யாழில் தொடரும் பயங்கரம் – தமிழ் இனத்தை முற்றாக துடைத்தழிக்கத் திட்டம்?

disappearednew

சிறீலங்காவின் வடபகுதியில் உள்ள யாழ் மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், ஒருவர் பகல் வேளையில் ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

யாழ்ப்பாண மக்களை அச்சுறுத்தி, அங்கு படுகொலைகளை மேற்கொண்டு சிங்களமயப்படுத்தல்களை மேற்கொள்ளும் திட்டத்தை சிறீலங்கா அரசு முன்னெடுத்துவருகின்றது.

சிறீலங்கா அரசின் இந்த திட்டத்தை ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் குஷி பரிசைப் பெற்ற யாழ் மாவட்ட கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் மகிந்தா கத்துறுசிங்கா, யாழ் அரச அதிபர் மற்றும் ஈ.பி.டி.பி துணைஇராணுவக்குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த மூன்று வாரங்களில் சங்கானையில் இந்து ஆலயத்தின் பிரதம குருக்கள், உருப்பிராய் பகுதியில் உதவிக் கல்விப் பணிப்பாளர், சாவக்கச்சேரிப் பகுதியில் இளம் வர்த்தகர் உட்பட மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று (30) உரும்பிராய் பகுதியில் சண்முகநாதன் விக்னேஸ்வரன் (30) என்ற இளைஞர் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

தனது கணவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ள விக்னேஸ்வரனின் மனைவி, துவிச்சக்கர வண்டியில் சென்ற தனது கணவரை வானில் பின்தொடர்ந்து வந்தவர்கள் கடத்திச் சென்றுள்ளதாகவும், அவர் கடத்தப்பட்டதை ஒரு வயோதிபர் நேரில் கண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவ்வாறான கடத்தல் நடைபெறவில்லை எனவும், விடுதலைப்புலிகள் இல்லாதநிலையில் கடத்தல்கள் நடைபெறுவதில்லை எனவும் விடுதலைப்புலிகள் மீது பழிசுமத்த முயன்ற ஹத்துறுசிங்கா, பின்னர் சாட்சியங்கள் உள்ளதை அறிந்ததும், அது தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளை நடத்துவார்கள் என தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சாவின் உத்தரவுக்கு அமைய 2007 – 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஈ.பி.டி.பியினர் மேற்கொண்ட பல நூறு படுகொலைகள் போன்றதொரு சூழ்நிலை தற்போது யாழில் தோன்றியுள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன.

பெரும் அச்சத்தில் வாழும் யாழ் மக்கள் தமது பிள்ளைகளை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவதற்கு முயன்று வருகின்றனர்.

இந்திய பாதுகாப்புச் செயலாளர் பிரதீப்குமாரின் சிறீலங்கா பயணத்தின் பின்னர் யாழ் குடாநாடு மீதான அரச பயங்கரவாதம் தீவிரமாக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

வடபகுதியில் இருந்து ஐ.நாவின் அமைப்புக்களையும், அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கத்தையும் வெளியேற்றுமாறு அழுத்தம் கொடுத்துவந்த இந்தியா தற்போது அங்கு படுகொலைகளை ஊக்குவித்து வருவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் வருடம் யாழ் மாவட்டத்தில் பல நூறு தமிழ் மக்கள் கடத்தப்படலாம் அல்லது படுகொலை செய்யப்படலாம் என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

செய்தித் தொகுப்பு: ஈழம் ஈ நியூஸ்.

| | Read More »

விட்டுச் செல்லும் 2010 – விடுதலைப் போராட்டத்தின் எதிரிகள் அத்தனைபேரும் அடையாளம் காணப்பட்ட ஆண்டு

2010-flash

2010 என்னும் ஆண்டு. 2011 ஐ ஈழத்தமிழனுக்கென்றே உயில் எழுதிவிட்டுப் போகும் ஆண்டாகும்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக புலிகளால் வழி நடாத்தப்பட்ட இலங்கைத் தமிழர் அரசியல் அவர்களின் வழிநடாத்தல் இல்லாமல் தனிவழி நடந்து பார்த்த முழுமையான ஆண்டு இதுவாகும். இந்த ஆண்டில் நடந்த சம்பவங்கள் என்ன… 2010 விட்டுச் செல்லும் பாடங்கள் என்ன… இதோ சில உதாரணங்கள்…

01. மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியலோடு பகைத்துக் கொண்டு இலங்கையில் அரசியல் செய்ய முடியாது. ஆகவே அரசுடன் இணைந்து பயணிப்பதே நல்லதென தமிழர் கூட்டமைப்பு முடிவு செய்த ஆண்டு.

02. புலம் பெயர் நாடுகளில் சிறீலங்கா அரச தலைவர்கள் வந்தால் கடும் எதிர்ப்பு தொடரும் என்று செய்தியை இங்கிலாந்தில் மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தமிழர் கிளர்ந்து எடுத்துரைத்த ஆண்டு.

03. சனல் 4 தொலைக்காட்சி யுத்தக்குற்றத்தின் காணொளிகளை வெளியீடு செய்து மகிந்தராஜபக்ஷ அரசுடன் தமிழர்கள் இணைவது சாத்தியமில்லை என்ற கோட்டை தெளிவாக வரைந்த ஆண்டு.

04. வடக்கு, கிழக்கில் ஆயுத உப குழுக்கள் கட்டப்பஞ்சாயத்து செய்யலாம், தமிழ் சிறுமிகளை விபச்சாரத்திற்காக பிடித்து போகலாம் என்று அரச மட்டத்தில் ஆதரவு கொடுக்கப்பட்டதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்ட ஆண்டு.

05. புலிகள் தோற்கடிக்கப்பட்டால், ஈழத் தமிழருக்கு நியாயமான தீர்வு கிடைக்கும். அடிப்படைப் பிரச்சனை புலிகளே என்று பரப்பப்பட்ட பிரச்சாரம் அடியோடு உடைந்து நொருங்கிய ஆண்டு.

06. யாழ்ப்பாணத்தில் சிங்களக் குடியேற்றம், புதிய இராணுவ முகாம்கள், புத்தவிகாரைகள் அமைக்கப்பட்டு, தேசிய கீதத்தை சிங்களத்தில் பாடாதவருக்கு வாள்வெட்டும் பரமபதமும் வழங்கப்படும் என்று தெளிவாக உரைத்த ஆண்டு.

07. நள்ளிரவிலும் தமிழ் பெண்கள் அச்சமின்றி நடமாடலாம் என்று போற்றப்பட்ட யாழ் குடாநாட்டில் மோட்டார் சைக்கிள் வாங்கினாலே கொலை என்றளவுக்கு குற்றச் செயல்கள் பெருகிய ஆண்டு. விபச்சார விடுதிகள், மதுபான ஆட்டங்கள் என்று சீரழிந்த ஒரு சமுதாயத்தை படம்பிடித்துக் காட்டிய ஆண்டு.

08. ஆயுதங்களை போட்டு சரணடைந்தால் பொது மன்னிப்பு என்று முப்பதாண்டு காலமாக செய்யப்பட்ட சிறீலங்காவின் இனவாதப் பரப்புரை பொய்யானது என்பதை சனல் 4 உலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டிய ஆண்டு. இசைப்பிரியாவின் இறந்த உடலம் அதற்குச் சாட்சி.

09. வட்டுக்கோட்டைத் தேர்தலும், நாடுகடந்த தேர்தலும் நடத்திய புலம் பெயர் தமிழினம் பின் பிரதமர் பதவி பெற்ற புண்ணிய ஆண்டு. தனியரசு, பிரதமர் பதவி என்ற போராட்டத்தை முடித்து, அடையாள அட்டை மட்டும் இல்லாத குறையே குறையென வீரத்தமிழன் குமுறிய ஆண்டு.

10. எத்தனை குழு மோதல்கள் இருந்தாலும் தமிழ் வெகுஜனம் தெளிவாக உள்ளது என்பதை விளக்கிய ஆண்டு. மாவீரர் தினத்திற்கு பெருந்தொகையாக சென்ற புலம் பெயர் தமிழர் மாவீரர் மாறாப் புகழ் பெற்றவர்கள் என்பதை உணர்த்திய ஆண்டு.

11. பிரபாகரனின் உரை இல்லாமல் இரண்டு மாவீரர் உரைகள் உள்ளன என்ற நிலை தொடர்ந்த ஆண்டு.

12. புலிகள் ஆயுதமெடுத்து போராடியது சரியே என்ற உண்மையை தமிழர் அனைவரும் ஒப்புக் கொள்ள வைக்கும்படியாக சிறீலங்கா அரசு அடுக்கடுக்காய் தவறுகளைப் புரிந்த ஆண்டு.

13. புலிகள் மீது குற்றம் சுமத்திய அத்தனை நாடுகளும் புலிகளுக்குப் பிறகு என்ன என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் இருந்து அவர்களுடைய ஒழுக்கக்கேட்டு அரசியலை வெளிப்படுத்திய ஆண்டு.

14. நோர்வே புலிகளுக்கு எச்சரிக்கை தரும் கடிதத்தை அனுப்பியது என்ற செய்தி விக்கிலீக்ஸ்சில் வெளிவந்த ஆண்டு. நோர்வே கடைப்பிடித்த மௌனத்தின் பொருள் விளங்கிய ஆண்டு. அதேவேளை நோர்வே சரியான மத்தியஸ்த்தரா என்ற கேள்வியையும் விக்கிலீக்ஸ் எழுப்பிய ஆண்டு.

15. புலம் பெயர் தமிழர் புதிய வலுவுடன் எழுவார்கள் என்று இந்திய, சிறீலங்கா அரசுகளை அஞ்ச வைத்த ஆண்டு.

16. ஈழத் தமிழன் பிரச்சனை பயங்கரவாதப் பிரச்சனையல்ல அது விடுதலைப் போராட்டமே என்பதை மேலை நாட்டு பொதுமக்கள் புரிய ஆரம்பித்த ஆண்டு.

17. ஐ.நா விசாரணைக் குழுவை அமைத்து போர்க்குற்றங்களை அறிய விரும்பிய ஆண்டு.

18. ஈழத் தமிழன் புதுமாத்தளனில் அழிந்துவிடவில்லை அவனுடைய சிறப்பு சீரழிக்கப்பட முடியாதது என்பதை உலகம் ஒப்புக் கொண்ட ஆண்டு.

19. சிறீலங்கா போர்க்குற்ற நாடு என்பதை மறைக்க முடியாது என்று சிங்களம் பீதியடைந்த ஆண்டு.

20. விடுதலைப் போராட்டத்தின் எதிரிகள் அத்தனைபேரும் அடையாளம் காணப்பட்ட ஆண்டு.

19. பிரபாகரன் என்ற வீரனின் புகழ் தொடர்ந்து அதிகரித்து சென்ற ஆண்டு.

20. புலம் பெயர் தமிழரிடையே பல்வேறு மோதல்கள் கிளம்பி உண்மையையும் பொய்யையும் அடையாளம் காண உதவிய ஆண்டு.

