twitter

சோரம் போன பேய் ஆசிரியர் சிவத் தம்பி (2)

Posted on 2:49 PM by எல்லாளன்

ஈழத் தமிழர்கள் மத்தியில் இயல்பாக உருவாகியிருந்த ‘பேராசிரியர் சிவத்தம்பி’ என்ற பெரு விம்பம் அவராலேயே சுக்கு நூறாக உடைக்கப்பட்டு விட்டது. “ஒரு வார்த்தைக்கு மறு வார்த்தை” என்பது அறிஞர் பெருமைக்கு அழகல்ல. அதை விடவும்,

தான் சார்ந்த மக்களது துயரங்கள் சார்ந்த உணர்வுகளை………மறுதலித்துப் புகழ் தேடி ஓடுவதும் அவர்தம் நடத்தைக்கும் அழகல்ல. அதற்காக, தம் சார்ந்து அறங்களைக் கற்பித்துக் கொள்ளும் முயற்சியில் ‘மொழி வேறு, அரசியல் வேறு’ என்று நா பிறழ்வதும் அழகல்ல.

SivaThambi
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் தமிழ் மக்களின் கெளரவத்திற்குரியவராக இருந்தார். ஈழம் போற்றும் அறிஞர்களில் ஒருவர் என்ற புகழுடனும் இருந்தார். அது அவர் பெற்ற கல்வி சார்ந்தும், அவர் கொண்ட அறிவு சார்ந்தும் அவருக்குத் தமிழர்கள் வழங்கிய அங்கீகாரம் என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது.
ஆனால், அவர்தம் கொள்கை என்று அவரால் வழங்கப்படும் செவ்விகளின் துர்நாற்றம் அவரைச் சிறுமைப்படுத்தவே செய்கின்றது.

கல்வி வழங்கும் அங்கீகாரத்திலும் விட, பதவி கொடுத்த அங்கீகாரத்தையும் விட, மக்களால் வழங்கப்படும் அங்கீகாரமே நிலைத்து நிற்கக் கூடியது. நாம் வாழ்ந்த காலத்தில் நம்மோடு வாழ்ந்த பலருக்கு அத்தகைய அங்கீகாரங்களை தமிழ் மக்கள் வழங்கிக் கெளரவித்ததையும், அவர் காலத்தின் பின்னரும் அவர்கள் காலாகாலமாகக் கெளரவிக்கப்பட்டு வருவதையும் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் நன்றாகவே அறிவார்.

“மொழி வேறு, அரசியல் வேறு” என்ற பேராசிரியரின் புதிய தத்துவ உருவாக்கத்தை எப்மால் புரிந்து கொள்ள முடியாமலேயே உள்ளது. ‘அரசியலற்ற மொழி’ என்பது உயிரற்ற பிணம் போன்றது. மனிதன் உருவான பின்னர், அவன் தன்னைச் சுற்றிப் புரிந்து கொள்வதை அடுத்தவருடன் பகிர்ந்து கொள்வதற்காகவே மொழிகள் உருவாகின. அந்த மொழிகள் உருவாக முன்பாகவே அவனை அரசியல் ஆக்கிரமித்துக் கொண்டது. தான், தனது குழு, அதன் தேவைகள், அவர்களது பாதுகாப்பு என அவனை அரசியல் கட்டிப்போட்டே இருந்தது. அந்த உணர்வுகள் அவனை ஆக்கிரமிக்காமல் இருந்திருந்தால் அவனுக்கு மொழி தேவைப்பட்டிருக்காது. ஆயிரம் ஆயிரம் வருட காலத்திற்கு முந்தைய மனிதனின் அறிவு கூட தற்போது பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுக்குப் புரியாமல் போனது எப்படி என்பது புரியவில்லை.

தாம் சார்ந்த மொழிக்காகவும், தான் வாழ்ந்த மண்ணுக்காகவும் மனிதன் திறந்த போர்க்களங்கள் எத்தனை? உயிர் ஈந்த மாமனிதர்கள் எத்தனை? மண்ணுக்காகவும் மொழிக்காகவும் நிகழ்ந்த போர்கள்தான் நிலங்களைப் பிரித்து எல்லைகளை உருவாக்கியது. நாடுகள் உருவாகியது. பேராசிரியர் சிவத்தம்பி அவர்களைப்போல் கற்றறிந்த மனிதர்கள் பலர் தத்துவம் கூறியதால்தான் தமிழர்கள் நாடற்றவர்களாகப் போயிருக்கக்கூடும் என்றே எண்ணத் தோன்றுகிறது.

