பிரபல ஆங்கில பத்திரிகையாளர் திரு சிவநாயகம் காலமானர்
பிரபால ஆங்கில பத்திரிகையாளர் திரு சுப்பிரமணியம் சிவநாயகம் அவர்கள், நேற்று திங்கட்கிழமை, 30 நவம்பர், மாலை 11.00 மணிக்கு கொழும்பில் காலமானர்.
திரு சிவநாயகம் அவர்கள், 1981ம் மாதம் வரை, கொழும்பில் வாழ்ந்த காலங்களில் – பிரபல ஆங்கில பத்திரிகைகளான “டெயூலி நியூஸ்”, “டெயிலி மிறர்” ஆகியவற்றுடன், சிறிலங்கா சுற்றுலா நிறுவனத்திலும் கடமையாற்றியவர். அதன் பின்னர், யாழ்பாணத்தில் கல்விமான்களினால் 1982ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆங்கிலப் பத்திரிகையான “சற்ரடே றிவீயில்” (Saturday Review) ஆசிரியராக கடமையாற்றினர்.
ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் அரசங்கம், “சற்ரடே றிவீயை” தடை செய்து திரு சிவநாயகம் அவர்களுக்கு பல தொல்லைகளை கொடுத்த காரணத்தினால்;, சிவநாயம் ஐயா அவர்கள் இந்தியா சென்று, அங்கு “தமிழர் தகவல் மையத்தில்” சில காலம் கடமையாற்றினர்.
அதை தொடர்ந்து, தனது நண்பர்களுடன் இணைந்து, ஆங்கிலப் பத்திரிகையான “தமிழ் நேசன்” என்ற பத்திரிகையை ஆரம்பித்து நடத்தி வரும்வேளையில், இந்தியா அரசினால், இந்தியாவில் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டடு, பல வருடங்கள் இந்தியா சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டார்.
இந்தியா சிறையிலிருந்து வெளியேறியதும், பிரான்ஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் கோரி, சில வருடங்கள் பாரிஸில் வாழ்ந்து வந்தவேளையில், ஆங்கில மாதச் சஞ்சிகையான “கோற் பிறிங்” என்ற பத்திரிகையை ஆரம்பித்து நடத்தி வந்தார். இவ்வேளையில் இவரது சில நண்பர்களின் அழைப்பினாலும், இவரது சில குடும்ப அங்கத்தவர்களுக்கு அருகமையில் வாழ்வதற்காக, லண்டன் பிரித்தானியா சென்று, அங்கு “கோற் பிறிங்” ஆங்கில மாதச் சஞ்சிகையை தொடர்ந்து நடத்தி வந்தார்.

இவர் பிரித்தானியாவில் வாழ்ந்தவேளையில், தனது கட்டுரைகள,; ஆங்கக்கள், பத்திரிகை அனுபவங்களுடன,; அரசியல் தக்கங்களையும் உள்ளடக்கிய, இரு ஆங்கில பிரசுரங்களான “பேன் அன் த கண்”, “சிறிலங்கா – விற்னாஸ் ரு கிஸ்றீ” (Pen and the Gun” & “Sri Lanka – Witness to History” – A journalist’s Memoirs 1930 – 2004) ஆகியவற்றை வெளியிட்டிருந்தார்.
யாழ்ப்பாணத்தில் கொக்குவிலிலை பிறப்பிடமாக கொண்ட சிவநாயகம் ஐயா அவர்கள், (1930ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ம் திகதி) கொக்குவில் இந்து கல்லூரி, வட்டுகோட்டை யாழ்பாணக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வேளையில் இவர் பல சுகயீனம் காரணமாக, குடும்பத்துடன் வாழ விரும்பிய காரணத்தினால், கொழும்பு சென்று, அங்கு சில வருடங்களாக வைத்தியசாலையும் வீடுமாக வாழ்ந்து கொண்டிருக்கையில், திங்கட்கிழமை 30 நவம்பர், மாலை 11.00 மணிக்கு கொழும்பில் காலமானர்.
சிவநாயகம் ஐயாவின் குடும்ப தகவலின் பிரகாரம், இவரது பூதவுடல் எதிர்வரும் வியாழக்கிழமை டிசம்பர் 2ம் திகதி, கொழும்பில் தகனம் செய்யப்படும்.