பிரபாகரன் என்ற ஈடு இணையற்ற ஒளி அனைத்து இருளான இடங்கள் மீதும் அமைதியாக வெளிச்சம் போட்டுக் காட்டிய ஆண்டு..

2011 ஈழத் தமிழன் தன்மானத்துடன் நிமிர்வான் என்ற நம்பிக்கையை கொடுத்துப் போகும் ஆண்டே 2010.

2010 என்னும் ஆண்டு. 2011 ஐ ஈழத்தமிழனுக்காக எழுதிவிட்டுப் போகும் ஆண்டாகும்.

நன்றி: அலைகள்.

| | Read More »

லண்டன் வந்த ராசபக்சவை காத்திருந்து பழிதீர்த்த ஈழத்தமிழர்களது விடுதலை வேட்கையை போற்றுவோம்.

கடவுள் என்றொரு சக்தி உண்டா இல்லையா என்ற விவாதம் யுகங்கள் கடந்தும் இன்றுவரை தொடர்கதையாகி வந்தாலும் அதைவிட பன்மடங்கு தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது இருப்புத் தொடர்பாக வாதப் பிரதி வாதங்கள் இடம் பெற்றுவருகின்றன.

2009 மே 18ம் திகதிக்கு பின்னரான இன்றுவரையான காலப்பகுதியில் தேசியத் தலைவரது இருப்புப் பற்றிய தேடல் உலகத்தமிழர்களிடம் அதிகரித்தவண்ணமே உள்ளது. இடைப்பட்ட காலப்பகுதியில் சிறிலங்கா இந்திய உளவுத்துறையினரால் புதுப்புதுக் கதைகள் உருவாக்ப்பட்டு உலகத் தமிழர்களை பிளவுபடுத்தவும் சோர்வடையச் செய்யவும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. தற்போதும் தொடர்ந்தும் அவ்வாறான முயற்சிகளில் சிறிலங்கா இந்தியப் புலனாய்வுத்துறையினர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் எத்தனை இடர்களை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர் நின்றாலும் மாவீரர்கள் காட்டிச் சென்ற பாதையிலும் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது நேரிய வழிகாட்டுதலிலும் உலகத் தமிழர்களாகிய நாம் வழிநடப்போம் என மீண்டும் முரசறைந்து லண்டன் மாநகரில் எழுச்சிக் கோலம் பூண்டு தமிழீழ விடுதலைப்பயணத்தை உரமாக்கியுள்ளனர் லண்டன் வாழ் ஈழத்தமிழர்கள்
newsஒருகல்லில் இரண்டு மாங்காய்கள் வீழ்த்தலாம் என தப்புக்கணக்குப் போட்டு லண்டன் பயணமான கொலைவெறியன் மகிந்தவை ஓட ஓட விரட்டியடித்த லண்டன்வாழ் ஈழத்தமிழர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எமக்கான விடுதலைப்பயணத்தில் நாம் போராடுவதற்கு எமக்கு யாரும் பாராட்டுப்பத்திரம் வாசிக்கத்தேவையில்லை.

இருப்பினும் தமிழினத்தை வீழ்த்த எதிரிகளுடனும் துரோகிகளுடனும் கைகோர்த்து எம்மின அழிவை வேடிக்கை பார்த்த உலக மகா கொள்ளைக் கூட்டத் தலைவர்களுக்கெல்லாம் பாராட்டுப்பத்திரம் வாசிக்கும் எமது புலம்பெயர் அமைப்புக்கள் குழுக்கள் சங்கங்கள் வாய்மூடி மௌனித்திருப்பது வேதனை அளிக்கின்றது.

என்ன நோக்கத்திற்காக எமது விடுதலைப் போராட்டத்தை அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு உலக பிராந்திய வல்லரசுகள் சிங்களத்துடன் சேர்ந்து முள்ளிவாய்காலில் கொலைவெறியாட்டம் நடத்தினவோ அதனை வெளிப்படுத்தும் விதமாக சிறிலங்காவிற்கு அடுத்தடுத்து விரையும் தூதுக் குழுக்களும் உயர்மட்டக் குழுவினரும் இராணுவ அதிகாரிகள் கொண்ட குழுவினரதும் வருகை அமைந்துள்ளது. அதைவிட சிறிலங்காவின் துறைமுகங்களை நிரப்பும் பிராந்திய சர்வதேச வல்லரசுகளின் போர்க்கப்பல்களின் அணிவகுப்பும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்த வகையில் சிங்களத்திற்கு தடையற்ற ஆயுத உதவிவழங்கி தமிழின அழிப்பிற்கு பெரும் துணைபுரிந்த நாடுகளில் ஒன்றான பாக்கித்தானின் அதிபரது வருகை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் திடீர் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தலைமையிலான குழு ஒன்று கொழும்பிற்கு அதிரடிப் பயணம் மேற்கொண்டது.

வழக்கம் போன்று தமிழக கருணாக்களின் அடிவருடி ஊடகங்கள் ஈழத்தமிழர் நலன்கள் தொடர்பான பயணமாக சித்தரித்தாலும் தான்தோன்றித்தனமாக செயற்பட்டுவரும் மகிந்தவை மிரட்டும் விதமாகவே அமைந்திருந்தது எனலாம். தனது பகைதேசமாகக் கருதும் பாக்கித்தானுடன் எவ்வித உடன்பாடுகளும் செய்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தவே இந்தப்பயணம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதனை உறுதிப்படுத்துவது போன்றே சிறிலங்கா பாதுகாப்புத்துறைச் செயலாளரும் மகிந்த ராசபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராசபக்சவின் அதிரடி மறுப்பறிக்கை அமைந்திருந்தது. பாக்கித்தான் ஊடகங்கள் சிறிலங்காவுடன் பாக்கித்தான் பாதுகாப்பு உடன்படிக்கைகள் ஏற்படுத்தியுள்ளதாக வெளியிட்டிருந்த செய்திகளை மறுத்தே கோத்தபாயவின் இந்த பதிலறிக்கை அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

newsபாக்கித்தானுடன் எவ்வித உடன்படிக்கைகளையும் தாம் மேற்கொள்ளவில்லையென அலறியடித்துக் கொண்டு கோத்தபாய அறிக்கை விட்டதன் பின்னணி இந்தியாவை சமாதானப்படுத்தவே என்பது வெளிப்படையானது. இவ்வாறு திரிசங்கு நிலையில் தத்தளித்த ராசபக்ச போட்ட திட்டம்தான் ஒருகல்லில் இரண்டு மாங்காய் வீழ்த்தும் லண்டன் பயணமாகும்.

சிறிலங்கா வருகைதரும் பாக்கித்தான் அதிபருடனான சந்திப்பைத் தவிர்பது முதல் திட்டம். தமிழீழ விடுதலைப்புலிகளை சிறிலங்காவில் இருந்து முழுதாகஅழித்துவிட்டேன் என்று மார்தட்டி சொல்லும் சிங்கள அரசு புலம்பெயர் தேசங்களில் வலுவாக இருக்கும் கட்டமைப்பை கண்டு கதிகலங்கிவருகின்றது.

இதனையும் சிதைத்து பலவீனப்படுத்துவதற்கு தலைகீழாக நின்று முயன்று வருகின்றவேளை லண்டன் ஒக்த்போட் பல்பலைக்கழக மாணவர்மன்றத்தில் உரையாற்ற களம் கிடைத்தால் சும்மாவிட்டு விடுவார்களா?

போர்குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தினால் குறித்த நிகழ்வை முன்னர் தவிர்த்திருந்த சிங்களத்திற்கு அதன் சின்னத்தனமான புத்தி கொடுத்த உத்தேசமான மதிப்பீடே லண்டன் செல்லத் தூண்டியது.

தேசியத் தலைமையின் வெளிப்பாடு அற்றநிலையில் புலம்பெயர் தேசங்களில் தோற்றம் பெற்றுவரும் பல குழுக்களினால் ஏற்படும் குழப்பநிலை என்பவற்றால் புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்துவரும் ஈழத்தமிழர்கள் பிளவுபட்டுவிட்டார்கள் என எதிரிகளும் துரோகிகளும் நப்பாசை கொண்டிருந்தவேளை வரலாறு காணாதவகையில் எழுச்சிக் கோலம் கொண்டு இந்த ஆண்டும் மாவீரர் நாளை அனுட்டித்திருப்பது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

newsகுறிப்பாக லண்டனில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமானோர் போர்கோலம் பூண்டு மாவீரர்நாள் நிகழ்வில் பங்குபற்றியிருந்தமை சிங்களத்தை கலங்கடித்திருந்த வேளை அதன் சின்னத்தனமான புத்தி வேறுவிதமாக யோசித்தது. கடும் குளிர் தொடர்ச்சியான வேலைக்கும் மத்தியில் இவ்வளவுபேர் ஒன்று கூடி கலைந்திருக்கின்றார்கள் அடுத்தடுத்த நாட்களில் மீண்டும் வீதிக்கு வருவதற்கு வாய்புகள் குறைவாகவே இருக்கும் எனவே இதுதான் சரியான தருணம் என கணக்குப்போட்டது சிங்களத்தின் சின்னப் புத்தி.

இயல்பாக அதுவே உண்மையும் கூட. புலம்பெயர் தேசங்களில் தொடர்ச்சியாக வேலைக்கு செல்லவேண்டிய சூழலில் மாவீரர் நாள் நிகழ்விற்காக ஓரு சில நாட்கள் எம்மவர்கள் விடுப்பு எடுப்பது வழமை. அவ்வாறு ஒருசில நாள் விடுப்பு எடுத்ததனால் உடனடியாக அடுத்தடுத்த தினங்களில் விடுப்பு எடுப்பது முடியாத காரியம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இவற்றை கணக்குப்போட்டு தமிழகத்தில் ஈழ ஆதரவு உணர்வுத்தளத்தை சிதைப்பதில் பெரும்பங்காற்றிய அம்சா தலைமையிலான குழுவினரது ஏற்பாட்டில் லண்டன் பயணமாக கொலைவறியன் மகிந்த ராசபக்ச முடிவெடுத்தது இரண்டாவது திட்டமாகும்.
லண்டன் பயணத்தின் மூலம் தமிழர் எழுச்சிக்குப் போட்டிக்களமாக ஒக்த்போட் பல்கலைக்கழக மாணவர் மன்றத்தை பயண்படுத்தி தனது வீரப்பிரதாப உரையை ஆற்றலாம் எனவும் அதன்போது ஈழத்தமிழர்களது எதிர்ப்பும் வலுவாக இருக்க வாய்ப்பில்லை என மனப்பால் குடித்துக் கொண்டு லண்டனில் கால்வைத்தான் மாபாதகன் மகிந்த ராசபக்ச.

சுழன்றடித்து துரத்திய ஓயாத அலைகள்…

newsலண்டன் நோக்கி ராசப்க்ச விமானம் ஏறிவிட்டதாக நம்பகரமான தகவல்கள் கிடைத்தவுடன் சிலிர்த்தெழுந்த ஈழத்தமிழர்கள் கொலைவெறியன் வந்திறங்கும் கீத்று விமானநிலையத்தை திடீர் முற்றுகைக்குள் கொண்டுவந்தனர். கீத்று விமான நிலைய பயணிகள் வரவேற்புப் பகுதியில் ஒன்று பத்து நூறெனத் திரளத்தொடங்கிய எம்மவர்கள் திடீரென ஆயிரக்கணக்கில் திரண்டனர்.

