புலிகள் இல்லாததை தற்போது உணர ஆரம்பித்துள்ள ஈழமாக்கள்
யாழ் அளவெட்டியில் ஒரு மூதாட்டி கழுத்து வெட்டி கொலை யாழ்மாவட்டம் அளவெட்டி பகுதியில் வீட்டில் தனித்து இருந்த மூதாட்டி ஒருவர் இனம் தெரியாத நபர்களால் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.குறிப்பிட்ட சம்பவம் கடந்த திங்கட்கிழமை அன்று இடம்பெற்றபோதும் நேற்றே இவர் கொலை செய்யப்பட்டு இருந்ததை மக்கள் கண்டுள்ளனர்.
ஈழத்தில் தற்போது பல கொலைகள் கொள்ளைகள் போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றதோடு
1986க்கு முன்பு நடந்தது போல் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதால்
புலிகளை ஆதரிக்காமல் இருந்து வந்த பலர் தற்போது புலிகளின் தேவையை உணர்ந்துள்ளதை அவர்களே பலரிடம் சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.