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் அரசியலற்ற செம்மொழி நடாத்தப்படுவதாக உணரும் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் அவசரமாகச் செம்மொழி மாநாடு அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது எதற்காக என்று விளக்கிக் கூறினால் எம் போன்றவர்கள் புரிந்து கொள்ள முடியும்.

ஒன்பதாவது ‘உலகத் தமிழாராய்ச்சி மாநாடு’ என்று கலைஞர் கருணாநிதி அவர்கள் முன்மொழிந்த அதி அவசரத்தைத் தமிழ்ச் சான்றோர் பலரும் ஏற்றுக்கொள்ளத் தவறிய காரணத்தால், அந்த மாநாடு ‘உலகத் தமிழ் செம்மொழி மாநாடு’ என்ற புது நாமத்தோடு மீண்டும் அரங்கேற்றப்பட உள்ளது. அந்த நாயனத்திற்குப் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் ஒத்தூதக் கிளம்பிவிட்டார் என்பது வேடிக்கையான வேதனை.

ஈழத் தமிழரான தவத்திரு தனிநாயகம் அடிகளாரது எண்ணத்தில் உருவான தமிழ் அவா 1966-ம் ஆண்டில் முதலாவது ‘உலகத் தமிழாராய்ச்சி மாநாடு’ என மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் அரங்கேற்றம் பெற்றது. 1995-ம் ஆண்டு இதன் எட்டாவது மாநாடு தஞ்சாவூரில் நடாத்தப்பட்டது. அந்த மாநாட்டில் பேராசிரியர் சிவத்தம்பி உட்பட்ட ஈழத்து அறிஞர்கள் சிலர் அப்போதைய தமிழக முதல்வரால் விமானநிலையத்தில் வைத்தே திருப்பி அனுப்பப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதனால் நாம் எல்லோரும் மனம் கலங்கினோம். பேராசிரியர் சிவத்தம்பிக்கு நேர்ந்த அவமானம் எங்களுக்கு நேர்ந்ததாகவே என் போன்றோரால் உணரப்பட்டது.

ஆட்சிக்கு வந்து 14 வருடங்களாகத் தமிழுக்கு விழா எடுக்காமல், தனக்கு மட்டுமே விழா எடுத்த கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு இப்போது என்ன அவசரம் வந்தது இப்படி ஒரு மாநாடு நடாத்துவதற்கு? அதைத்தான் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் ‘மொழி வேறு, அரசியல் வேறு’ என்று சான்றிதழ் வழங்கித் தன்னையும் இணைத்துக் கொள்ள முயல்கிறாரோ? அல்லது பேராசிரியர் சிவத்தம்பி கலைஞருக்காகப் புதிய கதை வசனம் எழுதுகிறாரா?

“கட்டுமரமாகக் கடலில் மிதப்பேன், அதில் ஏறிக் கரை சேரலாம்” என்ற கலைஞர் கருணாநிதியின் சின்னத்திரை வசனத்தை பேராசிரியர் சிவத்தம்பியும் நம்பிவிட்டாரா? இந்தியாவின் மூன்றாவது பணக்கார முதல்வராக உயர்ந்துள்ள தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களது கட்டுமரக் கதையிலும் அவரது குடும்பத்தினர் மட்டுமே கரை சேர்க்கப்பட்டுள்ளார்கள். அதைப்பற்றிச் சிந்திக்க வேண்டியவர்கள் தமிழக மக்களே தவிர நாம் அல்ல.

‘தமிழர்’ என்ற குறியீடு எம்மையும் அடக்குகின்ற காரணத்தால் தமிழ் சார்ந்து எவர் மேற்கொள்ளும் முயற்சியினையும் விமர்சிக்கும் உரிமை எமக்கு உண்டு.