போர்க்குற்றவாளி ராசபக்சவை கைது செய்யுமாறு எம்மவர்கள் எழுப்பிய கோசம் விமான நிலையப்பகுதியெங்கும் எதிரொலித்தது. இதனால் ஏற்பட்ட பதற்றமான சூழலை அடுத்து லண்டன் காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தாலும் எமது மக்களது நியாயபூர்வமான போராட்டத்திற்கு வழியேற்படுத்தி தமது காவல்கடமையை செய்திருந்தமைக்கு லண்டன் காவல்துறையை அடுத்ததாக பாராட்டியே ஆகவேண்டும். (லண்டனில் என்ன கருணாநிதியின் ஆட்சியா நடைபெறுகிறது…? ஈனத்தனமாக காவல்துறையை ஏவிவிட்டு அரசபயங்கரவாதம் நிகழ்த்துவதற்கு)

கொலைவெறியன் மகிந்த ராசபக்சவை சுமந்துவந்த விமானம் தரையிறங்கிய நொடிமுதல் அங்குதிரண்டிருந்த ஈழத்தமிழர்களது கையே ஓங்கியிருந்தது. ஆணவத்தோடு லண்டன் வந்த ராசபக்சவிற்கு லண்டன் மண்ணில் கால்வைக்கும் முன்னே அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்பட்டது.

லண்டன் அரசதரப்பு பிரதிநிதிகள் சிங்கள எடுபிடிகள் என திரண்டுவந்து தன்னை வரவேற்பார்கள் என்ற நினைப்பில் இருந்த ராசபக்சவிற்கு விமானப்படிக்கட்டைவிட்டு இறங்கியது முதல் திகில் அனுபவமே ஏற்பட்டிருந்தது.

லண்டன் காவல்துறையினரது ஏற்பாட்டில் சிறப்பு வாகனங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு விமான நிலைய ஓடுபாதையில் வைத்தே அவசர அவசரமாக ராசபக்சவை ஏற்றிக் கொண்டு ரகசிய சுரங்கப்பாதை வழியாக அழைத்துச் சென்றனர். தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றது என்று சுதாரித்துக் கொள்வதற்கு முன்னரே தமிழர்கள் ஓயாத அலையாக சுழன்றடித்து சிங்களத்தின் சனாதிபதியை சிங்கள மண்ணிற்கே விரட்டியடித்தனர்.

newsவிடுதலை வேட்கையை நெஞ்சில் சுமந்து போராட்டக் களம் புகுந்த தமிழர்கள் உறையவைக்கும் கடும் குளிரையும் பொருட்படுத்தாது துரிதகதியில் போராட்டக்களத்திற்கு தயாராகியதுடன் குறுகிய நேர இடைவெளியில் களம் மாற்றமடைந்த போதிலும் அதற்கும் சளைக்காமல் மகிந்தாவை விரட்டி விரட்டி பழிதீர்தனர்.

இப்போது தெரிகிறதா…? மக்கள் பாதுகாப்பு வளையம் என்று உலக நாடுகளை ஏமாற்றுவதற்காக சில பகுதிகளை அறிவித்து எமது மக்களை வரவைத்து கொன்று குவித்து கொலைக்களமாக்கினீரே… நினைவிருக்கின்றதா... மகிந்தரே?
உடையார்கட்டு.. சுதந்திரபுரம்.. வள்ளிபுனம்.. தேவிபுரம்.. புதுக்குடியிருப்பு.. மாத்தளன்.. என எமது மக்களை வஞ்சகமாக ஓவ்வோரிடமாக வரவைத்து கொன்று குவித்தீர்களே.. இன்று அந்த வலி என்னவென்று எம்மவர்கள் உமக்குப் புரியவைத்துள்ளனர்.

காத்திருந்து கதைமுடித்த வரலாற்று நிகழ்வுகளிற்கு சிகரம் வைத்தது போல் லண்டனில் பாதுகாப்பு வளையங்களை உருவாக்கி விரட்டி விரட்டி பழிதீர்த்த நிகழ்வு அமைந்து விட்டது என்றால் மிகையில்லை.

ஒக்த்போட் பல்கலைக்கழக மாணவர் மன்ற நிகழ்வு நிறுத்தி வைக்கப்பட்டதாக உத்தியோக பூர்வமாக இறுதி நேரத்தில் அறிவிக்கப்பட்டவுடன் அங்கு திரண்டிருந்த மக்கள் மகிந்த தங்கியிருந்த விடுதியை நோக்கி அணி அணியாக நடைபோட்டனர். சிறிது நேரத்தில் விடுதிமுன்பு பல்லாயிரம் பேர் திரண்டு முழக்கமிட்டவாறு கொட்டும் பனி மழையில் உறுதியுடன் நின்றதனை சன்னல்வழியே மகிந்த பார்த்திருந்தால் வேர்த்து விறுவிறுத்திருக்கும்.

இதுவரை நேரடியாக புலிகள் படையினை எதிர்கொள்ளாத மகிந்த லண்டன் வீதிகளில் அந்த புலிகள் கூட்டத்தை கண்டு அரன்டு போயிருப்பான். அங்கிருந்து சிறிலங்கா தூதரகத்திற்கு பிரத்தியேக வழியாக அழைத்து செல்லப்பட்ட மகிந்த திட்டமிட்ட நிகழ்வுகள் எதிலும் பங்குபற்றாது ஒருநாள் முன்னதாகவே ஈரல்குலையை கையில் பிடித்தவாறு சிங்கள தேசம் திரும்பிச் சென்றமை எமது மக்களது ஒன்றுபட்ட போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

newsஅதிலும் குறிப்பாக சிங்களத்தை சினம் கொள்ளவைத்தது தமிழர் கைகளில் எந்தியிருந்த எமது தேசியக் கொடியான புலிக் கொடியைப் பார்த்தே. அந்த கோபத்தை லண்டன் காவல்துறை மீதும் அரசாங்கத்தின் மீதும் திருப்பி ஆறுதல் தேடிக்கொண்ட சிங்களத்திற்கு அதிலும் கிடைத்தது ஏமாற்றமே.

கட்டுரைகள் வாயிலாக மக்களிற்கு கருத்துக்களை கூறுகின்றோம் என கிளம்பியிருக்கும் சில அதிமேதாவிகளது கருத்தினை ஆமோதிப்பது போன்று புலம்பெயர் தேசங்களில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் ஊர்வலங்களில் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது படங்களையும் தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் கொடியாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் எமது தேசியக்(புலி) கொடியினையும் பயண்படுத்தக் கூடாது என நிகழ்வு ஒழுங்கமைப்பாளர்கள் வற்புறுத்திவரும் நிலையில் மக்கள் தன்னெழுச்சியாக முன்னெடுத்த இப்போராட்டத்தில் தேசியக் கொடியை கையிலேந்தி "களமாடி பாடம் புகட்டியுள்ளனர்".

அதைவிட ஒரு நாட்டின் அதிபரின் வருகையை எதிர்த்து நிகழ்த்தப்பட்ட போராட்டத்தில் அதுவும் முன்னறிவிப்பின்றி அனுமதிபெறாது திடீரென நடாத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழீழ தேசியக் கொடியுடன் எம்மவர்கள் போராட்டம் நடத்தியது தொடர்பாக லண்டன் காவல்துறை எதுவித நடவடிக்கையும் எடுக்காதிருந்தமையும் அதனை ஆமோதித்து லண்டன் அரசதரப்பு கருத்துத் தெரிவித்திருக்கின்றமையும் சிறந்த சூழலாகும்.

இந்த தேசியக் கொடிக்காக எத்தனை பேர் இரத்தம் சிந்தினார்கள் என்பது தற்போது புலம்பெயர் தேசங்களில் அதனை பயன்படுத்துவதற்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்களுக்கும் நன்றாக தெரிந்திருக்கும்.

உலகத்தில் எந்த மூலையில் தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்கென்று முகவரி கொடுத்தது எமது தேசியத் தலைவரது தலைமையிலான விடுதலைப்போராட்டமும் அதனடிப்படையில் மாவீரர்களது தியாகமுமாகும்.அதன் அடையாளமான தேசியக் கொடியை எக்காரணம் கொண்டும் நாம் புறந்தள்ளவோ தவிர்க்கவோ முடியாது. எமது உடலில் உயிர் நிலைபெற்றிருக்கும் வரைதான் எமது ஆட்டம் பாட்டம் எல்லாம். அந்த உயிர்பிரிந்து வெற்றுடலானால் அதற்கு மதிப்பே கிடையாது. அதுபோன்றே எமது தேசியக் கொடி எமது வாழ்வில் நீக்கமற நிலைத்துவிட்ட ஒன்று. அதனை தவிர்ப்பது சாத்தியமற்றதாகும்.

தமிழகத்தில் முன்னர் மத்திய அமைச்சராக இருந்த அன்புமணி ராமதசு ஒருதடவை வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டு வந்தபோது தன்னை தமிழராக அடையாளப்படுத்திய போது நீங்கள் இலங்கைத் தமிழரா என அந்நாட்டுப் பிரதிநிதி வினவியதாக பின்னாலில் நிகழ்வொன்றில் குறிப்பிட்டிருந்தார். இந்திய மத்திய அமைச்சர் ஒருவர் தமிழராக இருந்ததால் அவரை இலங்கைத் தமிழராக அடையாளப் படுத்தப்பட்டதற்கு எமது போராட்டமே காரணமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்கள் குண்டுச் சட்டிக்கள் குதிரை ஓட்டிச்கொண்டிருந்த காலம் மாறி வளர்ச்சியடைந்த நாடுகளை நோக்கி பயணித்து இன்று இலட்சாதிபதிகளாகவும் கோடீசுவரர்களாகவும் இருப்பதற்கும் தமிழர்கள் என்ற அடையாளம் அழுத்தமாக ஏற்படுவதற்கு எமது விடுதலைப் போராட்டத்தின் எழுச்சியே காரணமாகும் என்பதை யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.

இந்த சர்வதேச அங்கீகாரத்தின் பின் நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட மானமறவர்களான யுகங்கள் கண்டிராத மாவீரர்களது ஒப்பற்ற ஈகமும் விடுதலைக்கு சாவிலும் வலிமைசேர்த்த இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட எமதருமை உறவுகளது தியாகமும் இருப்பதை உணர்ந்து கொண்டு எமது தேசிய அடையாளம் ஆகிய தேசியக்(புலி) கொடியையும் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களது படங்களையும் கையிலேந்தி விடுதலைப் போரை முன்னெடுப்போம்.

