிந்துகொண்டுள்ள நிலையில் தமிழர்களின் ஒற்றுமையே பலம் என்பதை மீண்டும் உறுதியுடன் நிரூபிக்கும் களமாக யாழ் மாநகர சபை தேர்தலிலும் வவுனியா நகர சபை தேர்தலிலும் தமிழ் மக்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பின் இலங்கை தமிழரசுக் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் என உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து நேற்று வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு:


செல்வம் அடைக்கலநாதன்
பாராளுமன்ற உறுப்பினர்
வன்னித் தேர்தல் மாவட்டம்
31-07-2009

ஊடக அறிக்கை

தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அபிலாசைகளையும் உரிமையையும் நேர்மையுடன் வென்றெடுக்கக்கூடிய தமிழர்களின் சக்தியாய் தமிழர்களின் மாபெரும் பலமாய் இருக்கக்கூடிய ஒரேயொரு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே என்பதை அனைத்துலக சமூகமும் பிராந்திய வல்லரசான இந்தியாவும் ஏன் இலங்கை ஜனாதிபதியும் புரிந்துகொண்டுள்ள நிலையில் தமிழர்களின் ஒற்றுமையே பலம் என்பதை மீண்டும் உறுதியுடன் நிரூபிக்கும் களமாக யாழ் மாநகர சபை தேர்தலிலும் வவுனியா நகர சபை தேர்தலிலும் தமிழ் மக்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பின் இலங்கை தமிழரசுக் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு வன்னிமாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முதன்மை பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் யாழ்ப்பாண மாநகர சபை வவுனியா மாநகர சபை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

வரலாறு காணாத பேரவலத்தை சந்தித்த வன்னி வாழ் மக்கள் இடம்பெயர்ந்து வவுனியாவில் மூன்று லட்சம் மக்கள் முள்ளுக்கம்பிவதைமுகாமில் பரிதாபகர வாழ்க்கையை நோக்கி மரண பீதியுடன் உள்ள இவ்வேளையில் அவர்களை சொந்த இடங்களில் குடியமர்த்தும் முயற்சியை உடனடியாக மேற்கொள்ளாமல் யாழ்ப்பாண மாநகர சபை தேர்தலையும் வவுனியா நகரசபை தேர்தலையும் சிறிலங்கா அரசு திட்டமிட்டு திணித்துள்ளது.

திணிக்கப்பட்ட தேர்தலில் வலிந்து போட்டியிட வேண்டிய காலத்தின் தேவயை கருத்தில்கொண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பினராகிய நாமும் இத்தேர்தலில் போட்டியிட தீர்மானித்தோம்.

தமிழ்மக்கள் தமிழ் தேசிய கொள்கையிலிருந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகிவிட்டார்கள் என்று தப்புக்கணக்கு போடும் சிங்கள தேசத்தின் முத்திரையை கிளித்தெறியும் அரிய வாய்ப்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பு இந்த தேர்தலை கருதுகிறது.

கடந்த 61 வருடங்களான தமிழினத்தின் உரிமைப்போர் அகிம்சை ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் முன்னெடுத்த போதெல்லாம் அதனை திட்டமிட்டு உலக வல்லரசுகளின் ஆதரவுடன் தமிழர்களின் உணர்வுகளை அடக்கிய சிங்கள தேசம் பேச்சுவார்த்தைகள் மூலம் நிரந்தர தீர்வுக்காக பல சந்தர்ப்பங்களின் தமிழ் தலைமை முயன்ற வேளையில் எல்லாம் அதனை ஏற்றுக்கொள்ளவோ தமிழனத்துக்கு தீர்வு வழங்கவோ முன்வரவில்லை.

இன்னல்கள் இடர்கள் துன்பங்கள் சோகங்கள் என எமது வாழ்வு தொடரும் இவ்வேளையிலும் தமிழினம் தன்மானரத்தை இழந்து சோரம் போகாமல் சுதந்திர தாகம் கிடைக்கும் இறுதி நேரம்வரை பற்றுறுதியுடன் அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கக் கூடிய வல்லமையும் துணியும் அரசியல் நேர்மையும் தமிழ் தேசிய கூட்டமைக்கு மட்டுமே உள்ளது என்பதனை நிரூபித்து எமது கரங்களை பலப்படுத்த உரிமையுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இலங்கை தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்துக்கு வாக்களிக்கும்படியும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செல்வம் அடைக்கலநாதன்
பாராளுமன்ற உறுப்பினர்
ரெலோ அமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர்
வன்னி மாவட்டம்
ரெலோ அமைப்பின் தலைவர்

Posted by எல்லாளன் on 4:49 PM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response