முள்ளிவாய்க்கால் இறுதிக் காலத்திலும் உயிருக்காகப் போராடிய தமிழ் மக்களைக் காப்பாற்றத் தவறிய, தமிழீழ மக்களின் அவலங்களை சகோதர யுத்தம் என்ற தத்துவத்தினுள் மறைத்த, மூன்று இலட்சம் வன்னி மக்களை முள்வேலி முகாமுக்குள் முடக்கி அவலத்தைக் கொடுத்த ராஜபக்ஷ சகோதரர்களுக்கு பரிசுப் பொருட்களும், பட்டுச்சால்வையும் கொடுத்து அனுப்பிய தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களது வரலாற்றுத் துரோகங்களை பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் தேவையின் நிமித்தம் மன்னித்தாலும் ஈழத் தமிழர்கள் எப்போதுமே மன்னிக்க மாட்டார்கள்.

நன்றி: ஈழநாடு (பாரிஸ்)

No Response to "சோரம் போன பேய் ஆசிரியர் சிவத் தம்பி (2)"

Labels

அமெரிக்கா அம்பலம் அரச பயங்கரவாதம் அரசியல் சாக்கடை அறிக்கைகள் ஆய்வுகள் ஈழம் உலக ஆதிக்கம் உலகம் ஐ.நா ஒட்டுண்ணி அழிப்பு ஒலிவடிவம் கண்டனங்கள் கனடா கருணாநிதி கருத்துக் கணிப்பு காங்கிரஸ் எதிர்ப்பு காணொளிகள் சிறிலங்கா புறக்கணிப்பு சீமான் சுத்துமாத்துக்கள் சுப. வீரபாண்டியன் செய்திகள் ஜெகத்கஸ்பர் ஜெயலலிதா டி.ராஜேந்தர் தமிழக தேர்தல் 2009 தமிழகம் தமிழருவி மணியன் தமிழர் பேரவை. தமிழினத்துரோகம் தமிழினத்துரோகி தமிழீழ நாடு கடந்த அரசு தமிழீழநாடு கடந்த அரசு தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ்தேசியம் தமிழ்வீரம் திருமா நாடுகடந்த தமிழீழ அரசு நாம் தமிழர் இயக்கம் நிகழ்ந்தவை நினைவுப் பகிர்வு பகுத்தறிவு பச்சோந்திகள் படுகொலைகள் பரப்புரைகள் பழ.நெடுமாறன் பாரதிராஜா. புதிய வெளியீடுகள் புறக்கணிப்பு புலம் புலம் பெயர் அரசியல் பொதுவானவை மக்களவைத் தேர்தல் மாவீரர் நாள் யாழ் இணையம் ராமதாஸ். வணங்கா மண் வதைமுகாம் வன்னி அவலம் வரும் நிகழ்வுகள் வானொலி கலாதரன் விடுதலைப் புலிகள் வேண்டுகோள் வைகோ
தொடரும் துரோகிகளின் பயணம்


“நகுலன் விலைபோய்விட்டாரா?”
எப்போது எந்தெந்த விடயங்களை சொல்லவேண்டும் என்பதில் தடம் புரள்வதால் அது எதிர்காலத்தில் பல ஆபத்துக்களையும் விளைவிக்கும் என்பதும் உண்மை.


“துரோகி ராமின் அடுத்த நடவடிக்கை என்ன?”
தற்போது எமக்கு கிடைத்த புலனாய்வு தகவல்களின்படி பனாகொட சிறீலங்கா இராணுவ முகாமில் சொகுசாக இருக்கும் ராம், தனது சர்வதேச கூலிகளுக்கு ஓர் கட்டளை அறிவித்திருப்பதாக அறியப்படுகின்றது
“புலிகளின் கிழக்கு தளபதி ராம் கைது” – நாடகம்
“கேணல் ராம்” – துரோகம்!


புலம்பெயர் மக்களே அவதானம்!
“நாம் இயக்கத்துக்கு இரகசியமாக முக்கிய வேலை செய்கின்றோம். கேணல் ராம் உத்தரவுப்படி இயங்குகின்றோம்.இயக்கத்துக்கு வேலை செய்பவர்கள் வேலை செய்ய வேண்டும் அல்லது விட்டுவிட்டு ஒதுங்க வேண்டும்”


“புல்மோட்டையில் ஒரு துரோகம்”
மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புல்மோட்டை முள்வேலி முகாமுக்குள்ளேயே “துரோகம்” இருப்பதுகவலைக்கிடம். அந்த துரோகத்தை “கபிலன்” என முன்னர் இயக்கத்தில் அழைத்தார்கள்.