மலைபோல் மக்கள் சக்தி எமக்குப் பின்னால் இருக்கும் வரை எந்த புதிய சவால்களையும் எதிர்க்கத்தயார் என கூறிவந்த தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் முள்ளிவாய்க்காலில் வைத்து எமது விடுதலைப் போராட்டத்தை புதிய பரிமாணத்திற்கு இட்டுச் சென்று உயிர்ப்புடன் இயங்கி தமிழீழத்தை மீட்டெடுப்பதற்கான இறுதி யுத்தத்திற்கு தயாராகி வருவதும் அந்த மகத்தான மக்கள் சக்தியை நம்பித்தான். அந்த நம்பிக்கைக்கு உயிர் கொடுத்து தலைவருடன் கரம்கோர்த்து தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலானதும் நெருக்கடியானதுமான புறச் சூழலை தவிடுபொடியாக்கி தமிழீழத்தை வென்றெடுப்போம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

ஈழதேசம் இணையத்தள ஆய்வாளர் : ம.செந்தமிழ்(01-01-2011)

ஈழ அதிர்வுகள் தொடர்பாக உங்கள் கருத்துக்களை தெரிவிக்க athirvalaikal@hotmail.com

| | Read More »

கப்பம் கொள்ளை என்ற பெயரில்அரங்கேறும் திட்டமிட்ட கொலைகள்! வெளிச்சத்திற்கு வராத மர்மங்களின் பின்னனி என்ன?

kurukkalகப்பம் கொள்ளை என்ற பெயரில் தற்போது திட்டமிட்ட கொலைகள் நடைபெறுவதாக யாழ்தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கொலைகளை பற்றி உரிய முறையில் கவனயீர்ப்பை செய்யாவிட்டால் இந்தநிலை நிச்சயம் மற்றவர்களுக்கும் ஏற்படும் என அண்மையில் கொலைசெய்யப்பட்ட கல்விப்பணிப்பாளரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் தெரிவித்திருந்தார்.

அண்மையில் நடைபெற்ற மூன்று கொலைச்சம்வங்கள் பற்றிய செய்தியை கீழே இணைத்துள்ளோம்.

சம்பவம் – 01

யாழ்ப்பாணம் வலிகாமம் வலய துணைக் கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கம் (52) கடந்த டிசெம்பர் 26 ஆம் நாள் (ஞாயிற்றுக்கிழமை) 11 மணியளவில் உரும்பிராயில் உள்ள அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த கொலையாளிகள் சுட்டுவிட்டுத் தப்பியுள்ளனர்.

துணைக் கல்விப் பணிப்பாளரின் மகள் அணிந்திருந்த நகைகளைப் பறிக்க முயன்ற கொள்ளையர்கள் அவருடன் தவறாக நடக்க முயன்றதாகவும் கொல்லப்பட்டவர் மகளின் அருகில் வந்து அதனைத் தடுக்க முயன்ற போது அவரைச் சுட்டு விட்டுத் தப்பியோடியுள்ளனர். கல்விப்பணிப்பாளரை சுட்டுக்கொன்ற கொலையாளிகள் அவரது 13 வயது மகளின் தோடுகளை மட்டும் பறித்துச் சென்றுள்ளனர்.

இதேமாதிரியான நிகழ்வு கடந்த டிசெம்பர் 12 ஆம் நாள் வலிகாமம் சங்கானையில் இடம்பெற்றது. . அதன்போது வீடு புகுந்து கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முருகமூர்த்தி ஆலய முதன்மைக் குருவான நித்தியானந்த சர்மா மற்றும் அவரது பிள்ளைகள் படுகாயமடைந்தார்கள். அவர்களில் நித்தியானந்த சர்மா வைத்தியம் பயனளிக்காமல் நான்கு நாட்களில் இறந்துபோனார். இவ்விரு நிகழ்வுகளும் யாழ்ப்பாண மக்களிடம் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

முதலில் இந்தக் கொலை, கொள்ளை முயற்சியில் ஆயுதக் குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டது என எண்ணப்பட்டது. இப்போது இந்தப் படுகொலையை யாழ்ப்பாணக் குடாநாட்டை வல்வளைப்புச் செய்துள்ள சிங்கள இராணுவம் செய்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சுட்டுக் கொல்லப்பட்ட துணைக் கல்வி இயக்குநர் சிவலிங்கம் அதே நாளில் யாழ்ப்பாணத்தில் நடந்த பாதுகாப்பு நிகழ்வில் பள்ளி மாணவர்களைக் கட்டாயப்படுத்தி சிங்கள தேசிய கீதத்தைப் பாட வைத்ததை அவர் விரும்பவில்லை என்றும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் அதனால் ஆத்திரமடைந்த சிங்கள இராணுவமே கொள்ளை என்ற போர்வையில் இந்தப் படுகொலையைச் செய்திருக்கிறது எனக் குற்றம்சாட்டும் துண்டுப் பிரசுரங்கள் யாழ்ப்பாணத்தில் வெளிவந்துள்ளன.

சம்பவம் – 02

மூன்று நாள்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து தந்திரமாகக் கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் வெட்டுக் காயங்களோடு சடலமாக நேற்று மீட்கப்பட்டார். இந்த அதிர்ச்சிதரும் சம்பவம் தென்மராட்சி சரசாலைப் பகுதியில் நடைபெற்றுள்ளது.

மீசாலை, புத்தூர் சந்தியைச் சேர்ந்த மகேந்திரசெல்வம் திருவருட்செல்வன் (செல்வன்) (வயது 28) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். தொடர்ச்சியாக அடுத்தடுத்து நிகழ்ந்துவரும் படுகொலைச் சம்பவங்களால் குடாநாட்டு மக்கள் பயத்தால் உறைந்துபோயுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:

வாகனங்களைக் கொள்வனவு செய்து பின்னர் அவற்றை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுவந்த இந்த இளம் குடும்பஸ்தரின் வீட்டுக்குக் கடந்த திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் மோட்டார் சைக்கிளில் இரு நபர்கள் வந்தனர்.

கனகம்புளியடிச் சந்தியில் ஒரு வாகனம் விற்பனைக்காக இருக்கிறது. வந்து பார்க்க முடியுமா?' என்று கூறித் தந்திரமாகக் குறித்த குடும்பஸ்தரான செல்வனை அழைத்துச் சென்றுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்தவர்களோடு சென்ற செல்வனைக் காணாது இரவு முழுதும் குடும்பத்தினர் தேடியலைந்தனர். இந்தச் சமயத்தில் வீட்டாரின் தொலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது.

அதில் பேசிய மர்ம நபர்கள் பெருந்தொகைப் பணத்தைக் கேட்டு மிரட்டினர். குறித்த தொகைப் பணத்தைத் தராவிட்டால் செல்வனைக் கொலை செய்து விடுவோம் எனவும் அச்சுறுத்திவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டனர். அடுத்த நாள் காலை செல்வனின் குடும்பத்தினர் சாவகச்சேரிப் பொலிஸில் அதுகுறித்து முறைப்பாடு செய்தனர்.

இந்த நிலையில் நேற்று புதன்கிழமை மாலை மூன்று மணியளவில் சரசாலை, வேம்பிராய் வீதியில் இயற்கைத்திடல் காளிகோயிலுக்கு அண்மையாக உள்ள கல்குவாரி ஒன்றின் அருகே வெட்டுக் காயங்களோடு உடைகள் களையப்பட்டு உள்ளாடையுடன் மாத்திரம் செல்வனின் சடலம் வீசப்பட்டுக் கிடந்தது.

இதுபற்றி அறிந்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.

படுகொலை செய்யப்பட்ட செல்வன் நீண்டகாலமாக வன்னிப்பகுதியிலும் வசித்து வந்தாரெனவும், ஒரு வருடத்துக்கு முன்னரே நலன்புரி நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டு மீள்குடியேறினார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

செல்வன் கொண்டுசென்ற மோட்டார் சைக்கிளையும் ஆவணங்களையும் கொலையாளிகள் எடுத்துச் சென்றிருப்பதாகவும், சடலத்தின் நிலையைப் பார்க்கும்போது செல்வன் இரு நாள்களுக்கு முன்னரே கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் எனவும் சடலத்தை நேரில் பார்த்த அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

சரசாலைச் சம்பவம் குறித்து இராணுவப் பேச்சாளர் உபயமெதவெலவிடம் வினவியபோது, மேற்குறித்த சம்பவம் தொடர்பாகத் தனக்கு இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

இதேவேளை பொலிஸ் தரப்புத் தகவல்களைப் பெறுவதற்காகச் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்துடன் தொடர்புகொண்டபோது,"தற்போதுதான் விசாரணைகளை ஆரம்பித்திருக்கிறோம். நாளை (அதாவது இன்று) காலைதான் விளக்கமளிக்க முடியும்' என்ற பதிலே கிடைத்தது.

கடந்த மூன்று வாரங்களுக்குள் நடைபெற்ற இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் இருவர் காவுகொள்ளப்பட்ட அதிர்ச்சியிலிருந்து பயங்கரத்திலிருந்து குடாநாட்டு மக்கள் மீள்வதற்கிடையில் மூன்றாவது கொலைச் சம்பவமும் நடைபெற்றிருக்கிறது. இதனால் குடாநாட்டு மக்கள் மத்தியில் பெரும் பீதிநிலை உருவாகியுள்ளது.

சம்பவம் - 3

சங்கானையில் குருக்களும் அவரது இரு மகன்மாரும் துப்பாக்கியால் சுடப்பட்ட வழக்கில் கைதான இரு படையினரையும் இரு தமிழ் இளைஞர்களையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 11ஆம் திகதி சங்கானையில் குருக்கள் மீதும் அவர் இரு மகன்கள் மீதும் இரு இளைஞர்கள் துப்பாக்கிப்பிரயோகம் செய்ததில் காயமடைந்த 55 வயதான குருக்கள் கடந்த புதன் இரவு உயிரிழந்தார்.

கொள்ளையடிக்கச் சென்ற வேளையில் இவர்கள் மீது துப்பாக்கியினால் சுடப்பட்டது. இவர்களை துப்பாக்கியால் சுட்ட இரு இளைஞர்களும், அவர்களுக்கு துப்பாக்கியைக் கொடுத்து அதற்கு உடந்தையாக இருந்த இரு படையினரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் நால்வரும் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது மல்லாகம் நீதிமன்றம் இவர்களை 14 நாட்கள் தொடர்ந்து விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

ஈழநேசன்

| | Read More »

விக்கி லீக்ஸ் கசிவு: கோதுமை மா கொடுத்து கோபம் தணிப்பு



இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது தலைமைச்செயலகத்துக்கு அனுப்பிய செய்திகளை, சிலவற்றை விக்கி லீக்ஸ் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ரொபேட் ஓ பிளேக் இலங்கைத் தூதராக இருந்த காலகட்டத்தில் அவர் மகிந்தவையும் இலங்கை அரசையும் கடுமையாக விமர்சித்து அனுப்பிய செய்திகள் வெளியானதால், இலங்கை அரசு இதுகுறித்து தமக்கு விளக்கம் தரவேண்டும் என்று கேட்கும் அளவிற்கு நிலைமை மோசமடைந்தது.

அதனால் இருநாடுகளுக்கும் இடையே தோன்றிய நெருக்கடியை அமெரிக்கா சமாளிக்க முனைகிறது போலத் தேன்றுகிறது. சமீபத்தில் பெய்த பெருமழை காரணமாக நாட்டின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது, இதனைச் சாட்டாகப் பயன்படுத்தி நேற்றைய தினம் அமெரிக்க தூதுவர் பற்றீசியா பூட்டின் சுமார் 5.5 மில்லியன் அமெரிக்க லாடர் பெறுமதியான கோதுமை மாவை, உலக உணவுத்திட்டமூடாக பசிலிடம் வழங்கியுள்ளார்.

அதாவது கோபத்தைத் தணிக்க கோதுமை மா கொடுக்கப்பட்டுள்ளது. பெயரளவில் உலக உணவுத் திட்ட அதிகாரி ஒருவரையும் பூட்டின் அழைத்துச் சென்றுள்ளார். அனால் அவர் கைகளைக் கட்டியபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தபடி நின்றுவிட்டுத் திரும்பியதாக விடையம் அறிந்த வட்டாரங்கள் செய்திவெளியிட்டுள்ளது.

| | Read More »

புலிகளின் ஆயுதக் கப்பலை அழிக்க அமெரிக்கா உதவியதா ?

விக்கிலீக்ஸில் வெளியாகியுள்ள தகவல்கள் ஒரு பக்கம் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், விடுதலைப் புலிகளுடனான போரில் அமெரிக்காவின் இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் இலங்கைக்கு மிகுந்த உறுதுணையாக இருந்ததாகவும் செய்திகள் வெளியாகின்றன. விடுதலைப் புலிகளோடு நடைபெற்ற போரில் இலங்கை அரசுக்கு அமெரிக்க இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் பல வழிகளில் ஆதரவினை வழங்கியதாக அரசாங்கத் ஆதரவின் கீள் இயங்கிவரும் நாழிதள் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. அந்த ஆங்கில நாழிதளில் பல செய்திகள் இதுகுறித்து வெளியாகியுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை ஏற்றிவந்த பல கப்பல்கள், அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவினரால் இனம்காணப்பட்டுப் பின்னர் இலங்கைக்குத் தகவல் வழங்கப்பட்டதாகவும். பசுபிக் பிராந்தியத்தில் இருக்கும் அமெரிக்க கடற்படையினர் பல தகவல்களை வழங்கிவந்ததாகவும் அது மேலும் தெரிவித்துள்ளத்து. இலங்கை போன்ற நாடுகளிடம், கடலை நெடுந்தூரம் கண்காணிக்கும் அதிசக்திவாய்ந்த ராடர்கள் இருந்திருக்கவில்லை. எனவே வேறு ஒரு வல்லரசின் உதவியின்றி புலிகளின் ஆயுத வினியோகக் கப்பலை இலங்கை அரசால் தாக்கியிருக்க முடியாது என்பதே யதார்த்தமாகும்.

போர் உச்சக்கட்டத்தை அடைந்தவேளை, முள்ளிவாய்க்காலில் உள்ள மக்களை அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய படையணி காப்பாற்றும் என்ற கட்டுக்கதைகளும், சிங்கள இனவாதிகளால், திட்டமிட்டே பரப்பப்பட்டுவந்தது என்பது குறிப்பிடத்தக்கவிடையமாகும். ஒரு நாடு நிச்சயம் தலையிட்டு யுத்தநிறுத்தம் ஒன்றைக்கொண்டுவரும் என இறுதிநேரத்தில் விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் நம்பியிருந்தனர் என்பதை எவராலும் மறுக்க முடியாது. இந் நிலையில் குறிப்பிட்ட எந்த ஒரு நாடு இந்தியாவை மீறிச் செயல்பட விரும்பவில்லை என்பதே இறுதியில் கூறப்பட்ட காரணமாக அமைந்தது.

2007ம் ஆண்டு புலிகளின் ஆயுதக் கப்பல் ஒன்றை தாம் அழித்ததாகக் கூறி இலங்கை அரசு வெளியிட்ட காணொளி

| | Read More »

இலங்கையில் கூட்டுப் பயிற்சி ஏன்? - திருப்பி அடிப்பேன்!: சீமான் பாகம் 6

இலங்கையின் முள்வேலி முகாமில் இருந்த சகோதரி ஒருத்தி பேசினாள்... ''அண்ணா, முழங்கால் அளவு தண்ணீர். படுக்கக்கூட இடம் இல்லை. மடியில் இருக்கும் குழந்தைக்குக் கொடுக்க பால் இல்லை. சாப்பாட்டுக்குத் திண்டாடுற மாதிரியே, அன்றாடக் கடன்களைக் கழிக்கவும் அல்லாட வேண்டிய நிலை.

மாற்று உடைகள் இல்லாமல் தவிக்கிறோம் அண்ணா. இங்கே சாகக்கூட எங்களுக்கு வழி இல்லை. ஒருவர் குரல்வளையை இன்னொருவர் நெரிச்சு செத்தாத்தான் உண்டு!''

என் தொலைபேசியை ஒட்டுக்கேட்கும் உளவுத் துறை பெருமகன்களே... இந்தக் கண்ணீரையும் கதறலையும் உரியவர்களிடம் கொண்டுபோய்ச் சேருங்கள். அப்படியாவது அவர்களுடைய கல் மனது கரைகிறதா எனப் பார்க்கலாம்.

ஈழத்தில் இழவு விழுந்தாலும், இராமேஸ்வரம் இரத்தக்களறி ஆனாலும், தனுஷ்கோடியில் தமிழன் பிணம் மிதந்தாலும்... மூச்சுவிடாமல் இருப்பது எங்களின் தமிழர் குணம். ஆனால், 'ஐயோ’ எனக் கதறினால், 'அனுப்புங்கள் போலீஸை...’ என்கிற உத்தரவு மட்டும் பொத்துக்கொண்டு வந்துவிடும்.

இலங்கைக் கடற்படைக்கு இந்தியக் கடற்படை பயிற்சி அளிக்கும். இரு நாட்டுப் படைகளும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடும்!’ என இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் அறிவிக்க... அதை எதிர்த்து இந்த அன்னை மண்ணில் இருந்து ஒரு குரல்கூடக் கிளம்பவில்லை.


எதற்கு அங்கே இந்திய இராணுவம்? மிச்சம் இருக்கும் தமிழர்களையும் சுட்டு வீழ்த்தவா? எங்களின் மீனவர்களைச் சிங்களவன் சுட்டான்... சீனன் சுட்டான்... இறுதியாய் இந்தியனும் சுடப்போகிறானா? இல்லை, 'நீங்கள் சரியாகச் சுடுவதில்லை... நாங்கள் சொல்லிக்கொடுப்பதுபோல் சுட்டால், தமிழர்களின் தலை பரங்கிப் பழமாய் சிதறிவிடும்!’ எனக் கற்றுக்கொடுக்கப் போகிறீர்களா?'' என காங்கிரஸ் அரசின் சட்டையை உலுக்கி கேள்வி கேட்க இங்கே ஆள் இல்லை.

கச்சத்தீவைச் சுற்றி சீன இராணுவம் இருப்பது ஏன்?’ எனத் தமிழர்களுக்காகக் கேட்க இங்கே எந்த நாதியும் இல்லை. இதைச் சொன்னால், 'சீமான் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறான்’ என அலறுகிறார்கள். வெள்ளையர் காலத்தில் இருந்த வாய்ப் பூட்டுச் சட்டம் இந்தக் கொள்ளையர் ஆட்சியிலும் தொடர்கிறதே!

நெய்வேலியில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டால், 'சீமான் பேசினால் மின் உற்பத்தி பாதிக்கப்படும்!’ எனச் சொல்லி தடை விதிக்கிறார்கள். மின் உற்பத்திக்கும் என் பேச்சுக்கும் என்ன சம்பந்தம்? நான் பேசாவிட்டால் மட்டும் மின் உற்பத்தி சீராகி, தமிழகம் ஜொலிக்கப்போகிறதா? ஆற்காட்டார் இருக்கும் வரை 'இருண்ட பூமி’யாகத்தானே தமிழ்நாடு இருக்கும்?

குரலை அடக்க எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் அரசாங்கத்தில்? அதையும் மீறிப் பேசினால், இறையாண்மை அஸ்திரத்தை ஏவிவிடுகிறார்கள். எங்களைப்போல் இறையாண்மையைக் காக்கக் கூடியவர்கள் யாரேனும் இருக்கிறார்களா இந்த மண்ணில்? இளிச்சவாயர்களாக, ஈனப் பிறவிகளாக ஏதும் செய்ய வழி இன்றி, இன்று வரை அழுகையை மட்டுமே ஆயுதமாக ஏந்தும் எங்களைப் பார்த்து இறையாண்மை மீறல் என்கிறீர்களே, உங்களிடம் ஒரே ஒரு கேள்வி...

சிங்களவன் இன்று வரை ஒரு மலையாள மீனவனையாவது தாக்கி இருக்கிறானா? இலங்கையின் கடல் எல்லையை எட்டாமல் மீன்பிடிக்க மலையாளி மட்டும், கலை கற்றுவைத்து இருக்கிறானா? மலையாள மீனவனைத் தாக்கினால், அடுத்து என்ன நடக்கும் என்பது சிங்களவனுக்குத் தெரியும். இந்திய அரசியலில் அதி முக்கிய சக்திகளாக இருக்கும் மலையாளிகள் சிங்களவனின் குடுமியை உலுக்கிவிடுவார்கள்.

ஆனால், எத்தனை தமிழர்கள் சிங்களவனால் சிதைக்கப் பட்டாலும், எங்கள் பிரதிநிதிகள் எதிர்த்துக் கேட்கப்போவது இல்லை. தியாகப் பெருந்தகை, அருட்பெருஞ்ஜோதி அன்னை சோனியா காந்தியின் முகம் சுண்டிவிடக் கூடாது என்பதுதான் இங்கு இருப்பவர்களின் முழு நேரக் கவலை.

இந்த தைரியத்தில்தான் தமிழர்களின் தலையில் கால் வைத்து விளையாடுவதில் அன்னை சோனியாவுக்கும் அறிவார்ந்த மன்மோகன் சிங்குக்கும் மட்டற்ற மகிழ்ச்சி.

சிங்கள இராணுவத்தோடு கூட்டுப் பயிற்சியில் இறங்க இந்திய இராணுவம் செல்வது ஏன்? இனப் படுகொலையின் சூத்திரதாரி ராஜபக்ஷேயை ஆதாரத்தோடு வளைக்க, ஐ.நா. குழு ஆயத்தமாகி வரும் வேளையில் இந்திய இராணுவம் அங்கே செல்வது கூட்டுப் பயிற்சிக்கா? இல்லை குழப்பம் உண்டாக்கும் சூழ்ச்சிக்கா? சிங்களவனின் இனப் படுகொலையை மறைக்கவே இந்தியா முயல்கிறது என்பது என் அழுத்தமான குற்றச்சாட்டு.

கொஞ்சம் இரத்தம் தாருங்கள்... நிறைய சுதந்திரம் தருகிறோம்’ என்றான் இந்திய தேசிய இராணுவத்தை நிறுவிய புரட்சியாளன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். 'நிறைய இரத்தம் தந்துவிட்டோம். கொஞ்சம் சுதந்திரம் தாருங்கள் உலகத்திலே!’ என்பதுதான் தமிழ்த் தேசியப் புரட்சியாளன் அண்ணன் பிரபாகரனின் கோரிக்கை. ஒருபோதும் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவிடக் கூடாது என்பதில் இறுதி வரை புலிகள் உறுதியாக இருந்தார்கள்.