“ஓடி வந்த” – தயாமோகன்
புலம்பெயர் தமிழர்களிடையே குழப்பத்தை விளைவித்த மகான் “தயாமோகன்”. முள்ளிவாய்க்கால் மனிதப்பேரவலத்தின் பின்னர் சிறீலங்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப பணிபுரிய “தோழன்” கருணாவால் நியமிக்கப்பட்டவர்.


“றோ மற்றும் கோத்தபாயவின் ஏற்பாட்டில் சுவிசில் துரோகிகளின் மகாநாடு”
எதிர்வரும் வார இறுதி நாட்களில் துரோகிகளின் ஒன்றுகூடல் சுவிசில் நடைபெறவிருக்கின்றது. கருணா, சுவிசில் . தயாமோகன், குலம் மற்றும் தோழர் அம்பலவாணர் ஆகியோர் தற்போது டக்ளஸ்,பிள்ளையான், துரோகிகளைக்கொண்டு சுவிசுக்கான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.


“கருணா – தயாமோகன்” சுவிசில் சந்திப்பு
ஜேர்மனியில் இருந்து புறப்பட்டு கருணா சுவிசுக்கு சென்றதாகவும், அவரை கிருஸ்ணா அம்பலவாணரின் சார்பாக சிலர் சந்தித்துள்ளார்கள். மேலும், ஓடி வந்த தயாமோகனையும் நேரில் சந்தித்துப் பேசியதாக எமது புலனாய்வுச் செய்திகள் தெரிவிக்கின்றன.


“தீர்க்கதரிசி” – சர்வே
1996 முதல் அப்பொறுப்பை வகித்த சர்வே 2002ம் ஆண்டு பேச்சுவார்த்தை காலகட்டத்தின் போது சர்வதேச சூழலுக்கமைவாக அனைத்துலகச்செயலகத்தின் பணிகள் நிறைவுபெற்று, அனைத்துலகத் தொடர்பகத்தின் கீழ் அனைத்துலக செயற்பாடுகளைக் கொண்டுவந்தார் தலைவர்.


“நான் அவன் இல்லை”
கேபியும் கிபியும்
KPயின் மறுபக்கம்: பகுதி 01அன்பார்ந்த மக்களே உங்களை ஏமாற்றவும், உங்கள் எதிர்காலத்தை விற்கவும் கே.பியின் திட்டங்கள் செயல்பட தொடங்கிவிட்டதை இவ்வார கே.பியின் பிரச்சாரப் பீரங்கியான ”பரபரப்பு” உறுதிப்படுத்தியுள்ளது. யாரிடமும் இல்லாத படம் அவர்களுக்கு மட்டும் எப்படிப் போனதோ..? கே.பி. அவசரப்பட்டு ‘நான் அவனில்லை’ என்று சொல்லாமல் விட்டால் சரி.

தமிழீழத்தின் பிள்ளைகள் தமிழீழத்தை அழித்தவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு

sivanathan_mahindaதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்றைய தினம் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பறிபோகும் தாய் நிலமும் "பதவிக்காய் அலையும் ஸ்ரீகாந்தாவும்"

ஐக்கிய இலங்கை என்ற கபடமான மகிந்த சிந்தனைக்குள் பலியாகும் ஸ்ரீகாந்தா பறிபோகும் தாய் நிலத்தை மறப்பதேன்?

மறக்க முடியுமா ? ஜெகத் கஸ்பாரின் மறு பக்கம்

தமிழீழப்போராட்ட விழிப்புணர்வை மங்க வைக்கும் செயல்பாடாகவே அவை வெளிவரும். தமிழகத்தில், போராட்டத்தில் மிகத் தெளிவாக இருக்கும் பழ.நெடுமாறன், வை.கோ, சீமான், குளத்தூர்மணி போன்றோரை அப்புறப்படுத்தும் அல்லது அவர்களை விமர்சிக்கும் அளவிற்கு இவர் வருவார்.

மேலும் >>>>>>>>>>>>>> இங்கே செல்லுங்கள்

Blog Archive