புலிகளிடம் சீன அரசு இணக்கம்கொள்ளத் துடித்ததை உலகத்தில் எவரேனும் மறுக்க முடியுமா? 'என் தாய்த் தமிழ் உறவுகள் வாழும் இந்தியாவுக்கு எதிராக என் சிந்தை எப்போதும் திரும்பாது!’ என உரக்கச் சொன்னவர் தேசியத் தலைவர் அண்ணன் பிரபாகரன். ஆனால், தாய்த் தமிழ் உறவுகள் வசிக்கும் இந்தியா, போரின்போது சிங்களத்துக்குச் செய்த உதவிகள் போதாது என இப்போதும் கூட்டுப் பயிற்சிக்குப் படை அனுப்புகிறது.


பெருமதிப்புக்குரிய பிரதமர் அவர்களே...

காமன் வெல்த் மோசடி, அலைக்கற்றை அமளி துமளி என உங்களைச் சுற்றி இத்தனை களேபரங்கள் நடக்கையிலும், தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மட்டும் தவறாமல் செய்கிறீர்களே... சிங்களத்துக்கும் சீக்கியத்துக்கும் அப்படி என்ன அண்ணன் - தம்பி உறவு?

ஈழத் தமிழர்கள் என்ன ஆனாலும் வாய் பேசா மௌனியாக இருக்கும் நீங்கள், சீக்கிய இனத்துக்கு சிக்கல் நேர்ந்தால், ஊமையாகவே உட்கார்ந்து இருப்பீர்களா ஐயா? பொழுதுபோகாத குறைக்கு 'புலிகள் கொல்லப் பார்க்கிறார்கள்’ எனக் கிளப்பிவிட்டுத் தாடியை நீவிக்கொள்ளவும் செய்கிறீர்கள். இதை எல்லாம் முன்கூட்டியே கண்டுபிடித்து உங்களை உஷார்படுத்திய உளவுத் துறை, மும்பையில் 25 தீவிரவாதிகள் நுழைந்து 150-க்கும் மேற்பட்டோரை சல்லடையாக்கியபோது எங்கே போய் உறங்கிக்கிடந்தது?

கார்கில் போரில் மடிந்த வீரர்களுக்கு வீடு கட்டிக்கொடுத்ததில் ஊழல், காமன் வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஊழல் என உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலில் ஏற்றிய காங்கிரஸ்காரர்களே... இப்போது 1.76 லட்சம் கோடிக்கு ஊழல் புரிந்து உலக மகா சாதனையையும் செய்து இருக்கிறீர்களே... ஊழல் செய்வது எப்படி? அவை உலகுக்குத் தெரியும்போது உணர்ச்சியற்ற ஜடமாக இருப்பது எப்படி? விசாரணை என வந்தால், ஆவணங்களைத் தொலைப்பது எப்படி? அப்படியே விசாரணை நடந்தாலும், அதனை இழுத்தடிப்பது எப்படி? ஒரு ஊழலை மறைக்க அதைவிட பெரிய ஊழலைச் செய்வது எப்படி என்கிற வித்தைகளை எல்லாம் இலங்கை அரசுக்கும் கற்றுக்கொடுத்து அவர்களையும் ஊழலில் சாதிக்கவைக்க... காங்கிரஸ் கட்சியின் அமுக்கல் படையை இலங்கைக்கு அனுப்புவதுதானே சரியாக இருக்கும்?!

அதைச் செய்யாமல் ஏனய்யா இன்னமும் எங்களைக் குதறுவதிலேயே குறியாக இருக்கிறீர்கள்?

தங்களைச் சுற்றி இவ்வளவு அழுக்கு மூட்டைகளை வைத்திருக்கும் உங்களைப் பார்த்து இப்படித்தான் கோஷம் எழுப்பத் தோன்றுகிறது.

சோனியாஜி... மன்மோகன்ஜி... 2ஜி... 3ஜி... அடச்சீ!

திருப்பி அடிப்பேன்....

| | Read More »

தமிழ் மக்கள் மீதான கலாசாரப் போர்

இன்று விடுதலைப்புலிகளுடனான போர் நிறைவடைந்துவிட்டதாகக் கூறப்படுகின்றது. ஆனால் இப்போரைத் தலைமையேற்று நடத்திய வெற்றிவீரனாகத் தன்னைப் பிரகடனப்படுத்தி வரும் ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவோ, இது போர் அல்ல மக்களை விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்டெடுத்த மனிதாபிமான நடவடிக்கை என்று சத்தியம் செய்து வருகின்றார்.
nalloor
ஒரு சில நாட்களுக்குள் நாற்பதனாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றும் பல்லாயிரக்கணக்கானோரை ஊனமுற்றவர்களாகவும், விதவைகளாகவும், காணாமல் போனவர்களாகவும் ஆக்கியும், கோடிக்கணக்கான பெறுமதிமிக்க சொத்துக்களையும், குடியிருப்புக்களையும், உற்பத்தி மையங்களையும் அழத்தும் மேற்கொள்ளப்பட்ட ஒரு பயங்கரவாத நடவடிக்கைக்கு மனிதாபிமான நடவடிக்கை எனப் பெயர் சூட்டப்படுமாக இருந்தால், போர் எப்படி இருக்கும் என்பதை நாம் ஊகிக்கமுடியும்.

எப்படி இருந்த போதிலும் தமிழ் மக்களைப்பொறுத்தவரையில் ஒரு பெரும் இன அழிப்புப் போர் இடம்பெற்று முடிவடைந்துள்ளது. இன்று இந்தப் போரின் கொரூரமான பாதிப்புக்கள் காரணமாக எமது மக்கள் படுமோசமான முறையில் நொந்து போயுள்ளனர்.

நிவாரணம், மீள்நிர்மாணம், அபிவிருத்தி போன்ற பரப்புரைகள் தினமும் இடம்பெற்ற போதிலும் எமது மக்களுக்குக் கிடைப்பதெல்லாம் கூடாத வாழ்க்கையும், குறை வயிற்று உணவும் தான். வறுமை, நோய், கல்வியின்மை, உறவுகளை இழந்த துயர் என்பவை எமது மக்களின் எதிர்காலத்தையே கேள்விகளுக்குள் தள்ளிவிட்டன.

இவைக்கும் மேலாக தட்டிக்கேட்க ஆளில்லை என்ற வகையில் எமது மக்கள் மீது புதிய இனவாத ஒடுக்குமுறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

இப்படியான ஒரு நிலையில் ஆயுதப் போரின் காயங்கள் ஆறமுன்பே எம்மீது இன்னொரு போர் தொடுக்கப்படுகிறது. இது தான் கலாசாரப் போர்.

ஆண்டாண்டு காலமாக யாழ்ப்பாணம் ஈழத்தமிழ் மக்களின் கலாசார மையம் எனக் கருதப்பட்டுவந்தது. பொதுவாகவே தமிழ் மக்கள் போத்துக்கேயர், ஆங்கிலேயர், ஒல்லாந்தர் என அந்நிய தேசத்தவரின் ஆட்சியில் அடிமைப்பட்டுக்கிடந்த போதிலும் கூட நமது கலாசாரத் தனித்துவத்தைப் பாதுகாத்தே வந்தனர். அவர்கள் தங்கள் சம்பிரதாயங்கள், சட்டங்கள் உட்பட தங்கள் கலாசார வாழ்வு முறையை என்றுமே விட்டுக் கொடுத்ததில்லை.

தனித்துவமான மொழி, வரலாற்றுப் பராம்பரியம் கொண்ட ஒரு வாழ்நிலப்பகுதி, பொதுவான பொருளாதாரம், தனித்துவமான கலாசாரமம் என்பன ஒரு தேசிய இனத்தின் அம்சங்களாகக் கருதப்படுகின்றன. இவற்றில் ஒன்றையோ அல்லது பலவற்றையோ அழிக்கும் போது அந்தத் தேசிய இனத்தின் தனித்துவம் சிதைக்கப்பட்டு மெல்ல மெல்ல அழிவை நோக்கி நகரும் நிலை உருவாகிறது.

இவ்வகையிலேயே எமது மொழி, நிலப்பகுதி, பொருளாதாரம் என்பவற்றைச் சிதைப்பதற்கான முன்முயற்சிகள் எப்போதோ ஆரம்பமாகிவிட்டன. எனினும் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்த போது இந்நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டன என்பதை எவருமே மறந்துவிட முடியாது. இப்போது எமது விடுதலைப் போராட்டம் பாரிய பின்னடைவைச் சந்தித்த பின்பு இத்தகைய முயற்சிகள் மீண்டும் தொடங்கிவிட்டன. அது மட்டுமன்றி எமது கலாசாரத்தின் மீதான போக்கும் தொடங்கிவிட்டது.

ஏ - 9 பாதை திறக்கப்பட்ட போது வடக்கை நோக்கி வசந்தம் வரப்போவதாக பெரும் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் சில நாட்களிலேயே வருவது வசந்தமல்ல பெரும் நாசம் என்பதை எம்மால் புரிந்து கொள்ளமுடிந்தது.

வீதியோரங்களிலும் வெட்டவெளிகளிலும் அழுகிய இளம் மங்கையரின் புன்னகை தவழும் உருவங்கள் வரையப்பட்ட பெரும் விளம்பரங்கள் முளைத்தன. பிரதான வீதிகள் முதற்கொண்டு குச்சொழுங்கைகள் வரை வர்த்தக வாகனங்களின் பவனிகள் தொடங்கின. கடைகளெல்லாம் ஆடம்பரப் பொருட்களின் குவிப்பு. இவற்றுக்கு மேலாக இசை நிகழ்ச்சிகள் என்ற பெயரில் வர்த்தக வானொலிகளில் ஆட்டம் பாட்டம் வீதியுலாக்கள். போரினால் நொந்து போய் வெந்த மனதுடன் விடிவு தேடித் தவிக்கும் எமது மக்களை மயக்கி ஆடம்பர மோகத்திற்கு ஆட்படுத்தி சிந்தனைச் சீரழிவை உருவாக்கும் கைங்கரியம் வர்த்தகத்தின் பெயரால் அரங்கேறுகிறது.

ஒரு பக்கம் எமது மக்களின் பணம் வர்த்தகம் என்ற பெயரில் கொள்ளையிடப்படுகிறது. மறபுறம் எமது சிந்தனை சீரழிக்கப்பட்டு எமது உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும் இயல்பான தன்மை மழுங்கடிக்கப்படுகிறது.

தென்னிலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சில பெண்கள் திருட்டு நடவடிக்கைகளிலும் சமூக விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு எமது இளம் சந்ததியினைச் சீரழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நடவடிக்கைகளுக்கு சில நம்மவர்களும் துணைபுரிவது தான் வேதனை தருகிறது. இதில் உள்ள பெரும் ஆபத்து என்னவென்றால் யாழ்ப்பாணத்தில் எய்ட்ஸ் நோய்த் தொற்றுக்கு ஆட்பட்ட சில இளம் வயதினர் கண்டுபிக்கப்பட்டிருப்பது தான். தென்னிலங்கைப் பெண்கள் மூலம், எயிட்ஸ் என்ற ஆட்கொல்லி நோயை எமது இளைஞர்கள் மத்தியில் பரப்பி எமது இனத்தையே அழிக்கும் முனைப்பு திட்டமிட்ட வகையில் சில சக்திகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவற்றின் தாக்கம் எம்மை நாமே சீரழிக்கும் ஒரு நிலைமையும் தோன்றுகின்றதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. எமது சில இளைஞர்களும், இளம் பெண்களும் இழிவான நடவடிக்கைகளில் பகிரங்க இடங்களில் ஈடுபடும் அசிங்கமும் தமிழர்தாயகத்தில் தலைகாட்டத் தொடங்கியுள்ளது. இது தொடர்ந்தும் அனுமதிக்கப்பட்டால் காலப் போக்கில் இது ஒரு நாகரிகமாகவே மாறி எமது ஒழுக்க விழுமியங்களே அழிந்து போகும் நிலை ஏற்படலாம்.

மதுப்பழக்கம் புகைப்பழக்கம் எமது சமூகத்தில் ஏற்கனவே உண்டு என்பது உண்மை தான். ஆனால் இன்று அது இளைஞர்களே பகிரங்கமாக புகைப்பிடிப்பதும்,மது அருந்திவிட்டு கலாட்டா செய்வதும், வீதிகளில் செல்லும் பெண்களை வம்புக்கு இழுப்பதும் என ஒரு போக்கு உருவாகி வருகிறது.

இப்படி ஒரு நிலைமை உருவாகுவதற்கு காரணம் இன்றைய சினிமா, தொலைக்காட்சி, வானொலி போன்றவற்றி;ன் நிகழ்ச்சிகள் என்றால் மிகையாகாது. கலாசாரச் சீரழிவை வீட்டுக்குள்ளேயே சென்று திணிக்கும் பணியை இவை மேற்கொள்கின்றன. இவற்றில் வரும் ஆபாச நடனங்கள், காதல் என்ற பேரில் காட்டப்படும் கொச்சைத்தனமான வக்கிரங்கள், தனி மனித வன்முறைகள், கும்பலாக மேற்கொள்ளும் காடைத்தனங்கள் இவையெல்லாம் எமது இளைஞர்களை அவர்களை அறியாமலேயே சமூகவிரோத நடவடிக்கைகளை நோக்கி ஈர்க்கின்றன. தாமே அவை போன்ற செயல்களில் ஈடுபடுவதையிட்டு பெருமைப்படுமளவிற்கு இந்த ஊடகங்கள் அவர்களுக்கு மூளைச்சலவை செய்யப்படுகின்றன. இளம் பெண்களும் இவற்றின் தாக்கத்திற்கு உட்படவில்லை என்று சொல்விடமுடியாது.

திருமணமாகாத இளம் பெண்களின் கருக்கலைப்பு வேகமாக அதிகரித்து வருவதாக யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் கவலை வெளியிடுமளவிற்கு நிலைமை படுமோசமாகியுள்ளது.

இதைவிட இன்னுமொரு பெரும் அபாயம் தென்னிலங்கையில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் வேலைக்கென எமது இளம் பெண்களை கொண்டு செல்வது? இதற்குச் சில அரச ஆதரவு அரசியல் வாதிகளும் துணைபோகின்றனர். நடந்து முடிந்த போர் காரணமாக ஏராளமான விதவைகளும், தமது உறவுகளை இழந்த பெண்களும் வறுமையில் வாடுகின்றனர். அந்த வறுமையைப் பயன்படுத்தி பல தரகர்கள் ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி எமது பெண்களைக் கடத்தும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இப்படியாகக் கடத்தப்பட்ட பல மலையக யுவதிகள் பலவந்தமாக விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதும், தற்கொலை செய்வதும் பழைய செய்திகள்.

இவ்வாறு எமது தொன்மை வாய்ந்த பெருமைக்குரிய கலாசாரத்தைப் பல வழிகளிலும் சீரழிந்து எமது இனத்தின் தனித்துவத்தைச் சிதைக்கும் ஒரு கலாசார யுத்தம் எமம் மீது எமது பலவீனங்களையே ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர் என்பதை நாம் மறக்கக் கூடாது.

ஆடம்பர மோகம், வரட்டுக்கௌரவம், இளவயதினரின் பாலியல் பலவீனங்கள், என்பன ஒரு புறமும் மறுபுறத்தில் இடப்பெயர்வின் அவல வாழ்வு, வறுமை, பாதுகாப்பின்மை என்பனவும் அவர்கள் எம்மீது இந்தப் போரைத் தொடக்க வாய்ப்புக்களை வழங்குகின்றன.

நாம் தமிழர் என்பதை அடையாளப் படுத்துவதில் எமது கலாசாரம் பிரதானமானது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. கடந்த நானூறு ஆண்டுகளுக்கு மேலாக அந்நியரின் ஆட்சியில் நாம் அடிமைப்பட்டிருந்த போதும் கட்டிக்காத்த எமது உயரிய பண்பாட்டை இன்று மட்டும் நாம் இழந்துபோகலாமா?

ஆயுதப் போராட்டத்தில் நாம் தோற்கடிக்கப்பட்டுவிட்டோம் என்பது கசப்பான உண்மை தான். ஆனால் இது ஒரு பின்னடைவு மட்டும் தான். ஆனால் எமது போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அது எமது விடுதலை வரை தொடரத்தான் செய்யும். ஆனால் எமது தொடரும் போராட்டத்தை வேருடன் அழிவித்து விட மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஒன்று தான் இந்தக் கலாசார யுத்தம். என்பதை நாம் மறந்துவிடக்கூடாது எனவே நாம் ஒவ்வொருவரும் விழிப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருப்பது எமது ஜீவாதாரத் தேவையாகும்.

செண்பகப்பெருமாள்

| | Read More »

கடல்மணலை அள்ளக்கூடாது என கேட்டவர் வடமராட்சி குடத்தனையில் சுடப்பட்டுக்கொலை!(படங்கள் இணைப்பு)

வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தின் குடத்தனை கிழக்கில் வீடு புகுந்து ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.



இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:

நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் குடத்தனை கிழக்கில் உள்ள இவரது வீட்டிற்குள் புகுந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் அவரது கணனியை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர். அதற்கிணங்க வீட்டினுள் அழைத்துச் சென்றபோது ஆயுததாரிகள் அவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இவரது மனைவி ஆயுததாரிகளை கட்டிப்பிடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆயுததாரிகள் அவரை இழுத்து வெளியில் எறிந்து விட்டு மீளவும் உள்ளே போய் சரமாரியாக சுட்டிருக்கின்றனர். இதில் படுகாயமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்டவர் பருத்தித்துறை தபாலக ஊழியரான தேவராசா கேதீஸ்வரன் (வயது 27) என்பவரேயாவார். தனது முகநூல் (Facebook) பகுதியில் சிறீலங்கா இராணுவம் மற்றும் துணைக் குழுக்களின் ஆதரவுடன் யாழ். மணித்தலைப் பகுதியில் மணல் அள்ளப்படுவதால் கடல் நீர் உட்புகுந்துள்ளதற்கான ஆதாரபூர்வமான படங்களையும், கார்த்திகைப் பூவை கையில் வைத்தபடி நிற்கும் படங்களையும் பதிவு செய்து வைத்திருந்தார். இதனாலேயே இவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்குடாவில் மீண்டும் தமிழினப் படுகொலைகள் அதிகரித்துள்ளன. கடந்த ஓரிரு வாரங்களுக்குள் ஆயுததாரிகளால் மூன்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மகிந்தவின் கடந்த ஆட்சியில் இடம்பெற்றதைப்போன்ற தொடர் படுகொலைகளும், வெள்ளைவான் கடத்தல்களும் மீண்டும் அதிகரித்துள்ளன. இதனால் முழுமையான இராணுவ ஆக்கிரமிப்புக்குள் வாழும் யாழ்குடா மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

| | Read More »

ஏன் நாடு கடந்த தமிழீழத்தின் செயற்பாடுகள் போதாது என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்?

புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை மக்களுக்கு அறிவிக்கும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன் கனடிய தமிழ் வானொலிக்கு பேட்டி ஒன்றை வழங்கியிருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு கடந்த தமிழீழ அரசுக்கான செயற்பாடுகளுக்கு எந்த தடையும் ஏற்படவில்லை. சுதந்திர தமிழீழத்திற்கு இன்றியமையாதது என்னவெனில் புலத்தில் வாழும் மக்களின் உறுதியான ஆதரவு என இப்புத்தாண்டுச் செய்தியாக புலம்பெயர் மக்களுக்கு கனடிய வானொலியூடாக நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன் தெரிவித்திருக்கின்றார்.

மேலும், நாடு கடந்த தமிழீழ அரசின் நடவடிக்கைகளுக்கு தாயக மக்களினதும், தமிழக மக்களினதும், உலகவாழ் தமிழ்மக்களினதும் முழுமையான ஆதரவினை எதிர்பார்ப்பதோடு, மலரும் இப்புத்தாண்டில் நம்பிக்கையுடன் நேர்மை வெல்லும் சத்தியம் வெல்லும் தர்மம் வெல்லும் என தெரிவித்துள்ளார்.

போராட்டத்தைத் தொடர்வதே இன்றைய காலத்தின் கட்டாயமாகிறது!: ருத்ரகுமாரன் புத்தாண்டுச் செய்தி


புதிய ஆண்டு மலரும் இத் தருணத்தில் தமிழீழ, தமிழக மற்றும் உலகத் தமிழ் மக்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்வடைகிறோம்.

கடந்த ஆண்டில் நாம் பெரும் துயர் நிறைந்தவர்களாக புதிய தசாப்தத்தில் காலடி வைத்திருந்தோம். மலரும் இப் புதிய சகாப்தம் ஈழத் தமிழரின் தசாப்தமாக அமைய வேண்டிய அவசியத்தினையும், அதற்காக நாம் உறுதியுடன் செயற்படுவதற்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளமையினையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த செயற்குழுவின் சார்பில் கடந்த ஆண்டு விடுத்த புத்தாண்டுச் செய்தியில் வெளிப்படுத்தியிருந்தோம்.

கடந்து சென்ற 2010 ஆம் ஆண்டில் நாம் திட்டமிட்டபடியே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்கினோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரு தடவைகள் கூடி அரசாங்கத்துக்கான அரசியலமைப்பினை உருவாக்கிக் கொண்டதுடன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை வழிநடத்திச் செல்வதற்கான அமைச்சரவையையும் உருவாக்கியது.

கருத்து ரீதியிலான எண்ணக்கருவாக ஆரம்பித்த எமது முயற்சி தற்போது பத்து அமைச்சுக்களைக் கொண்டதொரு அரசாங்கத்தின் வடிவத்தினை எடுத்து நின்று தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளமை நம் அனைவருக்கும் நம்பிக்கையையும் உத்வேகத்தினையும் தரக்கூடிய ஒரு வளர்ச்சிநிலையைச் சுட்டி நிற்கிறது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினைப் பொறுத்தவரை மலரும் இப் புதிய ஆண்டு தனது செயற்பாடுகளை விரிவுபடுத்திச் செல்வதற்கான ஆண்டாக அமைகிறது. அமைக்கப்பட்டுள்ள பத்து அமைச்சுக்களும் வௌ;வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்துச் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன.

மேலும் தமிழீழ அரசாங்கத்துக்கான எதிர்காலத் தேர்தல்களைப் பொறுப்பெடுத்து நடாத்துவதற்காக சுயாதீனமான தேர்தல் ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசவைக்கு மக்களால் இன்னும் தெரிவு செய்யப்பட வேண்டியுள்ள பிரதிநிதிகளுக்கான தேர்தல்களையும் இத் தேர்தல் ஆணையமே பொறுப்பெடுத்து நடாத்துமெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் மூலம் மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் நடைமுறை சாத்தியப்படாத அல்லது சாத்தியப்பாடு குறைந்த இடங்களில் பேராளர்களைத் தேர்ந்தெடுப்பது பற்றி மதியுரைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரை செய்யுப்பட்டவாறு பேராளர்களைத் தேர்ந்தெடுக்கும் செயற்பாட்டை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இவ்வருட ஆரம்பத்தில் மேற்கொள்ளவுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்க அரசியலமைப்பில் குறிப்பிட்டவாறு செனட்சபையினை அமைக்கும் நடவடிக்கையும் இவ் வருட ஆரம்பத்தில் மேற்கொள்ளப்படும்.

ஈழத்தமிழர் தேச மக்களது அடையாளத்தையும், அம்மக்கள் தமக்கெனத் தமது தாயகப்பகுதியில் தமிழீழத் தனியரசு அமைக்கும் சுதந்திர வேட்கையினையும், இதற்காகச் செயலாற்றும் உறுதியினையும் குறியீட்டுவடிவில் வெளிப்படுத்தும் வகையிலான தமிழீழத் தேசிய அட்டைகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தைத்திருநாள் முதற்கொண்டு அறிமுகம் செய்கிறது. இவையெல்லாம் நடந்தேறிய ஆண்டில் நாம் மேற்கொண்ட செயற்பாடுகளாகும்.

இன்றைய புத்தாண்டுத் தினத்தில் நாம் வழங்கும் செய்தியாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் தாயகத்துக்கும் இடையிலான இணைவு தற்போதய சூழலில் எத்தகையதாக அமையமுடியும் என்பது குறித்து எமது சில கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறோம்.

எம்மைப் பொறுத்தவரை நாம் எல்லோருமே தனித்தனி நாடுகளின் எல்லைகளுக்கப்பால் நாடு கடந்த நிலையில் வாழும் ஒரு தேசமாகக் கணிக்கப்படுபவர்கள். ஈழத் தமிழர் தேச மக்களாகிய நாம் இன்று பல்வேறு நாடுகளில் வாழும் அதேவேளை தொப்புள் கொடியுறவால் பிணைக்கப்பட்ட மக்களாக வாழ்ந்து வருகிறோம். எமது அரசியல், சமூக, பொருளாதார வாழ்வு இலங்கைத்தீவின் எல்லைகளைக் கடந்து விரிந்ததாகவும் இணைந்ததாகவும் உள்ளது. இதனால் நமக்கிடையே தாயகம், புலம் என்ற வேறுபாடுகள் கோட்பாட்டு ரீதியில் அர்த்தம் அற்றவையாகின்றன. இருந்தபோதும் நடைமுறையில் தாயகச் சூழலுக்கும் புலத்துச் சூழலுக்கும் வேறுபாடுகள் உள்ளன. இவற்றை நாம் நன்கு புரிந்துள்ளோம்.

நமது தேசத்தின் பாரம்பரியத் தாயகம் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்குப் பகுதியில் அமையப் பெற்றது. நமது தேசத்துக்கான அரசு இத் தாயக பூமியிலேயே அமையப்போகிறது. இத் தாயகபூமி சிங்கள பௌத்த இனவாதப்பூதத்தால் தற்போது ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. நமது தாயகத்தை ஆக்கிரமித்து நிற்கும் இனவாத அரசானது ஈழத்தமிழ் மக்கள் கொண்டுள்ள தேசத்துக்குரிய தகைமைகளை அழித்து விடுவதற்குக் கங்கணம் கட்டி நிற்கிறது. சிங்கள பௌத்த நாட்டில், தமது மேலாதிக்கத்தினை எதிர்ப்பேதுமின்றி ஏற்றுக் கொண்டு வாழுகின்ற உபரிகளாக தாயக மக்களைச் சிதைத்து விடுவதுதான் சிங்களத்தின் நோக்கம்.

பெரும் ஒடுக்குமுறைச் சூழலில், நாம் முன்னர் தெரிவித்தவாறு, தமிழீழத் தனியரசு தொடர்பாகப் பேசுவதற்கோ செயற்படுவதற்கோ நமது தாயகப்பூமியில் அரசியல்வெளி எதுவும் தற்போது இல்லை. இதனால் இப் பொறுப்பினைச் சிங்கள பௌத்த இனவாதப்பூதத்தின் பிடியில் சிக்கிக் கொள்ளாத, இலங்கைத்தீவுக்கு வெளியே வாழும் ஈழத் தமிழர் தேச மக்களாகிய நாம் தமிழக மற்றும் உலகத் தமிழ் மக்களின் பங்குபற்றலுடன் ஏற்றுக்கொண்டுள்ளோம்.

தமிழீழத் தனியரசினை அமைப்பதற்காக நாம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் சிங்களத்தின் பிடிக்குள் வாழும் மக்;களால், அரசியல் தலைமைகளால் பங்குபற்றுவதோ அல்லது இணைந்து கொள்வதோ தற்போதய சூழலில் முடியாத காரியம் என்பதனை நாம் தெளிவாகப் புரிந்து கொள்கிறோம்.

இதேவேளை, தாயகத்தில் வாழும் மக்களும் அங்குள்ள அரசியல் தலைவர்களும் ஈழத்; தமிழர் தேசத்தின் இருப்பை, தாயகப்பிரதேசத்தின் உரித்தை, மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டை, பாதுகாப்பான வாழ்வை உறுதிப்படுத்துவதற்காக நாளாந்தம் போராட வேண்டிய நிலையில் உள்ளனர். இப் போராட்டம் இலங்கைத்தீவில் எமது இனத்தின் இருப்புக்கு மிகவும் அத்தியாவசியமானது.

இத்ததைய போராட்ட வாழ்வு மக்களுக்குக் கிடைக்கும் எல்லாவகையான வெளிகளுக்குள்ளாலும் வெளிப்பட்டே ஆகவேண்டிய தேவையுள்ளது. இத்தகைய வாழ்விற்கான போராட்டத்தை எதிர்ப்பரசியல் எனவும் இது பலன் தராது எனவும் சிலர் கூறி வருகின்றனர். சிறுகச் சிறுக கொல்ல முனையும் ஒருவனை - அவன் பலசாலி, அவனை எதிர்ப்பதால் பலன் எதுவும் இல்லையென்பதால் அவனை எதிர்க்காது சிறுகச் சிறுகச் செத்துப் போ - என்று சொல்வது போல்தான் எதிர்ப்பரசியல் பயன் தராது என்று கூறுவோரது வாதம் இருக்கிறது.

நமது தேசத்தின் வாழ்வுக்கான போராட்டத்தை எதிர்ப்பு அரசியல் என்றுகூறி நாம் நிராகரிக்க முடியாது. ஓத்துழைப்பு அரசியல் என்று கூறி எம்மை விழுங்கத் துடிக்கும் இனவாதப்ப+தத்திடம் நமது தலையை நாமே நீட்டவும் முடியாது. இது ஈழத் தமிழர் தேசம் கௌரவமாகவும், சமத்துவமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான ஒரு போராட்டம். இலங்கைத் தீவில் சிங்கள பௌத்தத்தின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கீழ்ப்படிவதற்கு ஈழத் தமிழர் தேசம் தயாராக இல்லை. இதனைத் தாயக மக்கள் தமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புக்குள்ளாலும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

தாயக அரசியல்; தலைமைகள் வடக்கு கிழக்கு இணைப்பு உட்பட தாம் மக்கள் முன் வைத்த அரசியல் நிலைப்பாட்டுக்காகவும், ஈழத் தமிழர் தேசத்தினைப் பாதுகாப்பதற்காகவும் தம்மால் முடிந்தளவு, தமக்குக் கிடைக்கும் அனைத்து வெளிகளின் ஊடாகவும் போராட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. இதற்காகத் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் அனைத்துவகையான அரசியல் போராட்டங்களுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது தார்மீக ஆதரவினை வழங்கும். தேவையினைப் பொறுத்து தாயகத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு உறுதுணையான போராட்டங்களை இலங்கைத்தீவுக்கு வெளியே முன்னெடுக்கவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆவன செய்யும்.

தாயக மக்களின் சமூக பொருளாதார வாழ்வு உறுதியாகக் கட்டியெழுப்பப்படுவதில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பெரும் அக்கறை கொண்டுள்ளது. இதனையும் நாம் சிங்கள பௌத்த இனவாதப்பூதத்திடம் மண்டியிடாமல்தான் செய்ய வேண்டியுள்ளது. தற்போதய சூழலில் நேரடியாக நமது தாயக மக்களை நாம் உதவிகளுடன் அணுக முடியாமல் இருந்தாலும்கூட அவர்களது சமூக பொருளாதார வாழ்வு கட்டியெnழுப்பப்படுவதற்கு இரு வகை வாய்ப்புக்களை நாம் கவனத்திற் கொண்டுள்ளோம். ஒன்று, சிங்களத்தின் சூழ்ச்சிக்குள் சிக்கிக் கொள்ளாது அதேவேளையில் அங்கு கிடைக்கக்கூடிய சிவில் வெளியினைப் பயன்படுத்தி தனிப்பட்ட முறையிலும் மற்றும் புலம்பெயர் மக்கள் மத்தியில் இயங்கும் பல்வேறு வகையிலான அமைப்புக்கள் தாயகத்தில் மேற்கொண்டுவரும் கல்வி, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகள் ஊடாக தாயக மக்களின் சமூக பொருளாதார வாழ்வினைப் பலப்படுத்துவது. மற்றையது, அனைத்துலகரீதியிலான அமைப்புக்களுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி நமது தாயக மக்களுக்குச் சென்றடைய வேண்டிய உதவிகள் சென்றடைவதில் அனைத்துலக சமூகத்தினைக் கூடுதலாக ஈடுபடுத்துவது.

புதிய ஆண்டில் தனது முயற்சிகளை வேகப்படுத்;த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளுடன் தம்மை இணைத்துக் கொள்ள முன்வருமாறு தமிழீழ, தமிழக, உலகத் தமிழ் மக்களிடம் நாம் இன்றைய தினத்தில் வேண்டுதல் செய்கிறோம்.

எம்முடன் தொடர்பு கொள்வதற்கான மின்னஞ்சல் முகவரி: pmo@tgte.org

நன்றி

விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்

| | Read More »